Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவு அச்சம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவு அச்சம்

33

ஏழில் ஒரு கரு சிதைகிறது. அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வாரங்களில் சிதைந்து போகின்றன. குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குக் கருச்சிதையும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு பத்தில் ஒரு கரு வீதம் சிதையலாம். 35 வயதுக்கு மேலானால் ஐந்தில் ஒரு கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உதிரப்போக்கும், தசைப்பிடிப்பும் ஏற்பட்டு, அதன்பிறகு ரத்தப்போக்கு நின்ற சுமார் 50 விழுக்காடு பெண்களுக்கு கர்ப்பம் எந்தவித சிரமமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். ஆனால், அதிக ரத்தப் போக்கும், தீவிரமான தசைப்பிடிப்பும் மாறும் சூழலில் கருச்சிதைவைத் தவிர்க்க இயலாது. இதை தவிர்க்க இயலாத கருச்சிதைவு என்பர்.

பரிசோதனையில் கருப்பைக் கழுத்து சிதைந்து திறக்க ஆரம்பித்திருப்பதையும், கருவானது, கருப்பைக் கழுத்தின் வெளிப்புறத் திறப்பு வழியாகத் தொங்கிக் கொண்டிருப்பதையும் மருத்துவரால் கண்டறிய இயலும். இந்த நிலையில் எந்த சிகிச்சையாலும் இத்தகைய கருச்சிதைவை தடுக்க இயலாது.

* மூன்று மாத கர்ப்பத்தில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இதற்கு அச்சுறுத்தும் கருச்சிதைவு என்று பெயர். இந்த நிலையில் உதிரப்போக்கு குறைவாகவோ அல்லது மாதவிலக்குக் காலத்தில் ஏற்படுவதைப் போன்றோ இருக்கும். ஒரு நாளைக்கு சில மணி நேரம் வரையிலோ அல்லது சில நாட்கள் வரையிலோ கூட உதிரப் போக்கு இருக்கலாம். இந்த நிலையைப் பார்த்து கர்ப்பம் கலைந்துவிட்டதாகப் பலர் நினைத்துக் கொள்வார்கள்.

உடனடியாக மருத்துவரை அணுகினால், இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடுவார். புறகர்ப்பம், குழந்தை சரியாக உருவாகாத நிலை போன்ற சில நிலைகளில் இத்தகைய அச்சுறுத்தும் கருச்சிதைவு உண்டாக வாய்ப்பிருக்கிறது.