Home ஜல்சா என் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது: சன்னிலியோன்

என் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது: சன்னிலியோன்

16

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான சன்னிலியோன் இந்தியில் அறிமுகமாகி கவர்ச்சியாக நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இவர் படங்களுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் சுவரொட்டிகளை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்வதும் அவ்வப்போது நடக்கிறது.

போலீசிலும் அடிக்கடி புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. சன்னிலியோனுக்கு கவர்ச்சி நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர் ஷாருக்கான் படத்தில் நடித்த சந்தோஷத்தில் இருக்கிறார். இதுகுறித்து சன்னிலியோன் அளித்த பேட்டி வருமாறு:-

“இந்தி படவுலகில் எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. ‘இன்னும் 2 மாதங்கள்தான் இங்கு இருப்பார் அதன்பிறகு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர் நாட்டுக்கே திரும்பி விடுவார்’ என்று பேசினார்கள். நீலப்படத்தில் நடித்து இருக்கிறேன் என்று என்னை பலரும் வெறுப்பாகவே பார்த்தனர். இந்தி பட உலகில் அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்றும் கூறினார்கள். பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே தயங்கினார்கள்.

இதனால் மனம் நொந்த நிலையில் இருந்தேன். இந்த நிலையில்தான் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நான் நடிப்பதற்கு ஷாருக்கான் எதிர்ப்பு சொல்லவில்லை. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினேன். இதன்மூலம் பெரிய நடிகர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறேன்.

பெரிய நடிகர்கள் படங்களில் நான் நடிக்க முடியாது என்று கேலி பேசியவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன். அவர்கள் மீது கோபம் வருகிறது. பெரிய கதாநாயகர்கள் என்னை அவர்கள் பக்கம் நெருங்க விடமாட்டார்கள் என்று சொன்னவர்கள் கருத்தை இது பொய்யாக்கி இருக்கிறது. இனிமேல் மற்ற கதாநாயகர்களும் என்னுடன் நடிக்க ஆட்சேபிக்க மாட்டார்கள்.

2 மாதத்தில் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் என்றார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் 20 ஆண்டுகள் இங்கேதான் இருப்பேன். கடவுள் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. எனது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது”.

இவ்வாறு சன்னிலியோன் கூறினார்.