Home இரகசியகேள்வி-பதில் பாலியல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் பதிலகள்

பாலியல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் பதிலகள்

432

Talking, whispering, mouth and ear. iStockphoto received May 22, 2007.
இரகசியகேள்வி-பதில்:கேள்வி: அண்ணன், செக்ஸ் பற்றிய பேச்சு என்றாலே அனேகர் முகம் சுளித்து ஒதுங்குகின்றனர். அதைப் பற்றி பேசக் கூட தயாராக எவரும் இல்லை. செக்ஸ் அல்லது பாலுணர்வு பாவமா? பாலுணர்வே பாவம் என்றால் இறைவன் ஏன் அதைப் படைத்தார்?

தம்பி, இன்று நம் சமூகத்தில் பாலுயல் குறித்த காரியங்களை வெளிப்படையாகப் பேச தயக்கம் இருப்பது உண்மைதான். வருந்தத்தக்கது. இதினாலேயே பல இளம் பிள்ளைகள் முறை தவறிப் போய் விடுகின்றனர். செக்ஸ் தவறோ அல்லது பாவமோ அல்ல, தேவன் தான் அதைப் படைத்தார். அந்த பாலியல் உறவு கணவன் மனைவிக்கிடையேயான ஆத்மார்த்தமான அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், பலுகிப் பெருகவும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு பரிசு ஆகும். ஆனால் இந்த கணவன் மனைவி உறவுக்கு வெளியே வேறு எவருடனுமான பாலுறவு, பாலியல் சார்ந்த நெருக்கம் தவறானதும் பாவமும் ஆகும். பரிசுத்த வேதாகமத்தில் இதை தெளிவாகக் காணலாம். லேவியராகமம் புத்தகத்தில் எவை எல்லாம் தவறான பாலுறவு என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே செக்ஸ் பாவமல்ல, முறைதவறிய செக்ஸே பாவம்.

உலகில் உள்ள உயிரினங்களுக்கு பாலுணர்வு இனப்பெருக்கத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு இன்னும் ஒரு படி மேலானதாக, தன் அன்பை பரிமாறிக் கொள்ளவும், ஈருடல் ஓருயிர் என்பதை உணரும் படியும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமண வாழ்க்கையில் இணையும் போது அவர்களுக்கிடையே சரீரப்பூர்வமான நெருக்கமும் உண்டாக இந்த பாலுறவு உதவுகிறது.

வெளியே மற்றவரிடம் இதைப் பற்றி பேசவேண்டியதில்லை. ஆனால் குறைந்த பட்சம் கணவன் – மனைவி ஒருவரோடொருவர் இதைப் பற்றி வெளிப்படையாக பேசும்போது அந்நியர் வந்து குடும்பத்தில் குழப்பம் உண்டாக்க வழி கிடைக்காது.
———————————————–
செக்ஸ் சிந்தனைகளை மேற்கொள்வது எப்படி?
இன்றைய அதிவேக மொபைல் உலகில் அனைத்தும் விரல்நுனியில் இருக்கையில், இதுபோன்ற சில கேள்விகளுக்கான விடைகாணுவதில் மனிதன் என்றுமே தடுமாறத்தான் செய்கிறான். இன்று இணைய உலகில் நாம் விரும்பாமலேயே தவறான வலைதளங்கள் மற்றும் வீடியோக்கள் நம் பார்வைக்கு வரும் சூழலில் பல விதங்களில் நம் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு அதற்கான வடிகால் என்ன என்று அனேகர் யோசித்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். மற்றொரு பக்கத்தில் செக்ஸ் என்றாலே அது தப்பான காரியம் என்ற தவறான சிந்தனையில் அதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதையே தவிர்த்துவிடுகின்றனர்.

பாலியல் உணர்வுகள் மனிதனுக்கு நல்ல நோக்கத்தில் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை முறையாக அணுகும்போது அது மனுக்குலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செக்ஸ் சிந்தனைகள் வருவது இயல்பு என்றாலும் அதை சரியான விதத்தில் அணுகுவதிலேயே முதிர்ச்சி வெளிப்படும்.

பரிசுத்த வேதாகமத்தில் யோசேப்பு என்ற வாலிபன் தன் எஜமானனின் மனைவியால் தவறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தப் பட்ட போது “என் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?” என்று சொல்லி அவ்வாலிபன் விலகி ஓடினான். ஆம் தவறான உறவுகள் தனிமனிதனுக்கு மட்டுமல்ல, அவனைப் படைத்த இறைவனுக்கும் எதிரான செயலே. பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுவதே மிகவும் ஞானமான செயல். ஆனால் தொடர்ந்து அப்படிப் பட்ட சூழ்நிலைகளின் மத்தியில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், தண்ணீர் மேல் தாமரையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

என் தலைக்கு மேல் பறவை பறந்து செல்வதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் தலையில் அந்த பறவை கூடு கட்டுவதை என்னால் தடுக்க முடியும் என்று ஒருவர் சொன்னது போல, நீங்கள் நினைத்தால், பாலியல் சிந்தனை உங்களை ஆக்ரமித்துக் கொள்ளாதபடி உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். கொஞ்சம் இடம் கொடுத்தால், அது முழுமையாக உங்களை ஆட்கொண்டுவிடும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் முன்னுரிமைப் பட்டியல்களில் தெளிவாக இருங்கள்.

