Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்திற்கு பின் தாம்பத்தியத்தை பற்றி ஆச்சர்யப்பட வைக்கும் 10 உண்மைகள்

கர்ப்பத்திற்கு பின் தாம்பத்தியத்தை பற்றி ஆச்சர்யப்பட வைக்கும் 10 உண்மைகள்

18

குழந்தை பிறந்த பிறகு தாம்பத்தியம் என்பது அசிங்கமான ஒன்றல்ல. நீங்கள் தாய்மை அடைந்திருப்பதால், உங்கள் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். பெரும்பாலான கணவர்கள் மனைவிகளின் இந்த உடல் மாற்றங்களை விரும்புகிறார்கள். எனவே, நீங்கள் இதை நினைத்து கவலை பட தேவையில்லை. நீங்கள் முன் கூட்டியே உடலுறவிற்கு திட்டமிட வேண்டும். இது உங்கள் இருவரையும் வசதியாக உணர செய்யும்.

1 பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடலில் ஹார்மோன்களால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இதில் பெரிதும் குறிப்பிடத்தக்க மாற்றம், அவர்களது இடுப்பெலும்பில் ஏற்பட்டிருக்கும். இதில் உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர கூடிய, முக்கியமான ஹார்மோன் மாற்றம் இடுப்பெலும்பு விரிவடைந்திருப்பது. இது நீங்கள் சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் மூலமாக என எந்த வழியில் குழந்தை பெற்றாலும், உங்கள் இடுப்பெலும்பு கட்டாயம் விரிவடையும். இது உங்கள் கணவருடனான தாம்பத்திய வாழ்க்கையில் முழுமையடையாத படி இருக்கும்.

2 அதிக அளவிலான பெண்கள் பிரசவத்திற்கு பின்னான உடலுறவில் கடுமையான வலியை அனுபவிக்கிறார்கள். இது பிரசவத்திற்கு பின் பெரும்பாலான பெண்கள் சந்தித்த ஒன்று தான். நீங்கள் இதை தீவிரமாக உணர்ந்தால் அல்லது அசௌகரியமாக தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

3 பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம், உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை கைவிட செய்யும். இது புதிதாக தாயான அனைத்து அம்மாக்களும் சந்தித்த ஒன்று தான். அவர்களால் குழந்தைகள் மற்றும் கணவருடன் இருப்பதாக உணர முடிவதில்லை. இது போன்ற சூழ்நிலையில் வாழ்கை துணைவர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால், தாம்பத்தியத்திற்கு அவர்களை வற்புறுத்த வேண்டாம்.

4 நீங்கள் தாய்ப்பாலூட்டும் போதிலும் கூட கருத்தடைகளைப் பயன்படுத்தவும். இல்லையேல் மீண்டும் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் தாய்ப்பால் கொடுப்பது கருத்தடையாக செயல்படாது.

5 பிரசவத்தின் பின் உங்களது முன்னுரிமையில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிலும் உங்கள் தாம்பத்திய வாழ்கைக்கு மிக குறைத்த இடமே வழங்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான பெண்கள் தாம்பத்திய வாழ்வில் மூழ்கிவிடுகிறார்கள். தாம்பத்யமும் அதிக முன்னுரிமை பெரும், ஆனால் அதற்கு சில காலம் ஆகும். இதற்கு நீங்களும் உங்கள் கணவரும் மிகவும் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

6 நீங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, அதிக அளவில் தாய்ப்பால் உங்கள் மார்பகத்தில் இருப்பதை கண்டுபிடிப்பீர்கள். இது பொதுவாக எல்லா பாலூட்டும் தாய்களும், தாம்பத்தியத்தின் போது அதிகப்படியான பாலை வெளியேற்றும். இதை நினைத்து கவலையடைய தேவையில்லை. இது குறித்து உங்கள் கணவர் மோசமாக உணர்வாரோ என்று நீங்கள் கவலையடைய தேவையில்லை.

7 நீங்கள் இப்போது குணமடைந்திருப்பீர்கள். பெற்றோராக உங்கள் தாம்பத்திய வாழ்கை மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும். உங்கள் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், குறிப்பாக உங்கள் அந்தரங்க பகுதிகளில். இதனால் நீங்கள் தாம்பத்தியத்தை தவிர மற்றவைகளில் மகிழ்ச்சியை உணரமாட்டீர்கள். குழந்தை பிறப்பிற்கு பின் உங்கள் உடலில் பல உணர்வுகள் தூண்ட பட்டிருக்கும். இதனால் முன்னைவிட இப்போது தாம்பத்தியத்தை மகிழ்ச்சியான ஒன்றாக உணர்வீர்கள்.

8 குழந்தை பிறப்பிற்கு பிறகு எப்படி வேலைகளை அட்டவணைப்படுத்தி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொண்டிருப்பீர்கள். அந்த நாட்களின் முடிவில் தாம்பத்தியத்தை பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் உறங்கிவிடுவீர்கள். இருப்பினும், மதிய நேரங்களில் சுறுசுறுப்பாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் விழித்துக்கொள்ளும்.

9 உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் ஹார்மோன் மாற்றத்தால், உங்கள் உடல் இயற்கையாய் உற்பத்தி செய்யும் அந்தரங்க உறுப்பு வெளியேற்றத்தை ஏற்படுத்தாது. இது உங்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தலாம். திரவ பொருள் சார்ந்த மசகு எண்ணையை உபயோகியுங்கள்.

10 சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தால் தான் தாம்பத்தியம் வலி நிறைந்ததாக இருக்கும் என்று அர்த்தமில்லை, சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற அம்மாக்களும் தாம்பத்திய நேரத்தில் வலியை உணர்ந்திருக்கிறார்கள். உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் ஹார்மோன் மாற்றத்தால் தான் வலி ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் தாய்ப்பால் போன்றவற்றால் ஏற்படுகிறது. உங்களுக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள்.