Home பெண்கள் பெண்குறி இன்றைய நாளில் நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவது ஏன்?

இன்றைய நாளில் நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவது ஏன்?

50

பெண்கள் முன்பெல்லாம் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்கள் வரை இருக்கும் மாதவிடாய்க்கு இரத்த போக்கை உறிஞ்சும் பாதுகாப்பு துணியை பயன்படுத்தி னார்கள். லேசான வெந்நீரில் யோனி பகுதியை சுத்தம் செய்வார்கள். இன்றைய சூழ்நிலையில் பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறhர்கள். இதனால் பெண்குறியை சுத்தம் செய்வதில்லை. இன்றைய நாகரீகம் பெண்களுக்கு தரும் அவஸ்தையான பரிசு என்றே இதனை குறிப்பிடலாம். இதன் மூலம் யோனி துவாரத்தின் வழியாக எபலோபியன் எனப்படும் வைரஸ் கிருமிகள் கருப்பையின் வாயை சென்றடைந்து நோய் தொற்றை உண்டாக்குகின்றன. இதனால் கருப்பையில் புண் உண்டாகி இப்புண்களிலிருந்து சீழ் உருவாகி பெண்குறியின் வழியாக வெளியேறும். இதுவே வெள்ளை படுதலுக்கு காரணமாகிறது. எனவே பெண்கள் உள்ளாடைகளை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். அடிக்கடி கருக்கலைப்பு செய்வதாலும், மாத விடாயின் போது உறவு கொள்வதால்கூட வெள்ளைப்படுதல் உண்டாகலாம்.

* திருமணமான பெண்களுக்கு மட்டும்தான் வெள்ளைப்படுதல் வருமா? இளம் பெண்களுக்கும் வருமா?

திருமணமான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அடிக்கடி கருக்கலைப்பு செய்வதால், கிருமி தொற்று ஏற்படுவதால், குழந்தை பேற்றின் போது கருப்பையில் உள்ள அழுக்குகள் முழுமையாக சுத்தம் செய்யப் படாவிட்டால் கருப்பையில் புண், கட்டி முதலியன உண்டாகி வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இளம் பெண்களுக்கும் உடல் சூடு, பலகீனம், வேலை பளு, சரியான முறையில் உணவு உண்ணாமை ஆகிய காரணங்களால் வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

* வெள்ளைப்படுதல் இருக்கும் பெண்களுக்கு சுய பராமரிப்பு எச்சரிக்கை என்ன?

பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை சிறுநீர் கழித்தபின் கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். இதனால் கிருமி தொற்றில் இருந்து தப்பிக்கலாம். மாதவிடாய் சமயத்தில் சுத்தமான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். பொது கழிப்பிடங்களை பயன்படுத்த கூடாது. உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் மற்ற வரிடம் வாங்கி உடுத்தக் கூடாது. வெள்ளைப்படுதல் இருந்தால் வெட்கப்படாமல் தக்க மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். இல்லையேல் கருப்பையில் புற்று உண்டாக காரணமாகி உடல் சூடு அதிகாpக்காமல், குளிர்ச்சியான காய்கறிகள், பழவகைகள் சாப்பிடலாம். வெள்ளைப்படுவதால் சில பெண்களுக்கு முடி உதிர்தல் உண்டாகலாம். மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு கூட மறை முகமாக வெள்ளைப்படுதல் காரணமாகிறது. எனவே இதை அலட்சியம் செய்யாமல் முறையான நல்ல பழக்க வழக்கம், சத்தான உணவு, சுகாதாரமான இருப்பிடம் போன்றவற்றுடன் கருப்பையை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.

* மருந்து எடுத்துக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் வருவது எதனால்?

பெண்களை பொறுத்தவரை தங்கள் உடல் நலனை விட குடும்பத்தாhpன் நலனிலே அதிக அக்கறை காட்டுவார்கள். ஒரே மருத்துவரை அணுகி தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்வதில்லை. 10 நாட்கள் மருந்து சாப்பிட்டு சாpயாகிவிட்டால் உடனே மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். இப்படிப்பட்ட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மீண்டும், மீண்டும் வருகிறது. சித்த மருத்துவத்தை பொறுத்த வரை அல்லது 6 மாதம் தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் இந்நோய் மீண்டும் வராமல் தடுக்கலாம். எந்தவகை நோயாக இருந்தாலும் அதற்குறிய காலத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டால் மட்டுமே முழுமையாக குணப்படுத்த முடியும்.

* வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு தடவை சிகிச்சை செய்து கொண்டால் மறுபடியும் வராதா?

வெள்ளைப்படுதலுக்கு முறையான மருத்துவம் செய்ய வேண்டும். ஆரம்ப நிலையில் இதை பெண்கள் கவனிப்பதில்லை. யோனி வாயில் அhpப்பு ஏற்பட்டு புண் உண்டாகி துர்நாற்றம் உண்டாகும் நிலையில்தான் டாக்டரை சந்திப்பார்கள். இப்படிப்பட்ட பெண்கள் தொடர்ந்து 3 அல்லது 6 மாதம் மருந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மறுபடியும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

* வெள்ளைப்படுதலால் விளையும் கெடுதல்கள் என்னென்ன?

பெண்களுக்கு இடுப்புவலி அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு பசி இருக்காது. அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் கூடிய வலி. யோனி துவாரத்திலும் தொடையின் இரண்டு பகுதியிலும் வெள்ளைப்படுவதால் அரிப்பு ஏற்படும். இதனால் இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் (பலகீனமாக) காணப்படுவார்கள். வெள்ளைப்படுவதால் முடி அதிகம் உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது.

* கர்ப்பப்பையில் கட்டிகள் வர காரணம் என்ன?

பெண்களில் குழந்தையில்லாதவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கர்ப்பப்பையில் கட்டிகள் இருப்பதால் அதிக அளவு இரத்த போக்கு ஏற்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் உண்டாகும். பெண்கள் தங்கள் கைகளால் வயிற்றில் தடவி பார்த்தாலே கட்டிகள் தென்படும்.

அடிவயிற்றில் வலி ஏற்படும். கருத்தரித்த பெண்களுக்கு இக்கட்டிகளால் கருச் சிதைவு உண்டாகலாம். இதை கவனிக் காமல் விட்டு விட்டால் கருப்பையில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அதிகம் சுரப்பதால்கூட கட்டிகள் உருவாகலாம்.

* வெள்ளைப்படுதல் உள்ள பெண்களுக்கு அறிவுரை என்ன?

வெள்ளைப்படுதலுக்கு முறையான மருந்து எடுக்காவிட்டால் பெண்ணின் யோனி வாயில் அரிப்பு ஏற்பட்டு புண் உண்டாகி துர்நாற்றம் உண்டாகும். மேலும் கருப்பையில் புண், கட்டி உருவாகலாம். கருப்பை புற்றும் உண்டாகலாம். தக்க மருத்துவ சிகிச்சை காணாவிடில் குழந்தை பேற்றின் போது சிரமம் ஏற்படும். எனவே தாமதிக்காமல் இதற்கு தகுந்த சிகிச்சை எடுப்பது நல்லது.

* வெள்ளைப்படுதல், கருப்பை கட்டி போன்ற பிரச்சினையில் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை சிறுநீர் கழித்த பின்பு கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இதனால் கிருமி தொற்றில் இருந்து தப்பிக்கலாம். மாதவிடாய் சமயத்தில் சுத்தமான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். மாதத்தில் 2 அல்லது 3 முறை மாத விடாய் தோன்றினாலும், அடிவயிற்றில் வலி உண்டாகி அதிக அளவு இரத்தப் போக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்பட்டாலும் மருத்துவரை அவசியம் நாடவேண்டும்.

* வெள்ளைப்படுதலுக்கு சித்த மருத்துவத்தில் என்ன சிகிச்சை உள்ளது?

சோற்று கற்றhழையில் தயார் செய்த லேகியம், அருகம்புல், வெள்ளருகு போன்ற மூலிகை இலைகளால் தயார் செய்த மாத்திரைகள், பவுடர்கள், அசோகப்பட்டையில் தயாரித்த டானிக் போன்றவைகளை உள்ளுக்குள் எடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் குணம் பெறும். இந்த சித்த மருந்துகள் எந்தவித பின் விளைவும் கொடுக்காது என்பதுடன் மீண்டும் வராமலும் ஆரோக்கியம் தரும். மேலும் வெள்ளைப் படுதலுக்கு என்று பிரத்தியேகமான வெளி பிரயோகம் செய்யக் கூடிய சித்த மருந்தையும் பயன்படுத்தலாம்.