Home சூடான செய்திகள் உடலுறவில் எந்தப் பருவத்திலிருந்த ஓர் ஆடவன் ஈடுபடலாம்?

உடலுறவில் எந்தப் பருவத்திலிருந்த ஓர் ஆடவன் ஈடுபடலாம்?

33

10256475_807431605964957_4040232758872782861_nஉடலுறவில் எந்தப் பருவத்திலிருந்த ஓர் ஆடவன் ஈடுபடலாம்?

ஓர் ஆடவன் தான் பருவம் அடைந்த, தன் 14வயது 15 வயதிலேயே உடலுறவு கொள்ளும் ஆற்றலைப் பெற்று விடுகின்றhன்இருந்தாலும் கூட நெறி முறையோடு கூடிய ஒழுக்க சீலம் மனித வாழ்க்கையின் அச்சாணி என்பதனை, அவன், தன் மனத்தில் இருத்தி, தன் திருமணத்துக்குப் பின்னரே அவன் உடலுறவில் ஈடுபடவேண்டும்
இயற்கை அன்னை, சின்னஞ்சிறு வயதிலேயே உடலுறவு கொள்ள ஒருவனுக்கு ஆற்றலைக் கொடுத்திருந்தாலும் கூட, அவன், உடலுறவு கொள்வதற்குரிய பரிபக்குவத்தை அவன், 20 வயதினைத் தாண்டிய பின்னரே, அதாவது அவன் மணவாழ்க்கை என்னும் இன்ப பரியில் நுழைந்த பின்னரே அவனுக்கு வழங்குகின்றhள்.உடலுறவுக்கு வேண்டிய அளவில், ஒருவன் மனம் பண்படும் முன்னர், அவன் உடலுறவில் ஈடுபடுவதால், அவன் உடலுறவின் முழு இன்பத்தையும் பெற முடியாது என்பது முக்காலும் உறுதி.
உடலுறவுக்கு உhpய பாpபக்குவம்„-
உடலுறவு கொள்ளுவதற்கு என்ன பரிபக்குவம் வேண்டிக் கிடக்கின்றது? என்று கேட்கலாம்.உடலுறவின் அடிப்படையே மனத்தின் ஈடு பாடே ஏதோ, ஓர் ஆடவனின் உடலுறவு உறுப்புக்களும், ஒரு பெண்ணின் உடலுறவு உறுப்புக்களும் சங்கமம் ஆவதே உடலுறவு என்று எண்ணுவது தவறு ஆகும்

உடலுறவு வெற்றிகரமாக அமைந்து, அதன் முழுமை இன்பத்தையும் வழங்க, உடலுறவில் ஈடுபடும் ஆண்-பெண் ஆகிய இருவரது மன ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும். மிருக வெறி பிடித்த, காமம் நிறைந்த ஓர் ஆடவன், தான் விரும்பி விழையும் ஒரு பெண்ணை அவள் இப்புதல் இன்றி, வலுக் கட்டாயமாக வற்புறுத்தி, அவளோடு உடலுறவு கொள்ளுகின்றhன். இந்த வன்முறை கலந்த கட்டாய உடலுறவுக்கு அந்தப் பெண் மனமார ஓடு கொடுக்காததால், அவன் உடலுறவின் கால் பங்கு இன்பத்தையும் கூட அடைய முடியாதவன் ஆகி விடுகின்றhன்.

இதனால் அவன் ஏமாற்றம் அடைகின்றhன் இந்த ஏமாற்றத்தின் விளைவே, இத்தகைய கட்டாய உடலுறவின் பின்னர், அந்த உடலுறவுக்கு மறுப்பளித்த பெண், வன்முறைக்கோ, இல்லை, கொலைக்கோ ஆளாவது. இது யாரும் மறுக்க முடியாத ஒரு மனோ தத்துவ உண்மை ஆகும்.