Home காமசூத்ரா செக்ஸ்சின் முழு திருப்தி அடைவதே நோக்கம்!

செக்ஸ்சின் முழு திருப்தி அடைவதே நோக்கம்!

132

ஆணும்,பெண்ணும் திருப்தி அடைவதே செக்சின் நோக்கம். இதில் ஒருவர் திருப்தி
அடைந்து மற்றவருக்கு இல்லையென்றால் அதில் நிறைவு இருக்காது. இதில்
முக்கியமாக ஆண் தான் பெண்ணுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். காரணம்,
பொதுவாகவே ஆண் பெரும்பாலும் உச்சக்கட்டத்தை விரைவிலே எட்டி விடுகிறான்.

ஆனால்
பெண்ணைப் பொருத்த வரை அப்படி இல்லை. அவளுக்கு வெகு நேரம் பிடிக்கிறது. இது
இயற்கையின் நியதி போலும். எனவே ஆண் தான் நிதானமாக ஈடுபட்டு அவளது
ஆசையையும் நிறைவேற்ற வேண்டும்.

அதற்கு
முக்கியமான விஷயம், முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவது. அதாவது செக்ஸ்
பண்ணும் முன் சிறிது நேரம் பெண்ணைத் தயார் நிலைப்படுத்த வேண்டும். அவளது
அங்கங்களில் உணர்ச்சிமிக்க பாகங்களை விரல்களால் தொட்டோ, தடவியோ, தூண்ட
வேண்டும்.

அப்போது தான் அவள்
உறவுக்கு முழுமையாகத் தயாராக முடியும். இதனால் அவள் விரைவாகத் தயாராவதோடு
கலவியிலும் முழு மனதுடன் ஈடுபடுவாள். விரைவாக உச்சக்கட்ட இன்பத்தையும்
எட்டுவாள்.

1) கலவியைப் பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஒரு திருப்தி உண்டாகும்

2) அடிக்கடி கலவியில் ஈடுபடுவதால் காம இச்சையானது தணிந்து ஒரு வகைத் திருப்தி கிடைக்கும்

3) மனதிற்குப் பிடித்தவருடன் ஈடுபடுவதால் உருவாகும் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி

4) தனக்குப் பிடித்தவரை மனதில் எண்ணிக்கொண்டு மற்றவருடன் உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் திருப்தி

உணர்வுகளின்
உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி
அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ,
புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம்
எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல்
அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான்
உண்மை.

பாலுணர்வுத் தூண்டலின்
போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான்
செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி
அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது
பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை
தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.

மூளையில்
இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின்
மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து
இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள்,
மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன.
இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை
இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.

ஆனால்
உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது
தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில
சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள்
மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும்
போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.