Home ஜல்சா தாய்வான் அர­சி­யல்­வா­தியின் மரண ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த 50 நடன மங்­கை­கள்

தாய்வான் அர­சி­யல்­வா­தியின் மரண ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த 50 நடன மங்­கை­கள்

26

தாய்­வானில் அர­சி­யல்­வாதி ஒரு­வரின் இறுதி ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கைகள் 50 பேர் வாக­னங்­களில் அணி­வ­குத்துச் சென்­றமை பெரும் எண்­ணிக்­கை­யான மக்­களை வியக்க வைத்­தது. இந்த ஊர்­வ­லத்தால் போக்­கு­வ­ரத்து நெரி­சலும் ஏற்­பட்­டது. தாய்­வானின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள சியாயி எனும் நகரைச் சேர்ந்த துங் ஹ்சியாங் என்ப­வரின் இந்த மரண ஊர்­வலம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது.

உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னரான துங் ஹ்சியாங் என்­பவர் கடந்த மாதம் தனது 76 ஆவயதில் கால­மானார். அவரின் இறுதி ஊர்­வ­லத்­தி­லேயே நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கை­களும் இவ்­வாறு அணி­வ­குத்து சென்­றனர்.சியாயி நகரில் நடை­பெற்ற இந்த இறுதி ஊர்­வ­லத்தில் சுமார் 200 வாக­னங்கள் பல கிலோ­மீற்றர் தூரம் அணிவ­குத்துச் சென்­றன.நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கைகள் 50 பேர் திறந்த வாக­னங்­களில் நின்­று­கொண்டு சென்­றனர்.

இவர்­களைப் பார்ப்­ப­தற்கு பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் வீதி­யோ­ரங்­களில் திரண்­டனர். இதனால் பல வீதி­களில் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்­டது.