Home பாலியல் ஆண்கள், உடலுறவில் ஈடுபடுவதற்குமுன், மருத்துவரிடம் செல்ல வேண்டும்! ஏன்?

ஆண்கள், உடலுறவில் ஈடுபடுவதற்குமுன், மருத்துவரிடம் செல்ல வேண்டும்! ஏன்?

41

images (2)ந‌மது உடலில் வேறு எந்த உறுப்பு பாதிப்புக்கு உள்ளாகும் அதை நாம் தைரியமாக மருத்துவரிடம் சென்று காண்பித்து அதற்கான உரிய சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, அந்த பாதிப்பில் முழுவதுமாக விடுபடு வோம்
ஆனால் ஆண்களில் பலருக்கு தங்களது ஆண் குறி தொடர்பான விஷயங்களில் மிகுந்த வெட் கப்படுவது, அல்ல‍து தனக்கு ஏதோ பெரிய பாதி ப்பு வந்துவிட்ட‍து போலும் எண்ணிக்கொண்டு, இதனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று இவர்களாகவே ஒரு கணக்கு போட்டு மனதில் வைத்துக்கொண்டு பயந்து பயந்து வாழ்ந்துவருகிறார்கள்.
கை, கால், கண், மூக்கு போன்றே உங்களது ஆண் குறியும் ஒரு உடலுறுப்பு தானே இதில் எங்கே வந்தது வெட்கமும் பயமும்!

பொதுவாக சில ஆண்களின் ஆண்குறியில் ஒரு விதமான துர்நாற்றம் வீசும் இது ஒரு சாதாரண பாதிப்புதான் இதற்கு காரணம் அவர்களுக்கு ஏதோ பங்கசுத்தொற்றோ அல்ல‍து வேறு வித மான பாதிப்பு இருப்பதாகவோ அவர்கள் எண் ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் பங்கசுக்க ளின் வீரியத்தன்மை சாதாரண‌மானவர்களில் அவ்வளவு எளிதாக நோயினை ஏற்படுத்தப் போதுமானதல்ல.அது வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் , மற்றும் வேறு நீண்ட கால நோயி னால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்திகுறைந்தவர்களிலேயே நோயி னை ஏற்படுத்தும் .மேலும் பங்கசுக்க ளால் துர் நாற்றம் ஏற்படுவ துமில்லை.

இந்த துர்நாற்றம் ஏற்படுவது பாக்டீரி யாக்களின் தொற்றுக்களால் ஏற்படலாம். எல்லாவிதமான பக்டீரியாக்க ளும் பூரணமாகக் குணப்படுத்தப்படலாம். மேலும் அவர்களின் ஆணுறுப் பிலே காயங்கள் அல்லது தழும்புகள் மற்றும் வலி ஏதாவது இருந்தாலும் அவர்கள் செய்ய வேண்டியது. ஒரு மருத் துவரை அணுகி அதற்குண்டான சரியான சிகிச்சையை மேறகொண்டு அந்த பாதிப் பிலிருந்து சில வாரங்களிலே பூரணமாக விடுபடலாம். பின் யாதொரு அச்ச‍மும் இன்றி அவர்கள் திருமண பந்தந்தத்தில் இணை ந்து கொள்ளலாம்.
கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் மருத்துவரிடம் செல்லுங்கள். உங்களுக்கு அப்படியான தொற்றுக் கள் இருப்பின் அவை உங்கள் துணைக்கும் தொற்றிக் கொள்ளலாம்.