Home சூடான செய்திகள் பெண்களே! உடலுறவில் நாட்டமில்லையா? உறவில் சிக்கலா?

பெண்களே! உடலுறவில் நாட்டமில்லையா? உறவில் சிக்கலா?

21

தம்பதியர் சிலரின் இல்லற வாழ்க்கையில், இந்த சம்பவம், பிரச்சனை நிகழ்வதுண்டு; அதாவது தாம்பத்ய வாழ்வில் அதிகம் நாட்டமில்லாமல் போவது. இவ்வாறு தம்பதியரிடையே, தாம்பத்யம் குறித்த மன மாற்றம் நிகழ்வதால், தம்பதியரால் ஒன்றாக இணைந்து வாழ்வது என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. மேலும் அவர்களிடையே உள்ள காதல் சிறிது குறையவும், தங்கள் உறவில் மூன்றாம் நபர் நுழையும் பாதிப்பையும் இது ஏற்படுத்துகிறது. இவ்வாறு தாம்பத்தியத்தில் நாட்டமில்லாமல் போவதற்கான காரணங்கள் என்ன அதை எப்படி சரி செய்வது என பதிப்பை படித்து அறிவோம்..!

காரணங்கள்..!
1. இயற்கையாகவே, பெரும்பாலான பெண்கள் உடலுறவில் நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள்; இதனால், அவர்கள் உடலுறவில் உச்சம் அடைதல் நிகழ்வதில்லை. மேலும் பெண்களின் இந்த நடைமுறையால், கணவரின் மனதில் மனைவியின் மீதுள்ள ஆசை மற்றும் காதல் குறைய வாய்ப்புள்ளது.

2. உறவைக் குறித்த தவறான தேவையற்ற பயங்கள், மனப்பான்மை, மூட நம்பிக்கைகள் போன்றவைகளாலும் பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் குறையலாம்..!

3. முதல் முதலான உடலுறவின் போது இரத்தம் வெளிப்படுவதில், குழந்தை பிறப்பில், பிரசவ வலி போன்றவை மீதுள்ள பயங்களாலும் பெண்கள் உடலுறவை தவிர்க்கலாம்.

4. உடலுறவின்போது கணவர் ஒரே மாதிரியான நிலைகளை கையாள்வது, வெறித்தனமாய் நடந்து கொள்வது பெண்களுக்கு உடலுறவில் வெறுப்பை உண்டாக்கலாம்.

5. பெண்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கையில், தங்கள் உடலுறவை யாரெனும்பார்த்து விடுவார்களோ என்ற பயம் ஏற்படும்; இது அவர்களின் உடலுறவு மீதான நாட்டத்தைக் குறைத்துவிடும்.

6. வலிகளை பற்றிய பயமும், குழந்தை பெற்றுக்கொண்டால், உடலுறவு கொண்டால், தன் அழகு கேட்டு விடுமோ என்ற எண்ணமும் அவர்களை உடலுறவு கொள்ள விடாது தடுக்கிறது.

7. கணவரை பிடிக்கவில்லையெனில், குழந்தை பெறுவோமா என்ற பயம் – அதாவது மலடி பட்டம் குறித்த வீணான பயம் மற்றும் பிடிக்காத திருமண உறவில் பெண்களால் மனமுவந்து உடலுறவு கொள்ள முடிவதில்லை..

காரணங்களை வெல்வது எப்படி??
1. கணவரின் அன்பான அணுகுமுறை மற்றும் அன்பு மனைவியின் மனதை மாற்ற உதவும்.

2. சரியான மருத்துவ கலந்தாலோசிப்பு, பெண்களின் பயத்தை போக்க உதவும்.

3. மேலும் மருத்துவரின் வழிகாட்டலால், பெண்கள் மனதை உறுதிபெறச் செய்து, உடலுறவின் உண்மை நிலையை உணர்த்தலாம்.

4. பெண்களில் சிலர் தங்கள் மனதை தாங்களே மாற்றிக்கொண்டால் தான் உண்டு..!