Home பெண்கள் அழகு குறிப்பு ஒரே வாரத்தில் கருவளையத்தை எப்படி விரட்டியடிப்பது என தெரியுமா..?

ஒரே வாரத்தில் கருவளையத்தை எப்படி விரட்டியடிப்பது என தெரியுமா..?

26

கண்களைச் சுற்றி கருவளையம் வந்து விட்டாலே முகத்தின் அழகு கெட்டு விடும். வேலைப்பழு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஹோர்மோன் மாற்றங்கள் என்பன இந்த கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக அமைகிறது.

இந்த கருவளையத்தை எவ்வாறு விரட்டியடிப்பது? இதற்கு ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துவது என்பதே சிறந்த பதில். ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தி எவ்வாறு கருவளையங்களை போக்குவது எனப் பார்ப்போம்.

01. இரவு தூங்க செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெயுடன் பால் கலந்து கண்களின் அடிப்பரப்பில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும்.

02. இரவு தூங்க செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெய்யை கண்களுக்கு அடியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவுவது நல்ல பலனை கொடுக்கும்.

03. ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்தும் தேய்த்து வரலாம். இரண்டு எண்ணெய்களையும் கண்களுக்கு அடிப்பரப்பில் தடவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். காலையில் கழுவுங்கள். இதேபோல் பாதாம் எண்ணெயுடன், ஆமணக்கு எண்ணெயை சேர்த்தும் பயன்படுத்தலாம்.