Home சூடான செய்திகள் உடலுறவில் பெண்களின் பங்கு என்ன?

உடலுறவில் பெண்களின் பங்கு என்ன?

51

தம்பதியர்களுக்குள் நடக்கும் ஒரு அழகான விஷயம் உடலுறவு..! இந்த நிகழ்வில், ஆணும் பெண்ணும் உடலாலும் மனதாலும் ஒன்றிணைந்து, மகிழ்வாக நிறைவாக உணர்வார்கள். அப்படி தம்பதியர் இருவருக்கும் மனநிறைவு கிடைக்க, தம்பதியர் ஒருவரையொருவர் மகிழ்விக்க வேண்டும்; இன்பமளிக்க வேண்டும். இந்த இன்பமயமான நிகழ்விற்கு மனைவியான நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி அறிவீரா?

உடலுறவில் கணவரை மகிழ்விக்க மனைவியான நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

அவசரம் வேண்டாம்..!

உடலுறவில், பெண்கள் தங்கள் கணவன் இன்பமடைவதையே மிகவும் முக்கியமாகக் கருதி, அதிகம் ஒத்துழைப்பு அளிப்பார்கள். இது கணவர்களை அவசர அவசரமாகத் தங்கள் உடலுறவை முடித்துவிட தூண்டுகிறது. உடலுறவில் அவசரத்துக்கு இடமே இல்லை என்பதை எடுத்துக்கூற வேண்டியது மனைவியரின் கடமையாகும். நேரடியாகக் கூற முடியாத பட்சத்தில், கணவரைப் புற விளையாட்டுக்களில் ஈடுபடத்தூண்ட வேண்டும்.

அளிப்போம்! பெறுவோம்..!

கணவரின் ஆணுறுப்பைத் தொடுவது, உங்கள் பெண்ணுறுப்புக்குள் நுழைப்பது போன்றவற்றை முடிந்த வரை தள்ளிப்போட வேண்டும். மேலும் உங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதை கணவருக்கு சொல்லித்தருவதுடன், கணவரின் உடலில் எங்கெங்கு தொட்டால் அதிக இன்பம் பெறுகிறார், என்பதைக் கேட்டறிந்து, அதனை செயல்படுத்த முயல வேண்டும்.

உடலுறவு என்பதே இன்பம் அளித்து, இன்பம் பெறும் நிலையாகும்; ஆகையால், எவ்வகையில் இன்பம் கேட்டாலும், அதைக் கொடுப்பதில் தவறில்லை.

நீங்களும் தொடங்கலாம்..!
மேலும் ஆண்கள் தான் முதலில் உடலுறவு விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையில்லை; நீங்களே முன்வந்து கணவரை சூடேற்ற முயலலாம்..! கணவருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில், அவருக்கு மிக எளிதில் உடலுறவு உணர்வைத் தூண்டிவிட முடியும்.

செய்ய வேண்டியவை..!
உங்கள் கணவருக்கு விருப்பமான உடைகளை அணிதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளைக் காட்டுதல், நெருங்கி வந்து உறுப்புகளைத் தட்டி எழுப்புதல், போன்றவை மூலம் கணவரை சூடேற்றி, உடலுறவிற்கு அழைத்து, அதில் ஈடுபடச் செய்ய முடியும்.

உங்கள் கணவர் விரும்புவதை எல்லாம் செய்யும் பட்சத்தில், அவர்கள் விரைவில் உங்கள் அடிமையாகவே மாறி, உங்களையே சுற்றிச்சுற்றி வருவார்கள்; இவ்வாறெல்லாம் செய்து கணவரின் மனத்தைக் கவர்ந்துவிட்டால், உங்கள் தாம்பத்திய வாழ்வு தங்கு தடையில்லாமல், இன்ப வெள்ளத்தில் நீந்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..!