Home இரகசியகேள்வி-பதில் எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான்

எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான்

172

கேள்வி:- கே.சு….. மட்டுவல
எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான். அத்தோடு அவனைவிட வயதில் மூத்த ஆண்களோடு தவறான உறவில் ஈடுபடுகின்றான். இதற்கு காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன?

பதில்:- சுயஇன்பத்தில் ஈடுபடுவது அவன் மாத்திரமல்ல. ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் பெரும்பாலனவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். அல்லது முன்பு ஈடுபட்டிருப்பார்கள்.

இதை நான் வெளிப்படையாகச் சொல்வது பல தூய்மைவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும் அதுதான் உண்மை. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லியுள்ளார்கள். எனவே உங்கள் நண்பன் ஏதோ தவறு செய்ததாக எண்ணாதீர்கள்.

ஒருவரது தனது பாலியல் தொடர்பான உளநெருக்கீட்டை தணிப்பதற்கான வடிகாலாகவே சுயஇன்பம் இருக்கிறது. பதின்ம வயதுகளில் பாலியல் எழுச்சி ஏற்படுவது அதிகம். அது இயற்கையின் நியதி. ஆயினும் கல்வி தொழில் வாய்ப்பு போன்ற காரணங்களால் அதை ஆண் பெண் உறவு மூலம் தீர்க்க சமூக ரீதியாக முடிவதில்லை. பதின்ம இதைத் தீர்ப்பதற்கு எதிர்பாலினர் கிடைப்பது சாத்தியம் இல்லை. திருமணம்கள் மிகவும் காலதாமதமாகின்றன. எனவேதான் தாமே தீர்த்துக் கொள்ள நேர்கிறது. உங்கள் நண்பரின் நிலையும் அதுதான்.

சுயஇன்பத்தால் உங்கள் நண்பருக்கு உடல்நலக்கேடு ஏற்பட வாய்ப்பில்லை. இரவில் தானே ஸ்கலதமாபவர்கள் நேய்ப்வாய்ப்படுகிறார்களா? இல்லையே!!!

இருந்தபோதும் அவரது கல்வி தொழில் போன்ற நாளந்த செயற்பாடுகளை அசட்டை செய்யும் அளவிற்கு அவரது சுயஇன்ப நாட்டம் அதிகமானால் உளவளத் துணையை நாட வேண்டும்.

உங்களது நண்பரது மற்ற பழக்கம் ஆபத்தானது.

மற்ற ஆண்களுடன் ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவதானது பாலியல் நோய்த் தொற்றுக்கு இட்டுச் செல்லலாம். சிபிலிஸ், கொனரியா, எச் ஐ வி, வைரஸ் வோர்ட் போன்ற பலவும் பாலியல் உறவுகளால் தொற்றும் நோய்களாகும்.

எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 80களில் அந்நோய் தொற்றுவதற்க்கு ஒருபால் புணர்ச்சியே முக்கிய காரணமாக இருந்தது என்பதை அறிவீர்களா?

எந்த வயதுள்ள பிறருடன் உறவு வைத்தாலும் பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு.

அவரை விட மூத்த வயதுள்ளவர்கள் என நீங்கள் குறிப்பிட்டவர்கள் யார் யாருடன் எல்லாம் உறவு வைத்து நோய்க் காவிகளாக திரிகிறார்களோ தெரியாது. எனவே அதை நிறுத்துமாறு ஆலோசனை சொல்லுங்கள்.

பிகு

ஓரினப் புணர்ச்சி சரியானதா தவறானதா?
இயற்கையானதா இயற்கைக்கு மாறானதா? என்பது பற்றி
இங்கு நான் ஆராய முற்படவில்லை.

அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் பல சிறார்களை ஓரின உறவிற்கு பல நெறிகெட்ட மனிதர்கள் ஆசை ஊட்டியோ அன்றி அதிகாரத்தைப் பயன்படுத்தியோ உட்படுத்தப்படுவதை
ஊடகங்கள் மூலமும் தொழில் ரீதியாகவும் அறிய முடிகிறது.

இது தவறான நெறிமுறை என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர்.

ஆனால் அதற்கு மேலாக அது பாலியல் தொற்று நோய்களுக்கும் வித்திடும்.

எனவே இது பற்றிய விழிப்புணர்வை இளம் சமூதாயத்தினருக்கு ஏற்படுத்துவது அவசியம்.
கேள்வி:- எனது உடல் தினசரி சோர்வாகவே உள்ளது. அடிக்கடி தாகம் (15 நிமிடத்திற்கு ஒரு தடவை) வருகிறது. அடிக்கடி சிறுநீர் வருகிறது. தோன்றுகிறது. சளி தொடர்ந்துள்ளது. தொடர் வயிற்றுவலியும் இருக்கின்றது. காரணம் என்ன?

பதில்:- உங்கள் வயதைச் சொல்லவில்லை. இருந்தாலும் உங்கள் நண்பரின் வயது 18 என்பதால் உங்களுக்கும் அதை ஒட்டியே இருக்கும் என எண்ணலாம். எவ்வளவு காலமாக இந்த அறிகுறிகள் உள்ளன என்பதும் தெரியவில்லை. சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்து பார்த்தாலே நோயைத் தெளிவாகக் கண்டறிய முடியும்.

உடற் சோர்வு, தண்ணீர் தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிதல் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது நீரிழிவு நோய்தான். இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்திருந்தால் உங்கள் சிறுநீரகம் கூடுதலாக தொழிற்பட்டு சீனி சிறுநீருடன் வெளியேறுவதைத் தடுக்க முயலும். இதனால் சிறுநீர் உற்பத்திஅதிகமாகி நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே உடனடியாக குருதிச் சீனியின் அளவைப் பரிசோதித்துப் பாருங்கள். குயளவiபெ டிடழழன ளுரபயச செய்து பார்ப்பது அவசியம்.
அத்துடன் சிறுநீர்ப் பரிசோதனை (ருசiநெ குரடட சநிழசவ) செய்து பார்க்கவும் வேண்டும். ஏனெனில் சிறுநீரில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிவதுடன் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். ஆனால் பொதுவாகச் சலக் கடுப்பும் சேர்ந்திருக்கலாம்.

சளித்தொல்லையும் இருப்பதாகச் சொன்னீர்கள். சளி மூக்கடைப்பு, மற்றும் சைனஸ் தொல்லை இருந்தாலும் உடற் சோர்வு, தண்ணீர் தாகம் ஆகியவை ஏற்படும்.

இவற்றைத் தவிர மனப் பதற்றம், உளநெருக்கீடு, மனச் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் உடற்சோர்வும் அடிக்கடி சிறுநீர் கழிதலும் ஏற்படலாம்.

அடிக்கடி கோப்பி குடிப்பவர்கள், தூக்கக் குறைபாடு, கபால வலி எனப்படும் மைக்கிரேன் தலைவலி என இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.

எனவே இது ஏன்ன நோய் என நீங்களே யோசித்து மனப்பதற்றம் அடைவதைத் தவிர்த்து உங்கள் மருத்துவருடன் நேரில் சென்று கதைத்து வேண்டிய பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோயை சரியயாகக் கண்டறிவதே உசிதமானதாகும்