Home ஆரோக்கியம் உங்களுக்கு அல்சர் நோய் உள்ளதா ?இதோ முழுமையான மருத்துவம்

உங்களுக்கு அல்சர் நோய் உள்ளதா ?இதோ முழுமையான மருத்துவம்

276

பணத்தினை நோக்கி ஓடுகின்ற அவசரமான வாழ்கையில் நாம் சாப்பிடுவதை சில நேரங்களில் தவிர்த்து விடுகின்றோம்.வயது வித்தியாசம் இல்லாமல் அல்சர்(ulcer) தொல்லையால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சினை அல்சர்.அதாவது குடற்புண் இது குடலில் ஒருவிதமான எரிச்சலை ஏற்படுத்தும்.சாப்பிடாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் இவ்விதமான எரிச்சலை அல்சர் உள்ளவர்கள் உணர முடியும்.

சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமையும் சரியான உணவுகளை எடுக்காமையும் நமது வாழக்கையில் ஒரு அங்கமாக இது மாறிவிட ஒரு காரணம் ஆகிவிட்டது.

கடந்த முன்னைய பதிவில் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதற்கான 8 வழிமுறைகளை எமது வலைப்பதிவில் வழங்கி இருந்தோம்.அந்த கட்டுரையை வாசிக்க வேண்டுமாயின் கீழே கிளிக் செய்யுங்கள்

சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த மிகசிறந்த 8 வழிமுறைகள்-மேலும் வாசிக்க

சரி நாம் இந்த பதிவின் ஊடாக அல்சர் என்றால் என்ன? வர காரணங்கள் என்ன? அல்சர் வருவதற்கான அறிகுறிகள் மற்றும் குணப்படுத்துவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

அல்சர் என்றால் என்ன?

மனித உடலின் உணவு தொகுதி மிகவும் பிரம்மிப்பானது.நாம் உணவை உள்ளெடுத்து அவை இரைப்பையை அடைந்தவுடன் அந்த உணவினை சமிபாடு அடைய செய்வதற்கான அமிலங்கள் உடனடியாக சுரந்து விடுகின்றன.அப்பிடி நாம் வழமையாக உணவை உள்ளெடுக்க வேண்டிய நேரத்தில் உணவை உள்ளெடுக்காமல் விடுவதால் சுரக்கப்படும் அமிலங்கள் நமது இரப்பை தோல் மேற்பரப்பை அல்லது சுவரை பதம்பார்த்து விடுகின்றன.இதனால் குடலில் ஏற்படும் புண் அல்சர் அல்லது குடற்புண் என சொல்லப்டுகின்றது.

பொதுவாக உணவுக்குழாயில் அல்லது முன்சிறுகுடலில் புண்கள் ஏற்படும் போது அவை பெப்டிக் அல்சர்(pepetic ulcer) என அழைக்கப்படுகின்றன.ஆனால் இரைப்பையில் ஏற்படும் புண்கள் குறிப்பாக காஸ்ட்ரிக் அல்சர்(gastric ulcer) என்று அழைக்கப்படும்.இங்கு நாம் காஸ்ட்ரிக் அல்சர் பற்றியே விரிவாக ஆராயப்போகிறோம்.

அல்சர் வருவதற்கான அறிகுறிகள்
அல்சர் ஏற்படும் போது அவற்றுடன் பல்வேறு அறிகுறிகள் தொடர்புபட்டுள்ளன.அறிகுறிகளின் தீவிரம் வயிற்றில் உள்ள குடற்புண் இன் அளவில் தங்கியுள்ளது..புண் மிகவும் மோசமாக இருக்கும் பட்சத்தில் அறிகுறிகளும் மிகவும் தீவிரமாக இருக்கும்.

1.மிகவும் பொதுவான அறிகுறி உங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதிக்கு இடையே உள்ள பகுதியில் அல்லது வயிற்றின் நடுவில் ஒரு எரியும் உணர்வு அல்லது ஒரு வலி(stomach pain) ஏற்படும்.நீங்கள் சாப்பிடாமல் வெறும் வயிறாக இருக்கும் போது வலி மிகவும் தீவிரமாக இருப்பதுடன் இது சில மணி நேரங்களுக்கு நீடிக்கவும் கூட செய்யலாம்.

