Home பாலியல் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் நினைக்கும் உடலுறவு ரகசியங்கள்!!!

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் நினைக்கும் உடலுறவு ரகசியங்கள்!!!

25

01 (1)உரையாடல் பல பெண்களின் பாலுணர்வை தூண்டிவிடும். அவர்களைப் பொறுத்த வரை, உரையாடுவதும், தங்கள் மீது அன்பு கொள்வதும் மிகவும் முக்கியம். நடக்கும் போதோ அல்லது ஓய்வாக இருக்கும் போதோ நல்ல உரையாடலில் ஈடுபட்டால், பாலுணர்வை அது சிறப்பாக தூண்டிவிடும். அவளை எந்தளவிற்கு விரும்புகிறான் என அந்த ஆண் கூறும் போது, நெருக்கமான தருணங்களில் மனதளவிலும் கூட அவன் அவளுடன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு கிடைக்கும்.

ஒரு தம்பதி நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் போது, அந்த பெண்ணின் மீது அந்த ஆணுக்கு ஈர்ப்பு குறைந்து வருவதை போன்ற உணர்வை அந்த பெண் பெறுவாள். இதனால் சில பெண்கள் இருட்டில் தான் தங்கள் ஆடைகளை களைவார்கள். அக்கறையுள்ள, அன்பான ஆண்களால் இத்தகைய பதற்றங்களை உணர முடியும். அவள் அசத்தலாக இல்லாத போது, அவள் அப்படி இருப்பதாக கூறி பொய் சொல்ல வேண்டியதில்லை. அதேப்போல் அவர் ஈர்க்கும் வகையில் இல்லை என்றும் கூற வேண்டியதில்லை. அவளிடம் எது அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறதோ, அதை பாராட்டினாலே போதுமானது.

மறுபுறம், ஆண்களோ வாழ்க்கையின் அழுத்தம் நிறைந்த விஷயங்களை தனியாக பிரித்து அதனை கையாளுவார்கள். அதனால் பாலியல் நடவடிக்கைகளை அவர்கள் தனியாக கையாளுவார்கள். ஆனால் பெண்களுக்கோ அவர்களின் பாலுணர்வு திருப்திகரமாக அமைய, அன்றைய நாளில் அவர்களுக்கு நல்ல உணர்வுகளும், அனுபவங்களும் ஏற்பட வேண்டும். படுக்கையில் அவள் எப்படி ஈடு கொடுக்கிறாள் என்பது, தன் அன்புக்குரியவர் தன்னை படுக்கையில் எப்படி நடத்துகிறார் என்பதை பொறுத்து அமையும். கவனிக்காமல் இருத்தல், கடுமையாக பேசுதல், முரட்டுத்தனமாக தோணி, காயப்படுத்தக்கூடிய வார்த்தைகளை பிரயோகித்தல் மற்றும் விமர்சனம் செய்தல் போன்ற செயல்கள், படுக்கையில் பெண்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், உணர்ச்சியையும் குறைத்து விடும்
ஒரு பெண்ணுக்கு உச்சக்கட்ட பாலுணர்வு சுகத்தை அளிப்பதே நல்ல ஆண்மகனுக்கு அடையாளம் என பல ஆண்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட தருணங்கள் இருந்தால் சிறப்பாக தான் இருக்கும். ஆனால் அது எப்போதுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயமல்ல. புணர்ச்சி பரவச நிலையை அடைய வேண்டும் என்ற அழுத்தத்தை பல நேரங்களில் தங்களின் துணையோ அல்லது தாங்களே கூட கொண்டு வருவார்கள். சில நேரங்களில் புணர்ச்சி பரவச நிலைக்கு பதிலாக, உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் ஈடுபடுவதில் கூட பெண்கள் அதிகமாக விரும்புவார்கள்.
விளையாட்டுத்தனம் என்பது ஒரு சிறந்த பண்பாகும். உடலுறவு என வந்து விட்டால் பல ஆண்கள் மிகவும் சீரியஸாகி விடுவார்கள். சிரிப்பதற்கு, காதலுடன் கூடிய குரும்பை செய்வதற்கு, குதூகலமாக இருப்பதற்கு அவர்கள் மறந்து விடுவார்கள். விளையாட்டுத்தனமும், அமைதியான மனமும் நெருக்கமான தருணங்களை மகிழ்வானதாகவும், அமைதியானதாகவும் மாற்றும். இதனால் சிறப்பாக செயலாற்ற வேண்டுமே என்ற டென்ஷனை இருவரிடம் இருந்தும் போக்கும்.