Home ஆரோக்கியம் மலட்டுத்தன்மை : புரிதலும் அணுகுமுறையும்!

மலட்டுத்தன்மை : புரிதலும் அணுகுமுறையும்!

34

மனைவியிடமும் கேட்கத் தொடங்கப்படும் கேள்விகள்தான்.. “விசேஷம் ஏதாவது உண்டா?”, “இது வரையிலும் ஒன்றுமில்லையா?” போன்றவை. “அதெல்லாம் ஒரு வருஷம் பொறுத்துதான்,” என்று நழுவுவதுக்கு ஒரு பதில் சொல்லி நாம் சமாளிப்பது வழக்கம்.
ஆனால், நாளடைவில் நம்முடைய மனதிலும் ஒரு குழந்தையைக் கொஞ்சிப் பார்க்க ஆசையும், அதற்கு தமதமாவதினால் வருத்தமும் உண்டாக தொடங்குகிறது. அதோடு, நம் மனதிலும் டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். கடைசியில், மருத்துவமனைகளில் ஏறி இறங்கத் தொடங்குவோம். இங்கேயும் ஆரம்பிக்கின்றது புதிய பிரச்னைகள்…
ஆணுக்கும் பெண்ணுக்கும்…
குழந்தைப் பேறுக்காக சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது, யாருக்கு முதலில் பரிசோதனை மேற்கொள்வது என்பதில் கணவனுக்கும், மனைவிக்கும் பிரச்னைகள் ஆரம்பிகின்றது.
ஆயினும், சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் பெரும்பாலும் பெண்கள்தான் தங்களை பரிசோதனைக்கு முதலில் உட்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆண்களுக்கான பரிசோதனைகள் மிகவும் சுலபமானது என்றாலும்கூட, அவர்கள் அதை மேற்கொள்ள தயாராக இருப்பதில்லை.
பெண்ணுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையைத் தொடங்கும்போதே, அவளது கணவனும் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம், ஆணோ பெண்ணோ குழந்தை இல்லை என்று வந்துவிட்டால் இரண்டு பேருமே பரிசோதனை செய்து கொள்வது தான் நல்லது. இவர்களில் ஒருவர் மட்டும் பரிசோதனை செய்து கொள்ளவது உசிதமானது அல்ல என்பதை இருவருமே புரிந்துகொள்ள வேண்டும்.

தங்களுடைய பிரச்னைகள் தெரிந்து கொள்வதற்கும், அதற்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளவதற்கும் இரண்டு பேரும் ஒன்றாக செல்வதுதான் நல்லது. ஏனென்றால் இதற்கு தேவையான கவுன்சிலிங் இரண்டு பேருக்கும் தேவை.
கவுன்சிலிங் நேரத்தில் கணவன் – மனைவி இரண்டு பேரிடமும் எல்லா விஷயங்களை பற்றியும் ஒன்றாக மருத்துவர்கள் விளக்குவர். ஒருவரிடம் மட்டும் சொன்னால், அவர்களுக்கு எதோ கடுமையான கோளாறு இருப்பதாக நினைப்பதற்கும், சந்தேகப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
மேலும், தங்களுடைய பிரச்னைகள் உறவினர்களிடையே சொல்வதை தவிர்க்க வேண்டும். அது சில நேரங்களில் கணவனுக்கோ, மனைவிக்கோ மனச் சங்கடங்களை உருவாக்க நேரிடலாம்.
மலட்டுத்தன்மைகான காரணங்கள்…
மாதவிலக்கில் தடைகள், என்டோமெட்ரியாசிஸ், கருமுட்டை உருவாகுவதிலுள்ள தடைகள், டியூபில் ஏற்படுகின்ற அடைப்புகள் முதலான பிரச்னைகள் பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களாக இருக்கின்றது.
ஆண்களில் வெரிகோஸ், உயிரணுக்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பது போன்றவை மலட்டுத்தன்மைக்கு காரணங்களாக இருக்கின்றது.
ஒரு வருடம் வரை முயற்சித்த பின்னும் தாய்மை அடையாமல் இருக்கும் போதுதான் நமக்கு மலட்டுத்தன்மை இருக்கலாம் என்று உணர முடிகின்றது. இதை ஒரு நோயாக கருதி மனதை வாட்டிக் கொள்வது தவறு.
இன்று சாதாரணமாக 10-ல் ஒருவருக்காவது இப்பிரச்னைகள் இருக்கின்றது. இதில் முக்கால்வாசி பேர்களும் மாற்று சிகிச்சை முறைகள் இல்லாமலயே குழந்தைகள் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், சிலருக்கு சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது.
ஊட்டசத்து குறைவான உணவு, தண்ணிரிலும் உணவிலும் அடங்கி உள்ள கிருமிகள், சிகரெட், குடிப்பழக்கம் போன்றவையும் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கின்றது.
சரியான சிகிச்சை முறை…
கணவன், மனைவி இவர்களில் எவருக்கேனும் மலட்டுத்தன்மை இருந்தால் கூட தாம்பத்ய உறவில் வழக்கம்போல் ஈடுபட வேண்டும். இதனால், உயிரணுக்களுடைய சக்தி குறைவதற்கு பதிலாக கூடத்தான் செய்யும். அதிக அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது கருத்தரிக்க வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அவ்விதம் இருக்கின்ற நேரம் தம்பதிகளின் மன ஒற்றுமையும் சிராக இருக்கும்.
கருவாக்க சிகிச்சைக்கு ஒரு மருத்துவரை அணுகும் முன், அவர் நடத்துகின்ற அல்லது பணியாற்றுகின்ற மருத்துவமனையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் . நவீன கருவிகள் உள்ளதா, சிகிச்சைக்கு வருபவர்களை அவர் நன்றாக பராமரித்து கொள்கிறார்களா என்பதை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டியிருக்கும்.
எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் வசதி கொண்ட மருத்துவமனையையும், எல்லோராலும் எளிதில் அணுக இயலுகின்ற மருத்துவரையும் அணுகுவதுதான் நன்மை பயக்கும்.
சிறந்த மருத்துவரின் ஆலோசனைகளை சரியாக பெற்று சிகிச்சையைப் பெறவேண்டும். மாறாக, கலர்ஃபுல்லான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் வீட்டிலும் தேவதைகள் வலம் வருவது உறுதி!