Home பெண்கள் தாய்மை நலம் கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்

கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்

59

கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் – ஓர் அலசல்
கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற் றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும்
பிரசவமான ஆறு கிழமைகளுக்குள் பழையபடி முன் போல் மாறிவிடுகின்றன. உங்கள் உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் (பிரதானமாக) கருக் கொடியிலி ருந்து (Placenta) சுரக்கும் இயக் கு நீர்களினால் ஏற்படுவன. இம் மாற்றங்களில் பெரும்பாலான வை கருத்தரிப்பு ஏற்பட்ட உட னேயே தொடங்கி கர்ப்ப காலம் முடிவாகும் வரை தொடர்ந்து நடந்து கொண் டேயிருக்கும். இ வ்வாறு ஏற்படும் மாற்றங்களில் அதி கமானவை பெண் பாலுறு ப்புகளில் ஏற்படும் மாற்றங்களே.
கருப்பை (Uterus)
இது சாதாரண பெண்களில் (கரு அற்ற நிலையில்) 50 -60 கிராம் எடையுடைய அநே கமாக கெட்டியான ஒரு உறுப் பாக உள்ளது. கருத்தரித்த பின்னர் இது மெலிவான ஒரு உறுப்பாகமாறி ஒருகுழந்தை. கருக்கொடி குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்கொடி என்ப வற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பாகின்றது. அதன் முழு எடை 1 கி;.கிராமிற்கு மேல் இருக்கும். இதன் உள்ளவு 500-1000 தடவை கருஅற்ற நிலை யிலிருந்து கூடியுள்ளது! இவை பிரதானமாக கருப்பையிலுள்ள திசுக்கள் நீள்வதாலும் மிகை வளர்ச்சியினா லும் (இயக்கு நீர்க ளினால்) ஏற்படுவன. வழக்க மாக தலைகீழாக வைக்கப்பட்ட பேரிக்காய் உருவ த்திலிருந்து உருண்டையான உருவமாக 3ம் மாதத்தி லும் நீள் வட்டமாக கர்ப்ப முடிவிலும் இருக்கும்.
கருப்பை வாய் (Cervix)
இது கரு அற்ற நிலையில் இருக்கும் கெட்டியான தன் மையிலிருந்து மெதுவான தன்மையை அடைகின்ற து.இதன்நிறமும் சற்றுநீல நிறச் சாயலை அடைகின் றது. இவை இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஏற்படுவ ன. அது மட்டுமன்றி கருப் பை வாய் முழுவதும் ஊதுகின்றது. கருத்தரிப்பு ஏற் பட்ட உடன் ஒருவித சளிக்கட்டி (Mucus) இதன் வாயை அடைகின்றது. இது பிரசவம் தொடங் கிய பின் வெளியேறுகின்றது. இது சற்று இரத்தத்துடன் சேர்ந்து பிரசவத் தொடக்கத்தில் இரத்தக் கசிவாக ( Show)வெளி வருகின்றது. கர்ப்பகால முடிவில் கருப்பை வாய் இன்னும் மெதுமையாகி, இலகுவாகவிரிவடை யக் கூடியதாக மாறுகின்றது. இதனா ல் பிரசவத்தின் போது முழுமையாக விரிவடைந்து குழந்தை வெளியேற உதவுகின்றது. இம் மாற்றங்கள் எல்லாம் பிரதானமாக கருப்பை இயக்கு நீரினால் ஏற்படுகின்றன.
யோனிக்குழல். (Vagina)
இதன் உள் வரி மென் சவ்வு (Mucosa) கருத்தரித்த பின் னர் கடினமாகிறது. இதன் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. இதன் விளைவாக இதிலிருந்து சுரக்கும் திரவம் (Secretions) அதிகரிக்கின்ற து. இதனால் யோனிக்குழலின் நிற மும் மாற்றமடைகின்றது. சளி கட்டி படுதல் யோனிக்குழலின் அணுக்க ள் விரிவடைதல் அணுக்களைச் சே ர்த்து வைக்கும் இணைப்புத் திசுக்கள் (Connective tissues) தளர்தல் என்பன மூலம் யோனிக்குழலின் நீளம் அதிகரிக்கின்றது. அத் துடன் இதன் சுவர்கள் விரி வடையவும் உதவுகின்றது. இவ்வாறு விரிவடைவதனா ல் இதன் மூலம் குழந்தை (சில வேளைகளில் 4-5 கி.கி குழந்தைகள் கூட) பிறக்கக் கூடியதாக உள்ளது.
