Home ஆரோக்கியம் மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

30

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!
மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!
காலைக் கடன் என்பது அனைவருக்கும் மிக சாதரணமாக நடப்பது கிடையாது. சிலர் டீ குடித்தால் தான் சீராக போகும் என்பார்கள், சிலர் இரவு வாழைப்பழம் சாப்பிட்டால் தான் சீராக போகும் என்பார்கள். ஆனால், இவை யாவுமின்றி காலையில் உங்களுக்கு மலம் சீராக எந்த பிரச்சனையும் இன்றி கழிந்தால் தான் உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அதேப் போல, தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்பட்டு வந்தால் உங்கள் உடலிலும், உணவுப் பழக்கத்திலும் எதோ தவறு நடந்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதில் என்ன இருக்கிறது என்று எளிதாக இருந்துவிட வேண்டாம். எமிலி என்ற 16 வயது நிரம்பிய ஐரோப்பிய பெண் மலச்சிக்கல் காரணமாக தனது உயிரையே இழந்துள்ளார்….

எமிலி டிட்டெரிங்டன் (Emily Titterington) எமிலி, 16 வயது நிரம்பிய இளம் பெண். இவர் இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் எனும் பகுதியில் வாழ்ந்து வந்தார். எட்டு வாரங்களாக மலச்சிக்கலின் காரணத்தினால் மலம் கழிக்க முடியாது தவித்து வந்த எமிலி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதயம் செயலிழந்தது

தீராத மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த எமிலிக்கு இதயம் செயலிழந்ததால் தான் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணாம் அந்த தீராத மலச்சிக்கல் தான். இந்த பிரச்சனையால் உடலின் மற்ற பாகங்கள் பெரிதானதாலும், இதய குழி சுருங்கியதாலும் தான் எமிலியின் மரணம் ஏற்பட்டது.