Home உறவு-காதல் கள்ளக்காதல் ஏற்பட இதுதான் முக்கிய காரணம் இதுதான்

கள்ளக்காதல் ஏற்பட இதுதான் முக்கிய காரணம் இதுதான்

518

காதல் உறவு:தற்போதைய வாழ்க்கை முறையில் கள்ள காதல் என்பது தலைவிரித்து ஆடுகிறது. திருமணம் ஆன ஆண்களும், குழந்தை மனைவிகளை மறந்து அருவெறுப்பான சொந்தத்தை தேடி செல்கின்றனர். சில பெண்களும் இதே போன்ற செயல்களை செய்து வருகின்றனர். ஆனால் இது சமூகத்திற்கு தெரிந்தால் அவர்களின் அடுத்த தலைமுறைக்கு ஏற்படும் அவப்பெயரை யாரும் உணருவதில்லை.

எடுத்துக்காட்டாக சென்னை குன்றத்தூர் அபிராமி செய்த செயலால் இரண்டு குழந்தைகள் இறந்தது மட்டுமின்றி, அவர்கள் குடும்பத்தினரை சார்ந்த அனைவரும் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் தற்போது அதிகப்படியாக தனிக்குடும்பத்தில் வசிப்பவர் மத்தியில் நிகழ்கிறது. திருமணம் ஆன உடனே வீட்டில் உள்ள பெரியவர்களை ஒதுக்கிவைத்துவிடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் பெரியவர்கள் தேவை என்பதை மறந்துவிடுகின்றனர்.

பெரியவர்கள் வீட்டில் இருப்பது குடும்பத்திற்கு ராணுவத்தைவிட பெரும் பாதுகாப்பு. அதுமட்டுமின்றி எது நல்லது, எது கெட்டது என்பதை எடுத்து கூறுவதற்கு வீட்டில் பெரியவர்கள் இருப்பது பெரும் அவசியம்.

வேலை நிமித்தம் காரணமாக வெளியூருக்கு சென்று தனி குடும்பம் நடத்திவரும் குடும்பத்தினர் இன்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இல்லாமல் தடுமாறி வருகின்றனர். ஒரு சில தனி குடும்பத்தில் தான் பெரியவர்களை வெறுக்கின்றனர்.

இன்றும் கிராம புறங்களில் உள்ள பெண்கள் உடன் பிறந்த சகோதரனாக இருந்தால் கூட பொது இடங்களில் பேசுவதை தவிர்த்துவருகின்றனர். ஏனென்றால் யாரும் தெரியாதவர்கள் சகோதரனையோ அல்லது தன்னையோ தவறாக பேசிவிடக்கூடாது என்பதற்காக.

ஆனாலும் கிராம புறங்களில் பெண்கள் முழு சுதந்திரமாக தான் இருந்துவருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் கூட்டுகுடும்பத்துடன் வாழ்கின்றனர். எனவே அவர்கள் எப்போதும் காணியமாக வாழ்ந்துவருகின்றனர். வீட்டில் பெரியவர்கள் இருப்பது அனைவர்க்கும் கொடுத்து வைக்கவேண்டிய விஷயம். எனவே யாரும் வீட்டில் உள்ள பெரியவர்களை ஒதுக்கி வைக்காதீர்கள். அப்படி செய்தால் பாதிப்பு உங்களுக்கு தான்.