கருப்பை வாயிலிருந்தும் யோனிக் குழலிருந்தும் உற் பத்தியாகும் திரவங்கள் கூடுதலால் கருவுற்ற பெண்க ளில் அதிகம் வெள்ளைபடுதல் ஏற் படுகின்றது. “வெள்ளை படுதல்” என்பது யோனிக்குழல் மூலம் வரும் திரவத்தை குறிப்பது. இது சா தாரண சுரப்பு கருவுற்றிருக்கும் போது ஏற்படும் மாற்றங்களால் கூடுதலாக ஏற்படுகின்றது. இதனா ல் ஒரு தீங்கும் ஏற்படாது. இது வெள்ளை நிறமாகவும் சற்றுத் தடி ப்புள்ளதாகவும் இருக்கும். இது அமி லத் தன்மை வாய்ந்தது. யோனிக்குழலில் உள்ள ஒரு தீமையற்ற லக்டொபசிலஸ் (Lactobacillus) என்னும் நுண் கிருமியால் ஏற்படுவ து. சில வேளைகளில் மாற்றங்களால் துன்பம் விளைவிக்கக் கூடிய கிரு மிகளும் யோனிக்குழலில் ஏற்படும். இவை கருத்தரிப் பின்போது ஏற்படும் மிதமிஞ்சிய யோனி க்குழல் கிருமி நோய்களுக்குக் காரண மாகின்றன. (இவற்றைப் கற்றி “கருத்த ரிப்பின போது ஏற்படும் நோய்த் தொற் றுக்கள்” என்ற அத்தியாயத்தில் பார்க்க வும்.
மார்பகங்கள். (Breasts)
மார்பகங்கள் பெரிதாகி அவற்றின் முலைக் காம்புகளு ம் பெரிதாகின்றன. அவற்றின் நிறமு ம் மாற்றமடைகின்றன. (மேலும் கரு மை அடைகின்றன.) அவை சற்று அதி கமாக நிமிர்ந்தும், சிலிர்ப்பும், தொடு வலியுணர்ச்சியும் ஏற்படுகின்றன. முலைக் காம்புகளிலிருந்து ஒரு வகையான திரவம் ஊறும். இதை களி ம்புப் பால் அல்லது சீம்பால் என்று கூறுவார். இது 12 கிழமைகள் மட்டில் தொடங்கும். மார்பகங்களை சற்று அழுத்தினால் இத்திரவத்தை வெளியேற்றலாம்.
இருதயமும் இரத்தக் குழாய்களும்(Heart and Blood Vessels)
கருத்தரிப்பு முடிவடையும் காலத்தில் (பிரசவத்திற்கு முன்னர்) உங்கள் இரத் த ஓட்டம் 40 வீத மட்டில் அதிகமாகி இருக்கும். இது உங்கள் பெருக்கும் கருப்பை இரத்தக் குழாய்கள் என்பவற் றைத் தாக்குப்பிடிப்பதற்காக ஏற்படுகி ன்றது. உங்கள் இரத்தத்திலுள்ள சிவப் பணுக்களும் அதிகரிக்கின்றன (1ஃ3 பங்கு). இது பிரதானமாக குழந்தைக்கு தேவைப்படும் பிராண வாயுவையும் இரும்புச் சத்தையும் கொண்டு செல்வதற்காகவே ஏற்படுகின்றது.
சாதாரண கருத்தரிப்பின் போது உங்களுக்கு தேவையான இரும் புச்சத்து 1000மி.கி அளவுடைய து. இது கூடிய சிவப்பணுக்கள் குழந்தைஇ கருக்கொடி என்பன மட்டுமன்றி பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த ஒழுக்கையும் தாக்குப் பிடிப்பதற்காகத் தேவைப்படுகின்றது. (பிரசவத்தின் போது 500 மி.லீ அளவுள்ள இரத்தம் சாதாரண மாக வெளியேறும்.) இரும்புச் சத்தை போதிய அளவு எடுக் காவிட்டால் (சாப்பாட்டு மூல மோ அல்லது மாத்திரை மூல மோ) உங்களில் இரும்புச் சத்துக் குறைவான இரத்த சோகைஏற்படும். இரத்தத்தை க் கட்டி படச் செய்யும் பொருட்களும் (உறைதல் கார ணிகள் – (Clotting factors) அதிகமாகின்றன.
