Home பெண்கள் வயது வித்தியாசமே இல்லாமல் பெண் உறுப்பில் வரும் பாதிப்பால் பாதிக்கப்படும் தாம்பத்தியம்

வயது வித்தியாசமே இல்லாமல் பெண் உறுப்பில் வரும் பாதிப்பால் பாதிக்கப்படும் தாம்பத்தியம்

175

பெண்களின் அந்தரங்கம்:சென்னையில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்து வரும் பிரபல மருத்துவமனையின் புதிய கிளையை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் எச்.வசந்தகுமார் திறந்து வைத்தார்.

இதில், பெண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக தீபெமிலிப்ட்பீ என்ற புதிய லேசர் சிகிச்சை முறையை திரைப்பட நடிகரும், இயக்குனருமான ஆர்.பாண்டியராஜன் துவக்கிவைத்தார்.

இவ்விழாவில் பேசிய சர்வதேச பாலியல் சங்க மீடியா கமிட்டி தலைவரான டாக்டர் ஜெயராணி காமராஜ் கூறுகையில், பாலியல் பிரச்சனைகள் இருக்கும் பெண்களுக்கு சரியான பாலியல் சிகிச்சை கிடைப்பதில்லை என்ற அவல நிலை உள்ளது.

இந்த குறையை போக்கும் விதமாக பெண்களுக்கான பாலியல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தீபெமிலிப்ட்பீ என்ற நவீன கருவியை இந்தியாவிலேயே முதன்முறையாக எங்கள் மருத்துவமனையில் அறிமுகப்படுத்துகிறோம்.

பெண்களுக்கு ஹார்மோன் ஏற்ற, இறக்கம் ஏற்படுவது இயற்கையான மாற்றம் தான். சில சமயங்களில் பெண் உறுப்பில் ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விடும்.

இது வயது வித்தியாசம் இல்லாமல் ஏற்படக்கூடிய ஒன்றுதான். இதனால், அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடமுடியாத நிலை ஏற்படுகிறது. தம்பதியினர் இடையே இணக்கம் இல்லாமல் பிரச்சனை ஏற்பட்டு அது சில சமயங்களில் விவாகரத்து வரை கூட சென்றுவிடுகிறது.

இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்போது நவீன கருவி அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.

சர்வதேச பாலியல் சங்க பாலியல் உரிமைக்குழு உறுப்பினரான டாக்டர் டி.காமராஜ் கூறுகையில் எங்களது மருத்துவமனையில் தீஎலக்ட்ரோ எஜாகுலேட்டர்பீ என்ற நவீனரக சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.