Home இரகசியகேள்வி-பதில் உங்கள் மனைவியும் கலவி கொள்கிறீர்களா? சரியான முறையில் உறவு கொண்டீர்களா? ஒரு வாரத்துக்கு...

உங்கள் மனைவியும் கலவி கொள்கிறீர்களா? சரியான முறையில் உறவு கொண்டீர்களா? ஒரு வாரத்துக்கு பல முறைகள் என்று விகிதத்தில்?

209

கேள்வி: எனக்குத் திருமணமாகி 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எல்லோரும் இது பற்றி கேட்கும் போது எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் “அப்பா“ ஆக ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்…

பதில்: திருமணம் ஆயிற்று சரி. நீங்களும் உங்கள் மனைவியும் கலவி கொள்கிறீர்களா? சரியான முறையில் உறவு கொண்டீர்களா? ஒரு வாரத்துக்கு பல முறைகள் என்று விகிதத்தில்? அப்போதும் பிள்ளை உண்டாகவில்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டியது.

முதல் ஒரு மாதத்துக்கு அன்றாடம் உறவு கொள்ளுங்கள். மாதவிடாய் முடிந்த முதல் 15 நாட்கள் உறவு கொள்ள வேண்டுடியது அவசியம்..

மனைவியின் மாதவிலக்குத் தேதிகள் சரியாக இருக்கின்றனவா என்று பாருங்கள். மாதாமாதம் அவளுக்கு மாதவிலக்கு வருகிறதா என்று பாருங்கள்.

இரண்டும் சரியாக இருந்தும் குழந்தை தங்கவில்லை என்றால் உங்கள் விந்தணுக்களைப் பரிசோதிக்கலாம். வெறுமனே விந்தணுக்களை மைக்ரோஸ் கோப் அடியில் வைத்து பார்த்தால், எண்ணிக்கை, அசைவு மாதிரியான சமாச்சாரங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளலாம். ஆணின் விந்து பரிசோதனை நல்லபடியாகவே இருந்தால், அடுத்து பெண்ணைப் பரிசோதிக்கலாம்.

அவள் சினையகங்கள் சரியாக இயங்குகின்றனவா? சினைக் குழாய்களின் செயல்பாடு ஓகேவா? ஹார்மோன்கள் போதுமான அளவில் சுரக்கின்றனவா என்பதை எல்லாம் வெவ்வேறு முறைகளில் பரிசோதிக்கலாம். இன்று இருக்கும் சாதனங்களின் நுணுக்கத்தாலும், அறிவியல் வளர்ச்சியின் கைங்கரியத்தாலும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்து பிள்ளைப் பேற்றைப் பெற முடியும்.

அப்படியும் முடியாவிட்டால் ஓர் ஆரோக்கியமான குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆக, வழிகள் நிறைய இருக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல் முதலில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி உறவுகொள்ள ஆரம்பியுங்களேன். யார் கண்டது, அதிலேயே பிரச்னை தீர்ந்து போகலாமே!
————————————

கேள்வி: எனக்கு கடந்த தை மாதம்தான் திருமணமானது. தற்போது என் மனைவி இரண்டு மாத கர்ப்பிணித் தாய்.

அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்தாலும் எனக்கு ‘அந்த’ நினைவு வரத்தான் செய்கிறது. மனைவி கர்ப்பம் தரித்துவிட்டால் அவள் குழந்தை பெறும்வரை அவள் உறவில் ஈடுபடக்கூடாதா?

பதில்: இன்னும் சில மாதங்களில் பெற்றோராகப் போகும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

அனேகமானோர் இப்படி நினைத்துக்கொண்டுதான் கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவ காலத்திலும் சரி பல பிரச் சினைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் தமது கர்ப்பகாலத்தில் உறவு கொள்ளவே கூடாது என்று எங்கும் சொல்லப்படவில்லை.

ஆனால், கருத்தரித்த முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான விதியாக கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம், முதல் மூன்று மாதங்களின்போதுதான் கரு கருப்பைச் சுவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளத் தொடங்கும் காலம்.

அதுபோலவே, கடைசி மூன்று மாதங்கள் கர்ப்பிணிகளுக்கு உடலுறவின்போது சிரமங்கள் ஏற்படக் கூடும். இடைப்பட்ட மாதங்களில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

கர்ப்பமாயிருக்கும் மனைவியைக் கட்டாயப் படுத்தி உறவு வைத்துக்கொண்டால், அவரது உடல் மற்றும் மனம் மட்டுமல்லாமல் பாதிக்கப்படுவதோடு பிறக்கவிருக்கும் குழந்தையின் மனநிலையும்கூட பாதிக் கப்படலாம்.

சுகப்பிரசவமா, சிசேரியனா போன்ற ஒரு சில காரணிகள்தாம் பிரசவத்துக்குப் பின்னான உங்களது தாம்பத்திய வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். அதுவரை தாம்பத்தி யத்தைத் தள்ளிப்போட வேண்டும்.

அதேவேளை பிரசவத்தின்போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

கைக்குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய்விடும் என்று கூடப் பல பெண்கள் நம்புகிறார்கள்.

இது மூட நம்பிக்கை. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண் டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்ப காலத்தின்போதும், பிரசவத்தின் பின்னான காலத்தின்போதும் வைத்தியரின் சிபாரிசின் பேரில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.

——————————————–
கேள்வி: நான் ஒரு பெண். வயது 17. நான் 28 வயதுடைய ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாகக் காதலிக்கிறேன்.

அவரும்தான். கடந்த வருடம் இதுபற்றி என் தாயிடம் அவரே வந்து, சீதனம் உட்பட சகல விடயங்களையும் பேசி முடித்தார். வயது வித்தியாசம், சாதி வித்தியாசம் எதையும் பார்க்காமல் எமது வீட்டாரும் சம்மதித்தனர்.

அவர் இப்போது கடந்த மூன்று மாதங்களாக வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறுகிறார். அப்படியென்றால் எனது காதலுக்கு என்ன முடிவு?

பதில்: வீட்டில் பேசி சம்மதமும் வாங்கிய பின் அவரிடம் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பது விசித்திரமாகத்தான் இருக் கிறது.

காதல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த அவர், மறக் காமல் சீதனத்தையும் பேசி முடித்துக்கொண்டிருக்கிறார்.

எனவே, அவருக்கு காதலைவிடக் காசில் விருப்பம் அதிகமாக இருக்கலாம். தற்போது அவர் விரும்புவதாகச் சொல்லும் பெண் யாரென்று தெரிந்தால், அவரது குடும்பப் பின்னணியையும் உங்களது குடும்பப் பின்னணியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதை உறுதி செய்துகொள்ளலாம்.

வீட்டுக்கு வந்து திருமணப் பேச்சை முடிக்கும் அளவுக்கு இருந்த ஒருவர், தற்போது உங்களை வேண்டாம் என்று கூறிவிட்டால், அவரை வற்புறுத்தி நீங்கள் திரு மணம் செய்துகொண்டாலும் உங்கள் வாழ்க்கை சுகப்படப் போவதில்லை. எனவே, அதை மறந்துவிடுவது நல்லது.