Home பாலியல் உடல் உறவில் பெண்களுக்கு உச்சக் கட்டம் எப்படி ஏற்படுகிறது

உடல் உறவில் பெண்களுக்கு உச்சக் கட்டம் எப்படி ஏற்படுகிறது

29

romantic-couple-in-bedroom-300x199-300x199-615x408ஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.
நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்தரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம். ஆபாசமாக கருதுபவர்கள் இதை படிக்க வேண்டாம். அறிவியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் மட்டும்
தொடருங்கள்! பிளீஸ்… பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனி த்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம் ( urethral opening). மற்றது மாத விடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம் vaginal opening). இரண்டாவதாக உள்ள மாத விடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் கைமண் (hymen)எனப்படும் ஒரு மென் சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடு விலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாத விடாய் வெளியேற்றம் நடைபெறும்.
முதன் முதலில் உடலுறவில் ஈடுபடும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை. சில பெண்களுக்கு இந்த ஹைமண் இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம். சில பெண்களுக்கு இந்த ஹைமண் உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம். அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த ஹைமண் பாதிக்கப்படலாம்.
சுய இன்ப செயற்பாட்டில் ஈடுபடும் பெண்களிலும் இந்த ஹைமண் உடைந்து விடலாம். ஆமாம்! பெண்களும் இப்படிப்பட்ட சிந்து விளையாட்டுகளை நடத்துவது உண்டு! சில பெண்களிலே இந்த ஹைண் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப்படாமல் இருக்கலாம்.

ஆகவே ஹைமண் மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித் தன்மையை நிரூபித்து விட முடியாது. எனவே முதல் இரவில் வேண்டாத எண்ணங்களையும், பரிசோதனைகளையும் செய்து கொண்டு அந்த இனிமையான நேரத்தை கசப்பாக்கி கொள்ளாதீர்கள்!! என்பதை மட்டும் வேண்டுகோளாக வைப்பது கடமை!

*பெண்களுக்கு உடல் உறவில் உச்சக் கட்டம் எப்படி ஏற்படுகிறது?
*புணர்புழையின் முன் பகுதிச் சுவ ரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறையோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங் கோடு கருப்பையும் சுருங்கி விரியும். வேகமான உச்சநிலையில் ஆசன வாயும் சுருங்கி விரிவதை உணரலாம். மூன்று முதல் 12 துடிப்புகள் 0.8 வினாடி இடைவெளியோடு புணர்புழையில் வெளிப்படும். மூன்று முதல் 10 வினாடிக்குள் துடிப்புகள் வெளியாகும்போது பிற்பகுதி துடிப்பில் வேகம் குறையும். ஆர்வம் உள்ள பெண்களுள் சிலருக்கு 25 துடிப்புகள் 42 வினாடிகள் வரை நீடித்து இருக்கும். ஆண் உச்சநிலையில் விந்தை வெளியேற்றும் நேர அளவே புணர் புழையின் துடிப்பும் இருக்கிறது.
இதன் பிரதிபலிப்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பரவிப் படர்ந்து வெவ்வேறு குறிகளுடன் பிரதிபலிக்கிறது. முதுகை வளைத்து பிறப்புறுப்பை ஆணுறுப்போடு இணைப்பர். கை, கால்களை நீட்டி விரிக்கும்போது, முகம், கழுத்து, தோள் சதைகள் விரைத்து, முகம் விகாரமாகி உப்பி, கண் செருகிவலிக்குள்ளானது போல நினைவிழந்த நிலையடைந்து பெரு மூச்சு விடும் போது ஆனந்தப்பரவச நிலையில் இருப்பர். மார்பும், அடி வயிற்று சதைகளும் விரைப்பு அடைவதைக்காணலாம். வியர்வை வெளியாகி தோல் பகுதி ஈரமடையும். அபூர்வமாக சிலர் காக்கை வலிப்பு வந்தவர் போன்றும், ஓல மிட்டும், கடித்துப் பிராண்டியும், திட்டியும் உச்சநிலையில் விசித்திரமாக இருப்பர்.
பெண் உச்சநிலை இன்பத்தை அனுபவிக்கிறார் என்பது இளமைக் கால சூழ்நிலை, வளர்ப்பு முறைகளால் நிர்ணயமாவது என ஆய்வில் தெரியவந்துள்ளது. புது மனைவி உச்ச நிலையில் இன்பம் அடைய முயன்று பழக வேண்டிய து அவசியமாகும். இதற்கு பல வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். மாறி வரும் சூழ்நிலையில் ஒரு சில பெண்கள் முதலிரவிலேயே கூட உச்சநிலை இன்பத்தை அடைந்து விடுகின்றனர்.