Home அந்தரங்கம் செக்ஸ் உடலுறவில் அவ்வப்போது கொடுக்கும் முத்தங்கள்

செக்ஸ் உடலுறவில் அவ்வப்போது கொடுக்கும் முத்தங்கள்

36

தவறு என்பது இயற்கையாக நிகழக்கூடிய விஷயம் தான். யாரும் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. அது படுக்ககையறை சமாச்சாரங்களாக இருந்தாலும் அப்படித்தான். யாராவது தெரிந்தே அந்த விஷயங்களில் தவறு செய்வார்களா?

எல்லா ஆண்களும் உடலுறவு விஷயத்தில் பொதுவாக செய்யும் தவறுகள் சில உண்டு. அவற்றை என்னவென்று அறிந்து கொண்டாலே அதுபோன்ற தவறுகள் நிகழாமல் கட்டிலில் உங்களால் ஜமாய்க்க முடியும்.

பெரும்பாலான ஆண்களுக்கு படுக்கையில் இருக்கும் பொழுது பெண்களிடம் எப்படி பேச வேண்டுமென்று தெரிவதே இல்லை. மற்ற நேரங்களில் பேசுவது போன்றே படுக்கையிலும் பேசுவதைத் தவிர்த்திடுங்கள். படுக்கையறையில் உங்களது மென்மைத்தன்மையை வெளிப்படுத்துங்கள். வன்மையாக நடந்து கொள்ளாதீர்கள்.

சில ஆண்கள் உடலுறவு கொள்ளும் நேரத்தில் பேசுவதையே தவிர்த்துவிடுவார்கள். அது முற்றிலும் தவறு. உங்களுடைய இதமான அன்பான வார்த்தைகள் உங்கள் துணையை சௌகரியமாக இருக்கச் செய்யும். இல்லாவிடில் அவர்கள் இயல்பாக உங்களிடம் உறவு கொள்ள யோசிப்பார்கள்.

அதனால் படுக்கையறையில் இருக்கும்பொழுது அவர்கள் செய்யும் செயலை பாராட்டுங்கள். அவர்களுக்குத் தெரியாததை சொல்லிக் கொடுங்கள். ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கற்றுக் கொடுக்கும் போது தான் இருவரும் உறவில் சுகம் காண முடியும்.

முத்தம் கொடுப்பது மிக முக்கயமான ஒரு விஷயம். சிலர் உடலுறவின் போது நேரடியாக உறவில் ஈடுபடத் துவங்கிவிடுவதுண்டு. ஆனால் உடலுறவில் அவ்வப்போது கொடுக்கும் முத்தங்கள் தான் இன்னும் அதிக கிளர்ச்சியைத் தூண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இது இருவருக்குமிடையேயான உறவில் பாலமிடும்.

உடலுறவின் போது ஆண்கள் தங்களுடைய ஆர்வம், வேகம் மற்றும் குறும்புத் தனத்தால் என்ன செய்கிறோம் என்பதையே மறந்துவிடுவார்கள். அப்படி மறந்து செய்யும் செயல்களில் ஒன்று தான் தன்னுடைய ஒட்டுமொத்த எடையையும் பெண்ணின் மீது இறக்கிவிடுவது. அப்போது அவர்களால் மூச்சு கூட விடமுடியாமல் மிகவும் அசௌகரியப்படுவார்கள்.

பெண்களில் சிலர் உடலுறவுக்கு முன் ஆண்களைக் கடித்து சீண்டிக் கொண்டே இருப்பார்கள். அப்படி செய்தால் அவர்கள் உங்களுடன் கட்டில் விளையாட்டுக்கு ஆயத்தமாகி விட்டார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தைப் புரிந்து கொள்ளாமல் மிஸ் பண்ணிடாதீங்க…

இவையெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் சொதப்பாமல் கவனமான இருந்தால் உங்களுக்குப் பேரின்பம் கிட்டுவது உறுதி