Home சூடான செய்திகள் தினமும் உடலுறவு வாழ்நாள் அதிகரிக்கும்

தினமும் உடலுறவு வாழ்நாள் அதிகரிக்கும்

35

உடலுறவு என்ற வார்த்தையை கேட்டாலே சீச்சீ… அசிங்கம்… என்றுதான் இன்றும் கூறுகின்றனர் மக்கள்.

ஆனால், தினந்தோறும் செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும் என்றும் ஆண்களின் விந்தணு உற்பத்தி பெருக்கும் என்றும் ஆஸ்திரேலியா டாக்டர் ஒருவர் ஆய்வு நடத்தியுள்ளார்.

புதுமணத் தம்பதிகள் செக்ஸ் ஆர்வத்தால் தினசரி உறவில் ஈடுபடுகின்றனர். இந்த ஆர்வம் சில ஆண்டுகள் வரைதான் நீடிக்கிறது.

குழந்தை பிறந்தவுடன் கணவன்- மனைவிக்கு இடையே இடைவெளி ஏற்படுவதுடன் உடலுறவு உறவும் பாதிக்கப்படுகிறது. இந்த உறவு கூட சில நேரங்களில் சம்பிரதாயமாக மாறிவிடுகிறது.

மேலும், தம்பதிகளிடையே நோய், சண்டை, அலுப்பு உள்ளிட்ட காரணங்களால் செக்ஸ் உறவு பாதிக்கப்படுவதும், வேறு சில காரணங்களால் வேண்டுமென்றே சிலர் உடலுறவு உறவை தள்ளியும் போடுகின்றனர்.

இன்றைய வாழ்க்கையில் தினந்தோறும் செக்ஸ் உறவு கொள்ளும் கணவன்- மனைவிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது.

வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை மட்டுமே செக்ஸ் உறவை வைத்து கொள்வதை தம்பதிகள் வழக்கமாக வைத்துள்ளனர்.

தினந்தோறும் உடலுறவு கொண்டால், உடல்நலம் பாதிக்கப்படும், ஆண்மைக் குறைந்துவிடும் என்பதே இந்த இடைவெளிக்கு தம்பதிகள் சொல்லும் காரணமாகும்.

ஆனால், இது ஒரு தவறான கருத்து என நிரூபித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் ஒருவர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் அண்மையில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.

அதில், இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைப்பது தவறான கருத்து என்றும் தினமும் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் உடலுறவு உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது என்றும் வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிப்பதோடு, உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது என்கிறது ஆய்வு.

தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாகிறது என்றும் ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டி.என்.ஏ.க்கள் அதிகளவில் சேதமடைகின்றன என்றும் இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளது ஆய்வு கட்டுரை.