அல்சர் வயிற்று வலி

சில நேரங்களில் அஜீரண கோளாறுகள் காரணமாகவும் வயிற்று வலி ஏற்படலாம்.ஆகவே நாம் வயிற்று வலிக்கான காரணத்தை இனங்கண்டு கொள்ளவேண்டும்.

வயிற்று புண்ணுக்கான அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் ஒரு வைத்தியரை நாடுவது மிகச்சிறந்தது.சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் புண்களில் இரத்தப்போக்கு ஏற்படுவதுடன் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.

.

2.அடுத்தது சாப்பிட்ட பின்னர் ஹார்ட் பேர்ண்(heart burn) என்று சொல்லப்படும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.வயிற்று வலியுடன் சேர்ந்து இந்த heart burn ஆகுமாயின் அது குடற் புண்ணுக்கான அறிகுறி தான்.

3.வாந்தி தொடர்ச்சியாக இருக்குமாயின் அதுவும் அறிகுறியாக இருக்கலாம்..சில நேரங்களில் இரத்தத்துடன் கூடிய வாந்தியும் ஏற்படலாம்.

அல்சர் காரஅறிகுறியாக வாந்தி
4.உடல் எடை குறைவும் குடற் புண்வருவதற்கான ஒரு அறிகுறி ஆகும்.

உடல் எடையை அதிகரிக்க மிகசிறந்த டிப்ஸ்-வாசிக்க இதனை கிளிக் செய்யுங்கள்
5.வயிற்றில் ஏற்படும் வலி காரணமாக உணவை சாப்பிடுவதில் விருப்பமின்மை ஏற்படலாம்.

6.பொதுவாக சாப்பிட்டவுடன் ஏப்பம் வரும்.அந்த ஏப்பம் புளிப்பு தன்மையுடன் வருமாக இருந்தால் அது கூட அல்சருக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

7.உணவை ஜீரணமடைய செய்யும் அமிலத்தன்மையான பதார்த்தங்கள் வயிற்றில் இருக்கும்.அவற்றின் ஏற்ற தாழ்வுகள் காரணமாக உங்களுக்கு குமட்டல் போன்ற உணர்வும் ஏற்படலாம்.

8.உங்கள் மலத்தின் நிறம் கருப்பாக இருக்குமாயின் அல்சர் மிகவும் முற்றிவிட்டது என்று அர்த்தம்.அப்பிடியான சந்தர்ப்பங்களில் ஒரு மருத்துவரின் சிகிச்சையை பெற்று கொள்வது மிக சிறந்தது.

அல்சர் ஏன் வருகிறது?வர காரணங்கள்

நாம் சாப்பிடும் உணவானது இரைப்பையை அடைந்ததும் ஹைட்ரொ குளோரிக்(hydro chloric acid) அமிலம் மற்றும் பெப்சின்(pepsin) ஆகியன சுரக்கப்படுகின்றன.இவை நாம் சாப்பிடும் உணவை செரிக்க செய்யும் தன்மை கொண்டவை.நாம் காலை உணவை தவிர்ப்பதால் இந்த அமிலங்கள் நம் இரைப்பை மற்றும் குடல் சுவரை பதம் பார்த்து விடுகின்றன.இதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்படுகின்றது.

அதிக அளவான காரம் மற்றும் மசாலா உணவுகள் மற்றும் அதீத உணவுகள் கூட இது ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன

.நாம் அடிக்கடி பாவிக்கும் வலி நிவாரண மாத்திரைகள் நமக்கு அல்சரை உருவாக்கலாம்.ஸ்டெராய்டு மற்றும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை குறிப்பிட்டு சொல்லமுடியும்.

சுத்தம் இல்லாத ஆரோக்கியம் அற்ற உணவுகளை உண்பது மற்றும் சுகாதாரம் இல்லாத சுற்று சூழல் என்பவற்றால் நமது உணவு தொகுதியுல் புகுந்து விடும் ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனப்படும் நுண்ணங்கி உம நமக்கு குடலில் புண்களை ஏற்படுத்தி விடும்.

வலி நிவாரண மாத்திரை
புகை பிடித்தல் ,மது அருந்துதல் சுவையூட்டப்பட்ட குளிர் பானங்களை அதிகம் அருந்துதல் என்பனவும் அல்சர் வர காரணமாக அமைகின்றன.நமக்கு அதிக மன அழுத்தம் மற்றும் கவலைகள் இருப்பதும் அல்சரின் பாதிப்பினை அதிகரிக்க செய்யும்.தூக்கமின்மை, மனக்கவலை போன்ற காரணிகளும் குடற்புண் வருவதில் பங்களிப்பு செலுத்துகின்றன.

