Home சமையல் குறிப்புகள் சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை

34

captureதேவையான பொருட்கள் :

மீன் – 8 துண்டுகள் (துண்டு மீன்)
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

மசாலாவிற்கு…

வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 இன்ச்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
வர மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

* வாணலியை அடுப்பில் வைத்து சூடாதும் அதில் 1 ஸ்பூன் ஊற்றி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த மசாலாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து மீனின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

* இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை ரெடி!!!