Home ஜல்சா மாணவி முன் சுய இன்பம் நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் போராட்டம்

மாணவி முன் சுய இன்பம் நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் போராட்டம்

200

ஜல்சா செய்திகள்:சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் நேற்றிரவு ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்லூரி நுழைவு வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாஸ்டலில் உள்ள லிப்ட்-ல் மாணவி ஒருவரின் முன்னே, துப்புரவு ஊழியர் சுய இன்பத்தில் ஈடுபட்டார் என்பதும், இதனை கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்தும், அவர்கள் அதனை பாராமுகமாக எடுத்துக்கொண்டனர் என்பதே மாணவிகளின் போராட்டத்துக்கு காரணம்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் ஹாஸ்டலில் நான்காவது மாடியில் உள்ள தனது அறைக்கு லிப்ட் மூலம் செல்கையில், அதில் இருந்த வடமாநில துப்புரவு ஊழியர் மாணவியை பார்த்ததும், அநாகரிகமாக சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே, லிப்ட்-ஐ நிறுத்த அந்த மாணவி முயற்சிக்கையில், அந்த வாலிபர் தடுத்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு ஊழியர்

பின்னர், தன்னால் முடிந்த அளவு உரக்கக் கத்திய அந்த மாணவி, துப்புரவு ஊழியருடன் சண்டையிட்டு லிப்ட் நின்றதும் வெளியே தப்பித்து வந்துள்ளார். இதனை அடுத்து, மாணவிகள் குழுவாக இணைந்து ஹாஸ்டல் வார்டனிடம் புகார் அளித்தனர். மேலும், லிப்ட் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், புகாரை பெற்றுக்கொள்ளவே தாமதித்த வார்டன் தங்களது உடைகளை மாற்ற வேண்டும், குட்டையான ஆடைகளை அணிந்தால் இதுபோலதான் நடக்கும் என்று கூறியதாக மாணவிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக எதுவும் பேசக்கூடாது, அமைதியாக இருக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையே மாணவிகள் ஒன்றினைந்து போராட்டம் நடத்த காரணமாகியுள்ளது.