அல்சர் குணமாக என்ன சாப்பிட வேண்டும்?
1.வாழைப்பழம்
தினமும் உங்கள் உணவுக்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது அல்சர் புண்ணுக்கு மிக சிறந்த மருந்து ஆகும்.அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய பழங்களில் வாழைப்பழத்துக்கு பிரதான இடம் உண்டு.

வாழைப்பழம்
2.பாதாம் பால்
இது அல்சருக்கு மிக சிறந்த மருந்து ஆகும்.குறிப்பாக தோல் உரிக்கப்பட்ட்ட பாதாம் பருப்பில் செய்யும் பாதாம் பால் நல்ல பலன் தரும்.

பாதாம் பால்
3.முட்டை கோர்ஸ் முட்டை கோர்ஸ் இனை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீருடன் கேரட் சாறினை சேர்த்து அருந்தி வந்தால் அல்சர் புண் மிக விரைவில் குணமாகும்.

முட்டை கோர்ஸ்
4.வல்லாரை

வல்லாரை கீரை சாப்பிடுவதால் அல்சர் குணமாகும்.வல்லாரை கீரை சாப்பிடுவதன் மூலம் நியாபக சக்தி அதிகரிப்பதுடன் ஜீரண கோளாறுகளும் நீங்கும்.

வல்லாரை கீரை
5.தேன்
சாப்பாடுக்கு முன் இரண்டு கரண்டி தேனை தினமும் சாப்பிட்டு வர குடற் புண் மிக விரைவாக குணமாகும்.

6.தயிர்
புளிப்பு தன்மை இல்லாத தயிரை சாப்பிடுவதால் வயிறு குளிர்மை அடைவதுடன் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தூண்டுகிறது.இதன் மூலம் அல்சருக்கு சிறந்த தீர்வை பெறலாம்.

7.நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் வயிற்று புண்களுக்கும் சிறந்த தீர்வாக அமையும்.

அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன ?
1.காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.இவை வயிற்றின் அமில தன்மையை அதிகரிப்பதால் நோயின் தீவிரத்தை அதிகமாகி விடும்.

கோப்பி
2.காரமான அதாவது மிளகாய் பொடி அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் புளிப்பு தன்மையான பழங்கள் ,அதீத உணவுகள் மற்றும் அதிக எண்ணையில் பொரிக்கப்பட்ட உணவுகள் குடற் புண்ணுக்கான வீரியத்தை மேலும் அதிகப்படுத்தும்.அவற்றை தவிர்ப்பது சிறந்தது.

காரம் மற்றும் மசாலா
3.பால் குடிப்பது வயிற்று புண்ணுக்கு நல்லது என சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.அனால் பால் வயிற்றின் அமில தன்மையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது.எனவே பாலை தவிர்த்து விடுங்கள்.

பால்
4.சோடா மற்றும் சுவையூட்டப்பட்டபானங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் குடற் புண்ணை பாதிப்படைய செய்யும்.எனவே அவற்றை தவிர்ப்பது மூலம் சிறந்த பலனை பெறலாம்.

குளிர்பானம்
5.சிவப்பு இறைச்சி
இது அதிகமான கொழுப்பு மற்றும் புரத சத்தை கொண்டு இருப்பதால் நீண்ட நேரம் செரிமானம் அடைய எடுத்து கொள்ளும்.இதனால் அதிக நேரம் இரைப்பையில் இது தங்கி விடுவதால் அதிக அமிலம் சுரக்க வேண்டி ஏற்படும்.இதனால் வயிற்று புண்ணுக்கு நிறைய பாதிப்பு ஏற்படும்.

இரைப்பை புண் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு இருக்குமாயின் அது புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.சரியான சிகிச்சை அளிக்காத பட்சத்தில் அதில் இரத்த கசிவு ஏற்பட்டு மரணம் வரை கூட செல்லலாம் சரியான நேரத்தில் மருத்துவ ஆலேசனைகளை பெற்றுக்கொண்டு உங்கள் ஆரோக்கியமான வாழக்கைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.