Home ஆரோக்கியம் பெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் சலிப்பும்.. சபலமும்..

பெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் சலிப்பும்.. சபலமும்..

96

வாழ்க்கை உறவு:‘இருபத்தைந்து வயதில் திருமணமாகி – முப்பது வயதுக்குள் குழந்தை பெற்ற பெண்கள் – நாற்பது வயதுக்குள் இல்லற வாழ்க்கையில் பக்குவமிக்கவர்களாக மணதொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்’ என்ற கணிப்பு சில நேரங்களில் தவறாகிவிடுகிறது. ஏனென்றால் நாற்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் சில பெண்களுக்கு வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

‘15 வருட மணவாழ்க்கையில், தான் விரும்பியது கிடைக்கவில்லை’ என்ற எண்ணமோ, ‘தனக்கு சரியான அங்கீகாரத்தை கணவர் தரவில்லை’ என்ற கவலையோ அவர் களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் மனைவிக்கு ஏற்பட்டால், கணவர் உடனே விழிப்படைந்து, மனைவியை புரிந்துகொண்டு தீர்வு காண முன்வரவேண்டும். தீர்வு காணாவிட்டால் அது சபலமாக மாறி குடும்பத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கி விடும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படி இரண்டு குடும்பங்களின் இல்லற வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப்போட்ட சம்பவங்களை பற்றி சொல்கிறேன்.

40 வயதுகளில் பெண்களில் சிலருக்கு ஒருவித சலிப்பு ஏற்படுவது ஏன்? அந்த சலிப்பு, சபலமாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு கணவரின் அலட்சிய மனோபாவமே விடையாக அமைந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்னால் ஒவ்வொரு இளைஞரும், பெண்களைப்போல் தங்கள் தோற்றத்திலும், ஸ்டைலிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். திருமணத்திற்கு பின்பு அவர்களுக்கு தங்கள் அழகு சார்ந்த விஷயங்களில் அலட்சியம் வந்துவிடுகிறது.

முறையற்ற உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் போன்றவைகளால் அவர்கள் உடல் அமைப்பும் மாறுகிறது. ஆனால் மனைவியோ எல்லா காலங்களிலும் தன் அழகுமீது அதிக கவனம் செலுத்துகிறாள். அதனால் 40 வயதுகளிலும் மனைவி அழகாகவே தோன்றுகிறாள். ஆனால் கணவரோ அந்த கால கட்டத்தில் தன் தோற்றத்தில் அலட்சியம் காட்டுவதால், அழகில் கணவன்-மனைவி இடையே தோற்ற பொலிவில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.

திருமணமான புதிதில் கணவர், மனைவி மீது முழு கவனமும், அன்பும் செலுத்துவார். மனைவியும், கணவரிடம் அதுபோல் அன்பு செலுத்துவார். குழந்தை பிறந்த பின்பு அவளது கவனம் குழந்தையை நோக்கி அதிகம் திரும்பும். அந்த காலகட்டத்தில் ஆண்கள் வெளிவட்டார நட்புகளை மேம்படுத்திக்கொள்கிறார்கள். பெண்களும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை.

வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, குழந்தையையும் வளர்ப்பதிலே அவர்கள் மூழ்கிவிடுவார்கள். அவர்களுக்கு 40 வயதாகும்போது மகனோ, மகளோ 15 வயதை அடைந்து, அவர்களும் தங்கள் நட்பு வட்டத்தை மேம்படுத்திக்கொள்வார்கள். கணவரும், குழந்தைகளும் அவரவர் நட்பு வட்டத்தோடு பொழுதை கழிக்கும் அந்த தருணத்தில் 40 வயது தாய்க்கு தனிமை ஏற்பட்டுவிடுகிறது. அந்த தனிமையை இனிமையாக்கும் விதத்தில் ஆண் நட்புகள் தலைதூக்குவதுண்டு.

பெண்கள் கலை ரசனைமிக்கவர்கள். வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் அழகை ஆராதிப்பவர்கள். அதோடு மாற்றங்களையும், வித்தியாசங்களையும் எல்லாவிதத்திலும் எதிர்பார்ப்பார்கள். பெண்களின் அத்தகைய எதிர்பார்ப்புகளை ஆண்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். மனைவியின் அத்தகைய எதிர்பார்ப்புகளை கவனிக்காததுபோல் நடிப்பது, அலட்சியப்படுத்துவது எல்லாமுமே அவர்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அப்போது தங்கள் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுபவர்கள் மீது அவர்கள் கவனம் செல்லக்கூடும்.

25 வயதில் திருமணமாகி, 15 வருட தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து 40 வயதை தொடும்போது ஆண்கள் பொதுவாகவே சலிப்படைந்துவிடுகிறார்கள். அந்த காலகட்டத்தில் பெண்கள் சலிப்படையாமல் புதிய எழுச்சியுடன் செயல்பட விரும்புகிறார்கள். மனைவி 40 வயதை எட்டும் போது கணவரும் புத்துணர்ச் சியடைய வேண்டும். மனைவி விரும்பும் மாற்றங்களை தங்களிடம் உருவாக்கிக்கொண்டு ஈடுகொடுத்து வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்.

மனைவியின் திறமைகளை அங்கீகரித்து அவர் களுக்கு வெளி உலக வாய்ப்பு களையும் நல்லமுறையில் உருவாக்கிக்கொடுக்கவேண்டும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் எல்லா வயதிலும், எல்லா பருவத்திலும் பெண்மையின் புனிதத்தை காக்க தயாராக இருக்க வேண்டும். அதுதான் நமது கலாசாரத்தின் ஜீவநாடி.