Home ஜல்சா 6 ஆண்டுகளாக 3,000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவி சிறுமியின் கண்ணீர் கதை..

6 ஆண்டுகளாக 3,000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவி சிறுமியின் கண்ணீர் கதை..

41

child-abuse-600-jpg-08-1470629569லண்டன்: ஆறு ஆண்டுகளில் 3000 முறை அப்பாவி சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியை சீரழித்த காமுகனை லண்டனின் போலீசார் கைது செய்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த கெயித் டவுடெண்ட் என்ற அந்த காமுகனின் குழந்தைகளை பாராமரிக்கும் பணிக்காக அவனுடைய வீட்டுக்கு இந்த சிறுமி சென்றுள்ளார். 10 வயதில் கெயித் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு அன்றிலிருந்து தொடர்ந்து ஆறு வருடங்களாக சித்ரவதை தொடங்கிவிட்டதாம். அந்த சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரத்திற்கு அந்த காமுகன் உட்படுத்தியுள்ளான்.

அவனுடைய மனைவி அலுவலக வேலைகளில் எப்போதும் பிசியாக இருப்பதால்,இவன் செய்யும் கொடுமைகளை கவனிக்கவில்லை. சிறுமியின் பத்து வயதிலிருந்து 16 வயது வரை அந்த காமுகனால் சீரழிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். ஒருமுறை கெயித்தின் வீட்டிலிருந்து வந்த சிறுமியின் பின்புறத்தில் மரத்துண்டுகள் ஓட்டியிருப்பதை அவரின் தந்தை பார்த்துள்ளார். இது குறித்து விசாரித்த போதுதான்,அந்த மிருகத்தின் வெறியாட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தினசரி இரண்டு முறை அல்லது நள்ளிரவு நேரம் என கடந்த ஆறு வருடங்களில் சுமார் 3000 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்தச் சிறுமி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். தனக்கு மாதவிடாய் எப்போது முடியும் வேண்டும் என அந்த காமுகனிடம் அந்த சிறுமி தெரிவிக்க வேண்டுமாம். ஒருவேளை மாதவிடாய் தொடர்பாக பொய் கூறினால்,அதனையும் கண்டுபிடித்து தனது கொடுமைகளை செய்யத் தொடங்கி விடுவானாம். தற்போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிற்காக கெயித்துக்கு 19 வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் அந்த சிறுமி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். என் சிறுவயது காலத்தை முழுக்க அந்த மிருகம் அழித்து விட்டது. அவன் ஜெயிலுக்கு சென்ற பின்னர்தான் எனக்கு உண்மையான விடுதலை கிடைத்துள்ளது என்று கூறும் சிறுமி, இனிதான் என்னுடைய எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.