Home இரகசியகேள்வி-பதில் நான் உடல் மெலிந்த பெண் , உடல்உறவுக்கு குண்டான பெண் ஏற்றவரா? ஒல்லியான...

நான் உடல் மெலிந்த பெண் , உடல்உறவுக்கு குண்டான பெண் ஏற்றவரா? ஒல்லியான பெண் ஏற்றவரா?

489

உடல் உறவுக்கு குண்டான ஆண் / பெண் ஏற்றவரா? ஒல்லியான ஆண் / பெண் ஏற்றவரா?

குண்டான ஆண் / பெண், ஒல்லியான ஆண் / பெண் என்பதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

1. உடலின் சேமிப்பாற்றல் அதிகமாகி, செலவாற்றல் குறையும்போது, உடல் குண்டாகலாம்.

2. தேவைக்கதிகமான உடல் பருமனாகும்படியான உணவை உட்கொள்ளுவதால் உடல் குண்டாகலம்.

3. உடலின் தேவையான ஆற்றலுக்கும், குறைவான உணவை எடுத்துக்கொள்ளும் போதும், உடலின் சேமிப்பாற்றல் குறைந்து, செலவாற்றல் அதிகமாகும் போதும் உடல் ஒல்லியாக இருக்கும். (இதற்கும் உடலுறவிற்கும் தொடர்பு இல்லை. உடலுறவு என்பது முழுக்க முழுக்க அவரவர் மனம் சம்மந்தப்பட்டதாகும்.)

அதிக நேரம் உடல் உறவில் நீடிக்க என்ன வழி?

பொதுவாக உடல் உறவில் ஆண் குறியில் இருந்து விந்து வெளிவரும் நேரம் பின்வரும் காரணங்களைப் பொறுத்தது.

1. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உடலுறவு கொள்ளும்போது முதல் முறையில் விந்து வெகு சீக்கிரமாகும். அதற்கு அடுத்த முறைகளில் நேரம் கழித்தும் வெளிவரும்.

2. குறுகிய கால இடைவெளியில் உடல் உறவு கொள்ளும் போது நேரம் கழித்தும், நீண்ட இடைவெளிக்கு பின் உடல் உறவு கொள்ளும்போது, சற்று விரைவாகவும் விந்து வரும்.

3. பரபரப்பு, அச்சத்துடன் உடல் உறவு கொள்ளும்போது விரைந்து விந்து வரும். இவையின்றித் தகுந்த அமைதியான சூழலில் நேரம் கழித்து வெளிவரும். உடலுறவின்போது உடனே விந்து வெளிப்பட்டாலோ, ஆண் குறி விரைப்புத் தன்மை குறைந்தாலோ நல்ல மருத்துவரை அணுக வேண்டும். போலி மருத்துவரைத் தவிர்க்க வேண்டும்.

மது அருந்திவிட்டு, அபின், பாக்கு மற்றும் போதைப் பொருட்கள் சாப்பிட்டு விட்டு உடலுறவு கொள்வதால் உறவு நேரம் நீடிக்கும் என்பது உண்மையா?

இவைகளினால் உறவு நேரம் நீடிக்கும் என்பது சரியன்று. மது, அபின், பாக்கு பொன்ற பொருட்களினால் உடலுக்கு கேடு ஏற்படும். அதன் காரணமாக நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் வர வாய்ப்பு அதிகம். அது மட்டும் அல்லாது உடலுறவில் ‘உறவு நேரம்’ நீடித்தலை விட மனதிருப்தியை பெறுவதே முக்கியம். மனத்திருப்திக்கு உறவு நேரம் நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எனவே உடலுக்கு விரோதமான பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகளை மனதில் கொண்டு அவற்றை தவிர்த்தலே நலம்.

நீலப்படங்களில் காணும் முறைகளில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? இது உடலுக்கு தீங்கா?

நீலப்படங்களில் வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்களைப் போல் பல்வேறு முறைகளில் உடலுறவுக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சில காட்சிகள் சர்க்கஸ் வேலை போன்றும் காட்டப்படும். மலவாய் உடல் உறவு போன்றவை களில் நோய் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

உடல் உறவினாலும், சுய இன்பத்தினாலும் இதயம் பாதிக்கப்படும் அல்லது பலவீனப்படும் என்பது உண்மையா?