——————————————————

கேள்வி: நான் அடிக்கடி பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு சுயபுணர்ச்சி (Masturbation) செய்கிறேன். இது சரியா? இதனால் பாதிப்புகள் உண்டாகுமா?

ஆசையை அடக்க முடியாமல், அதற்கு வடிகாலாக சுய புணர்ச்சி செய்வதை அனேகர் ஆதரிக்கின்றனர். சில மருத்துவர்களும் கூட இதில் தவறேதும் இல்லை என்கின்றனர். சுய புணர்ச்சி செய்வதால் பெரிய பாவம் செய்வதிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்று கூட சிலர் சொல்கின்றனர்.

பாலியல் உணர்வுகள் என்பது மனிதர் எல்லாருக்கும் உண்டு. அதின் அளவு வித்தியாசப்படலாம். நம் சரீரத்திற்கு பசி ஏற்படுவதைப் போலவே பாலியல் உணர்வுகளும் உண்டாகிறது. பசிக்கிறது என்பதற்காக நாம் கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுவதில்லை. பாலியல் உணர்வைப் பொறுத்த வரையிலும் கூட அதே அணுகுமுறையைக் கடை பிடித்தலே சிறந்தது ஆகும்.

சுய புணர்ச்சி செய்பவர்கள் பெரும்பாலும் இனம் புரியாத ஒரு வித குற்ற உணர்வுடனேயே இருக்கின்றனர். ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம் என்று இயேசு சொன்னார். அனேகர் சுய புணர்ச்சி செய்கையில் Virtual உலகில் யாரையோ நினைத்துக் கொண்டுதான் அச்செயலைச் செய்கின்றனர். அல்லது அப்படிப் பட்ட வீடியோ, படங்கள் அல்லது கதைகள் ஏதாகிலும் ஒன்றால் தூண்டப்பட்டு இயங்குகின்றனர். ஆகவேதான் சுய புணர்ச்சி செய்வது தவறு என்று சொல்கிறேன்.

இன்று ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, சுய புணர்ச்சி செய்யாதவர்கள் யார்? என்று சிலர் நினைக்கலாம். நாம் கண்டதையும் சாப்பிட்டால் அதன் பின்விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதேபோலவே நம் பாலியல் உணர்வுகளுக்கு சரியான ஆகாரத்தை, தகுதியான ஆகாரத்தைக் கொடுத்தால் மட்டுமே நம் வாழ்க்கை இன்புறும்.

எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆனால் எல்லாம் தகுதியாயிராது என்ற பைபிள் வாசகத்தை மனதில் இருத்துவோம். சுய புணர்ச்சி போன்ற பழக்க வழக்கங்கள் ஒரு வித அடிமைத்தனத்திற்குள்ளாக நடத்தக் கூடியதாக இருக்கிறது. அதைச் செய்தால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்து, செய்து முடித்த பின் குற்ற உணர்வுடன் இருப்பதைக் காட்டிலும், செய்யாமல் இருப்பதே மேல்.

நான் பல நாட்களாக இதைச் செய்துவருகிறேன். திடீரென்று எப்படி நிறுத்துவது என்ற கேள்வி எழலாம். பொதுவாக பாலியல் உணர்வு தானாக எவருக்கும் உண்டாவதில்லை. நம் சிந்தனைகளிலோ அல்லது நாம் எதையாவது பார்ப்பதினாலோ அல்லது வாசிப்பதினாலேயே உண்டாகிறது. நாம் மனதில் பாலியல் உணர்வு உண்டாக்கக் கூடிய செயல்களில் கவனம் செலுத்தாமல், நம் வாழ்க்கைக்கு பயனுள்ள காரியங்களில் கவனம் செலுத்தலாம்.

An empty mind is devil’s workshop என்று சொல்வார்கள் அல்லவா. ஆகவே நம் மனதை தகுதியான காரியங்களினால் நிரப்புவோம். பைபிள் வசனங்களினாலும் பக்திக்குரிய காரியங்களினாலும் நிரப்புங்கள் என்று சொல்ல மாட்டேன். மாறாக அத்துடன் இந்த உலகில் நாம் அனுபவிப்பதற்கு எத்தனையோ விசயங்கள் உள்ளன. நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். உங்கள் சரீர புத்துணர்ச்சிக்காக எதாகிலும் கால்ப்பந்து, வாலிபால் போன்ற எதாகிலும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இவைகளைச் செய்யும்போது உங்கள் வாழ்க்கை சரியான திசையில் செல்வதை நீங்களே கண்டு கொள்வீர்கள்.

———————————————-