Home அந்தரங்கம் ஆண்கள் ஒருநாளைக்கு பெண்களோடு எத்தனைமுறை இன்பம் கொள்ளலாம்

ஆண்கள் ஒருநாளைக்கு பெண்களோடு எத்தனைமுறை இன்பம் கொள்ளலாம்

149

ஒரு நாளைக்கு எத்தனை முறை உறவில் ஈடுபடலாம் என்று மருத்துவ பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமணமானவர்களில் நான்கு சதவீதமானவர்கள் ஒவ்வொரு நாளும்
உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஆவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள் வருடத்திற்கு 150 முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.

நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது மருத்துவர் தீர்மானிப்பதல்ல. எத்தனை முறை உறவு கொள்ள வேண்டும் என்பது நீங்கள் உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்க வேண்டியது. இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை.

பெண்களின் உடல் ஆண்களின் உடலைப்போல அல்ல.. மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும். இதனால் அவர்களின் உடல் நிலையும் காம உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே இருக்கும்.

ஆண்களுக்கு அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் எளிதாக உறவில் ஈடுபட்டு விட முடியும். ஆனால் பெண்களுக்கு அது அவ்வளவு சாத்தியமில்லை. இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்.

பெண்களின் இந்த உடல் நிலை, மனநிலை மாற்றம், கடவுள் & இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.

அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இது கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும்.

அதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை, உடலுறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும்.

இது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் மிக முக்கியமானதாகும்.

இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மனநிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.

அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கற்பழிப்புக்கு கூட சமமானது..

ஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு சமமான குற்றமாகவே கருதப்படும்.

எனவே தினம் உடலுறவு என்பதை தவிர்த்து உங்களின் மனநிலையும் துனைவியின் மனநிலையும் ஒத்துபோகும்போது செயல்பட்டால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடையலாம்.