Home அந்தரங்கம் உடலுறவின்போது பெண்கள் இப்படி நடந்து கொண்டால் இருவருக்குமே குஷி தான்…

உடலுறவின்போது பெண்கள் இப்படி நடந்து கொண்டால் இருவருக்குமே குஷி தான்…

40

ஆணும் பெண்ணும் இணைந்திருப்பது இருவருக்குமே சுகமளிக்கக்கூடிய விஷயம். கட்டிலில் இருவரும் இணைந்திருக்கக்கூடிய நேரத்தை இனிமையானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

உடலுறவு என்பது ஆண்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டிய இடம் என்பதைத் தவிர்த்து பெண் எப்படியெல்லாம் ஆண்களுக்கு உதவ முடியும். அதிலும் உடலுறவின் போது பெண் தன்னுடைய கைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியம்.

உடலுறவில் எல்லா நேரங்களிலும் ஆண்களே பெண்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைப்பது தவறு. பெண்களும் ஆண்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

பெண் எப்போதும் ஆணை இயக்குபவளாக மட்டுமே இருப்பது கூடாது. ஆண்கள் தன்னால் முழு திருப்தியடைவதற்கான வேலையையும் பெண்கள் செய்ய வேண்டும்.

கட்டிலில் ஆண்கள் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். தான் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்றால், அது முழுமையான இன்பத்தை இருவருக்கும் தந்துவிடாது. அதனால் முடிந்தவரை பெண்கள் தங்களுடைய கைகளை மட்டுமாவது பயன்படுத்தி, ஆண்களின் மூடை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாம்.

உடலுறவின் போது பெண்கள் தங்களுடைய கைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தி, இருவருக்கும் அதிக இன்பம் கிடைக்குமாறு தூண்ட முடியும்.

ஆண் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுப்பது, கடிப்பது, எங்கேயாவது பிடித்து அழுத்துவது என ஏதாவது செய்து கொண்டிருக்கும் வேளையில் பெண்கள் வேடிக்கைப் பார்த்து ரசித்துக் கொண்டு மட்டுமே இருக்கக்கூடாது.

தன்னுடைய கைகளால் தன்னுடைய மார்பை அழுத்திப் பிடித்து, முனகிக்கொண்டே கசக்கிக் கொண்டிருத்தல் வேண்டும். அப்படி செய்யும்போது ஆண்களுக்கு மூடு அதிகமாகும்.

அதேபோல் ஆண்களின் தலையைக் கோதிக்கொண்டும் காதைத் திருகிக் கொண்டும் இருந்தால்,ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். அது அவர்களுடைய வேகத்தை அதிகரிக்கும்.

குறிப்பாக, நகங்களால் வலிக்காமல் மிக மென்மையாக முதுகில் வருடிக் கொடுத்தும் லேசாகக் கீறி விட்டுக் கொண்டும் ஆண்களுக்கு ஆங்காங்கே முத்தம் கொடுக்க வேண்டும். அது அவர்களை இன்னும் கொஞசம் சூடேற்றிவிடும்.

மேலும், ஆண்களுடைய அந்தரங்கப் பகுதியான ஆணுறுப்பை பெண்களுடைய கைகளால் எடுத்து இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அது ஆண்களை மேலும் அதிகமாக குஷிப்படுத்தும். அதற்கடுத்து எதுவும் சொல்லவே தேவையில்லை. ஆண்களின் உடல் பெண்களின் செய்கைகளால் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.

கட்டிலில் தனக்குக் கட்டுப்பட்டு இருக்கும் பெண்களைவிட, தன்னை அடக்கி ஆளும் பெண்களைத் தான் ஆண்களுக்கு மிகப் பிடிக்கும்.

எந்த பெண் ஆணை முழு திருப்திப்படுத்த வேண்டும் என நினைத்து, அதற்காக முயற்சி செய்து செயல்படுகிறார்களோ அவருடைய துணையான ஆண் தான் உலகில் மிகச் சிறந்த அதிர்ஷ்டசாலி.