Home ஜல்சா மகள் முன் தாயை நிர்வணமாக்கி உறவுகொண்ட 17வயது இளைஞன்

மகள் முன் தாயை நிர்வணமாக்கி உறவுகொண்ட 17வயது இளைஞன்

442

ஜல்சா செய்திகள்:வளர்ந்து தலைமுறை சரியான பாதையில் பயணிக்கிறதா? அவர்களுக்கான வழிகாட்டுதல் முறையாக கிடைக்கிறதா? என்று கணக்கிட்டுப் பார்த்தால், விகித வாரியாக நிச்சயமாக பெரும்பகுதியினர் தவறான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்

உலகளாவி பரவிக் கிடைக்கும் இன்டர்நெட்டை போலவே, இந்த பகுதியில் வசிக்கும் இளைய தலைமுறை என்று அடக்க முடியாது, பரவலாக உலக நாடுகளில் வசிக்கும் இளைய தலைமுறையிடம் ஒரு தவறான தாக்கத்தை காண இயல்கிறது. முக்கியமாக போதை மற்றும் கற்பழிப்பு சமாச்சாரங்கள் மிதமிஞ்சிய அளவில் நடந்துக் கொண்டிருக்கின்றன.

தான், தனக்கு வேண்டியது என்று பயணித்துக் கொண்டிருக்கும் இந்த ஒன்வே வாழ்க்கை முறை இவர்களை ஒரு தவறான இடத்திற்கு அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறது.

இதோ! நியூசிலாந்தில் வசித்து வந்த ஒரு இளம் தாய்க்கு ஏற்பட்ட பெரும் அவலம் சர்வதேச ஊடகங்கள் மற்றும் பலத்தரப்பட்ட மக்களை உலுக்கியுள்ளது.

லாரன்ஸ் மெக்குலி! டீனேஜ் கேங் மெம்பர் என்று அறியப்படும் லாரன்ஸ் மெக்குலி எனும் 17 வயது இளைஞன். ஏழு வயது பெண் குழந்தைக்கு தாயான இளம் பெண்மணியை அவமானப்படுத்தி கற்பழித்து வீட்டில் இருந்து பொருட்களை திருடி சென்றிருக்கிறான். அனைத்திற்கும் மேலாக, அப்பெண்மணியின் மகள் முன்னிலையில் தன்னுடன் ஓரல் செக்ஸில் ஈடுபடக் கூறி வற்புறுத்தி அசிங்கப்படுத்தி இருக்கிறான்.

23 வயது! கற்பழிப்புக்கு ஆளான அந்த தாயின் வயது 23. அவரது மகளுக்கு 7 வயதாகிறது. இந்த சம்பவத்தால் அப்பெண்மணி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். கற்பழித்து அவமானப்படுத்தியது மட்டுமின்றி. அந்த பெண்மணியின் கைகளாலேயே தான் வந்து சென்ற தடயங்களையும் அழிக்க செய்திருக்கிறான் லாரன்ஸ் மெக்குலி.

ஜன்னலை உடைத்து! சம்பவம் நடந்த அன்று, அப்பெண்மணியின் வீட்டுக்குள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றிருக்கிறான் லாரன்ஸ் மெக்குலி. மெக்குலி ஹாமில்டன், நியூசிலாந்து பகுதியில் வசித்து வருகிறான். மெக்குலியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

நீதிமன்றம்! ஹாமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மெக்குலி மீது கற்பழிப்பு, செக்ஸுவல் வயலன்ஸ், கடத்த முயன்றது, கொலை மிரட்டல், கொள்ளை மற்றும் குழந்தை மீது தாக்குதல் என பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

ஏமாற்றம்! வீடு புகுந்து கொள்ளையடித்தது மட்டுமின்றி, என் மகள் முன் கற்பழித்து, மோசமான முறையில் என்னை அவமானப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்ற ஒரு குற்றவாளிக்கு வெறும் எட்டாண்டு சிறைத்தண்டனை என்பது போதாதது. இந்த தண்டனை எனக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. நீதிமன்றம் குற்றவாளிக்கு கடுமையான வழங்கி இருக்க வேண்டும். நான் இதே துன்பத்துடன் தான் வாழ்நாள் முழுக்க வாழ போகிறேன் என சோகமாக பாதிக்கப்பட்ட பெண்மணி கூறி இருந்தார்.

கொலை! அவன் கிட்டத்தட்ட என்னையும், என் மகளையும் கொன்றுவிட்டான் என்று தான் கூற வேண்டும். என் சொந்த வீட்டில் இப்படியான சம்பவம் அரங்கேறியது என்பதை, இன்றளவிலும் என்னால் நம்ப முடியவில்லை. நியூசிலாந்து போன்ற பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடக்குமா? என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார் அப்பெண்.

சம்பவ தினம்! இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி அதிகாலை நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பபுகுந்தான் மெக்குலி (அப்போது அவனதுக்கு வயது 17). வீட்டில் இருந்த பணத்தை திருடிய பிறகு படுக்கை அறை பக்கமாக சென்றான் மெக்குலி.

நிர்வாணப்படுத்தி… பாதிக்கப்பட்ட பெண்மணியும், அவரது மகளும் அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். உடனே, உள்ளே பாய்ந்த மெக்குலி தாய் மற்றும் மகளை மிரட்டினான். அவர்களை கத்தினால் கொன்றுவிடுவேன் என்று அதட்டினான். அப்பெண்மணியை படுக்கை அறையில் இருந்து ஹால் வரை இழுத்து வந்த மெக்குலி, ஆடைகளை கழற்ற கூறி நிர்பந்தபடுத்தி இருக்கிறான். இல்லையேல் மகளை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறான்.

கற்பழிப்பு! அப்பெண்ணை மகள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி மூன்று முறை கற்பழித்திருக்கிறான் குற்றவாளி மெக்குலி. மேலும், அவரது முகத்தில் வலுவாக குத்தி, மகள் காணும்படியாக தன்னுடன் ஓரல் செக்ஸில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளான். மகளை கட்டாயப்படுத்தி காண வைத்திருக்கிறான். மேலும், அப்பெண்மணியுடனும் மெக்குலி ஓரல் செக்ஸில் ஈடுப்பட்டிருக்கிறான்.

தடயங்கள்! எல்லா கொடுமைகளுக்கும் பின், அப்பெண்ணை மீண்டும் முகத்தில் குத்தி, தான் வந்து சென்ற தடயங்களை அந்த பெண்ணின் கைகளை கொண்டே அழிக்க கூறிவிட்டு. சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டான் மெக்குலி. குற்றம் நடந்து ஆறு நாட்கள் கழிந்தே போலீஸ் அழைக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதை! குற்ற சம்பவம் நடப்பதற்கு முன், குற்றவாளி லாரன்ஸ் மெக்குலி மெத்தாம்பெடாமைன் (methamphetamine) எனும் போதை பொருளை எடுத்திருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண்மணி தனது இயல்பு வாழ்க்கையை முற்றிலும் இழந்திருக்கிறார். தைரியம், இயல்பு வாழ்க்கை, உறக்கம், சமூகத்தில் சமநிலையுடன் வாழ்க்கை நடத்துவது என எதையும் செய்ய இயலாது பாதிக்கப்பட்டிருக்கிறார்.