Home பெண்கள் அழகு குறிப்பு அரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ்

அரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ்

27

நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களின் சருமம் வளுவளுவென வெண்ணிறத்தில் பொலிவடைந்து காணப்படும்.

சருமத்தை பொழிவடையச் செய்யும் வழிகள்:

வேக வைக்காத அரிசியை சரியாக இரண்டு டீஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அரிசியில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கற்களை நீக்கி நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

சுத்தப்படுத்திய அரிசியில் சுத்தமான நீரை ஊற்றி அந்த பாத்திரத்தை மூடி விடவும். அரிசி அனைத்தும் பாத்திரத்தின் அடி பாகத்தில் வந்தடைய, அதை 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்.

இப்போது பழுப்பு அல்லது பாலின் நிறத்திலான அந்த நீரை தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இந்த நீரை கொண்டு உங்கள் முகத்தை நன்றாக தேய்த்து கழுவுங்கள். பின் உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் வரை அப்படியே இருங்கள்.

காய்ந்த பிறகு அந்த அரிசி நீரை கொண்டு மீண்டும் ஒரு முறை முகத்தை கழுவுங்கள். உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் போது, அரிசி நீரில் இருக்கும் அனைத்து வைட்டமின் மற்றும் கனிமங்களும் உங்கள் சரும துவாரங்கள் வழியாக உள்ளேறும்.

முகத்தை கழுவிய பின்பு, உங்கள் சருமத்தை கையால் வருடும் போது அதிலுள்ள மென்மையை நீங்கள் உணரலாம். இதனால் ஆர்கானிக் மேக்-அப் வகையாக கருதப்படும் இதனை பின்பற்றி பொலிவடைந்து ஜொலிஜொலிக்கும் சருமத்தை பெறலாம்.

நாம் பயன்படுத்தும் அரிசி ஒரே தரத்தில் இருப்பதில்லை. அதனால் உங்கள் மேனியின் பளபளப்பு அதிகரிக்க விதவிதமான அரிசி வகைகளை பயன்படுத்தி பாருங்கள்.