Home அந்தரங்கம் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கியக் கட்டமாக இருக்க வேண்டும்.

செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கியக் கட்டமாக இருக்க வேண்டும்.

90

இதற்கு ஆண் அல்லது பெண் மிகவும் பொறுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு தொட்டாலே உணர்ச்சி தூண்டப்பட்டுவிடும்.

இன்னும் சிலருக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். தன்னுடைய இணை எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அதன்படி அவரை அணுகி இன்பத்துக்கு அழைப்பதுதான் சரியான வழியாகும்.

ஆரம்ப காலத்தில், செக்ஸ் என்பது குழந்தை பெறுவதற்கான செயல்பாடாகத்தான் கருதப்பட்டது. மருத்துவமும் அப்படித்தான் பார்த்தது.

பிறகுதான், செக்ஸ் செயல்பாடுகள் பிரித்து அறியப்பட்டன. அவற்றில் முதலாவது, செக்ஸ் ஆர்வம். அடுத்தது, செக்ஸ் செயல்பாடு. மூன்றாவது, உச்சகட்டமான விந்து வெளியேற்றம் என்று பிரித்தனர்.

இப்போது உச்சகட்டத்துக்கு அடுத்த ரிலாக்ஸ் நிலையையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

அதாவது, செக்ஸ் ஆர்வத்தின்போது மனத்தில், உடலில் தோன்றிய அத்தனை டென்ஷனில் இருந்தும் விந்து வெளியேற்றம் மூலம் உச்சகட்டத்தில் விடுதலை கிடைக்கிறது.

இந்தச் சமயத்தில், ஆண் வெறுமனே ரிலாக்ஸ் அனுபவித்தாலும், பெண்களால் மேலும் மேலும் உச்சகட்டம் அடைய வாய்ப்பு இருக்கிறது என்பதால், இதுவும் முக்கிய நிலையாகக் கருதப்படுகிறது.

பெண்ணை அதிக அளவில் உச்சகட்டத்துக்கு ஆளாக்க வேண்டியது ஆணின் கடமை.

தனக்கு உச்சகட்டம் வந்தபிறகு, கலவியில் இருந்து ஒதுங்கிக்கொள்ளாமல், அவளை செக்ஸ் உறவில் முழுமையான திருப்தி அடையச் செய்ய வேண்டும் என்கிறது செக்ஸ்மருத்துவம்.

பெண்ணைத் திருப்தி அடையச்செய்வது நீண்டதொரு பயணம் என்பதால், முதலில் ஆண்களின் உச்சகட்ட இன்பத்தைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்களில் பெரும்பாலோர் அவசரக்காரர்கள், சுயநலமிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏன் இந்த நிலை என்றால் அவர்களது உடல் அமைப்பு அப்படித்தான் இருக்கிறது என்ற உண்மையைப் பெண் அறிந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் அந்த உடலைத் தன்வசப்படுத்த முடியும்.

செக்ஸ் ஒரு கலை என்பதை அறிந்து, அதை முறைப்படி முழுமையாக அனுபவிக்கும்போது கிடைக்கும் இன்பம் இருக்கிறதே, அதுதான் இந்தப் பூவுலகின் சொர்க்கம்.