இதனால் கருத்தரிப்பின போ து இரத்தம் அதிகமாக ஓடுவ தற்கும் கட்டிபடுவதற்கும் இடையிலுள்ள நிலை மிக நுண்மையான சமப்படுத்தல் சற்று மாறுபட்டு இரத்தம் கட்டிபடும் பக்கமாக மாறுகின் றது. இதன் காரணமாக கருத் தரிப்பின் போதும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள்ளும் இரத்தக் கட்டி ஊந்படுதல் இது இரத்தக் குழாய்களை அடைத்தல் இக்கட்டி பிரிந்து போய் நுரையீரலிலுள்ள நாளங்களை அடைப்ப து என்பன அதிகரிக்கி ன்றன. கருத்தரிப்பில் ஏற்படும் மாற்றங்களை தாங்குவதற்காக இருத யமும் இரத்தக் குழாய் களும் அளவுக்கு சற்று அதிகமாகவே மாற்றங் கள் அடைகின்றன. இரத்த ஓட்டம் 40-50 வீதம் அதிக ரிக்கின்றது. இருதயத்துடிப்பு 1 நிமிடத்திற்கு 10-15 அதி கரிக்கின்றது. இக்கூடிய இரத்த ஓட்டம் இரத்தக் குழா ய்களில் எற்படும் புற எதிர்பாற்ற லால் சமப்படுத்தப்படுகின்றது. கருத்தரித்தலின்போது ஏற்படும் இரத்த அழுத்தநோய்கள் உள்ளவ ர்களை தவிர்த்து மற்றவர்களில் இரத்த அழுத்தத்தில் அதிக மாற் றம் ஏற்படுவதில்லை.
உடம்பின் அதிகமான பாகங்களு க்கு பிரதானமாக சிறுநீரகங்களு க்கும் உடம்பை மூடியிருக்கும் தோலிற்கும் இரத்த ஓட்டம் அதிக மாகின்றது. இது இரத்தக் குழாய்கள் (பிரதானமாக மிகச் சிறிய குழாய்கள்) விரிவ டைவதற்கும் அதனால் உடம் பிலுள்ள சூடு வெளியேறுவதற் கும் ஏதுவாகின்றது. (இச்சுடு உடம்பில் ஏற்படும் வளர்சிதை வினை மாற்றத்தால் ஏற்படுகி ன்றது). இதனால் ஏற்படும் கழி வுப்பொருட்களை சிறுநீரகங்களும் தோலும் வெளியே ற்றுகின்றன. கருத்தரிப்பவர்கள் உடம்பு சூடாய்இருக்கி றது என்று கூறுவதற்கு இது தான் காரணம். அத்துடன் அதிகமாக வியர்ப்பதற்கும் இது காரணமாகின்றது. இத னால் மூக்கடைப்பும் முரசிலி ருந்து இரத்தக் கசிவும் எற்பட க் கூடும்.
சுவாச மண்டலம் (Respiratory System)
பிரிப்புத்தசை (உதரவிதானம், Diaphragm–நெங்சக்கும் வயிற்றுக்கும் இடையில் உள் ள திசுக்களாலான ஒரு சுவர்) மேல் உயர்வதாலும் அதன் அசைவு குறைவதாலும் (வள ரும் கருப்பை தடைசெய்வதா ல்) நீஙடகள் மூச்சுவிடும்போ து உங்களால் மூச்சு விடுதலை உணரக் கூடியதாக உ ள்ளது. சுhதாரணமாக மூச்சுவிடுதல் ஒருவராலும் உ ணரப்படுவதில்லை. (நுரைஈரல் நோயாளிகளைத் தவிர.) நீங்கள் சற்று ஆழமாகவும் மூச்சுவிட வேண்டி ஏற்படும். சிலவேளைக ளில் இதைத் தவறாக மூச்சுக் குழ லிலோ நுரை ஈரலிலோ ஏதோ பிழை என்று பரிசோதனை செய் பவர்களும் உண்டு. ஆனால் இதி ல் ஒரு பிழையும் இல்லை என்ற முடிவையே தரும்.
கர்ப்பத்தினால் ஏற்படும் பிராண வாயுவின அதிகதேவை (சுவாசப் பை சுவாசக் குழல் என்பன வழக் கம் போல் வேலை செய்தாலும்) கிருமி நோய்கள் தொற்றினால் இவை மிகவும் அபாயகரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடு ம்.ஆகவே உடனடியானசிகிச்சை அளிப்பது மிக அத்தியாவசியமா கின்றது.