இது உண்மையல்ல. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், சுய இன்பம், கனவு, ஒரு பால் உறவு போன்ற ஏதோ ஒரு வழியில் விந்து வெளியேறிவிடும். இதனால் இதயம் பாதிக்காது. மேற்குறித்த காரணங்களினால் குற்ற உணர்வு ஒருவர்க்கு ஏற்படுமானால் மனநிலை பாதிக்கப்படலாம்

திருநங்கை என்பவர் யார்?

திருநங்கை எனப்படுபவர்கள் இரு வகைப்படுவர்.

1. உண்மை திருநங்கை:- இவருக்கு ஆணுடைய கொட்டையும், பெண்ணுடைய கோசமும் (ovary) இருக்கும். ஆணா?, பெண்ணா? என்று சொல்லமுடியாத இவர்களை ஹோமோ என்பர்.

2 .திருநங்கையாக மாறியவர் :- இவர்கள் ஆணாகப் பிறந்து வளர்வார்கள். வளரும்போது ஏற்படும் மனக் கோளாறுகளாலும், சேர்க்கையாலும் தன் பிறப்பு உறுப்பை முற்றிலும் வெட்டிக் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் ஹிஜ்ரா எனப்படுவர். நம் சமூகத்தில் பார்க்கும் புடவை கட்டிய ஆண் குரலில் பேசும் அனைவரும் இந்த ரகத்தினரே.

இவ்வாறு பாலினம் மாற்றிக் கொள்பவர்களை மனோ தத்துவச் (உளவியல்) சிகிச்சையின் மூலம் மீண்டும் முந்தைய பாலினமாக மாற்றி விடலாம். சிலரை ஹார்மோன் (தாது) மருத்துவம் மூலம் மாற்றிவிட முடியும். இவர்களைக் கண்டால் வெறுத்து ஒதுக்காமலும், கேலி செய்யாமலும் இருக்க வேண்டும்.

. திருநங்கைகள் எப்படித் தங்கள் உடல் உறவுக்கு வழிவைத்து உள்ளார்கள்?

1. ஆண்களின் உறுப்பை தமது வாயில் வைத்து உறிஞ்சி (சப்புதல்) மூலமும்

2. ஆண்களின் உறுப்பை தமது கைகளால் கிளர்ச்சியூட்டி விந்தை வெளிவரச் செய்தல் மூலமும்.

3. ஆண் உறுப்பைத் தங்கள் மலவாயில் செலுத்தச் செய்தல்.

இவ்வகையில் உடல் உறவுத் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார்கள்.

மலம் கழிக்கும் முன்பும்-பின்பும், ஆண் குறியிலிருந்து விந்து வெளிவருமா? அப்படி வெளியேறுவதாக சிலர் கூறுகின்றனரே, அது உண்மையா?

பல ஆண்கள் மலம் கழிக்கும்போது தங்களது சிறுநீருடன் விந்து வெளியேறுவதாகவும் அதனால் தாங்கள் ஆண்மை இழந்து போகக் கூடும் என நினைத்து அஞ்சுகின்றனர்.

உடலியக்கம் பற்றிய அறியாமையால் ஏற்படுகின்ற அய்யம் தான் இது. முதன் முதலில் விந்தும். சிறுநீரும் ஒரே நேரத்தில் வெளிவர முடியாது என்ற அடிப்படை உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உடலுறவின் போதே அல்லது மற்ற நேரங்களிலோ விந்து வெளியேறும்போது சிறுநீர்ப்பையின் கழுத்து எனப்படும் (Bladder Neck) சிறுநீர்ப்பாதை தானே மூடிக் கொள்கிறது. விந்து முழுவதும் வெளியேறிய பிறகே இது திறக்கிறது.

சிற்சில வேளைகளில் சிறுநீருடன் சேர்ந்து பசை போன்ற ஒரு வெள்ளைத் திரவம் வரக்கூடும். இது விந்து அல்ல புராஸ்டேட் (ஞசடிளவயவந) சுரப்பி மற்றும் நீர்த்தாரையிலுள்ள சுரப்பி களின் (ருசநவாசயட ழுடயனேள) சுரப்பே ஆகும். நன்கு முனைந்து, முக்கி மலங்கழிக்கும்போது மலக்குடலின் விரிவு அழுத்தத்தால் புராஸ்டேட்டும், நீர்த்தாரை சுரப்பிகளும் அழுத்தப்பெற்று அதன் விளைவாக மேற்சொன்ன சுரப்பிகளில் இருந்து சில சொட்டுகள் வெண்மையான திரவம் வெளிவரக்கூடும். இதனால் விந்து இழப்போ, ஆண்மைக்குறைவோ ஏற்பட வழியில்லை.