Home பெண்கள் தாய்மை நலம் பெண் கருக்கலைப்பின் கர்ப்பம் தரிக்க என்ன செய்யவேண்டும்?

பெண் கருக்கலைப்பின் கர்ப்பம் தரிக்க என்ன செய்யவேண்டும்?

38

கருக்கலைப்பு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், பல நேரங்களில் அதுமட்டுமே ஒரு பெண்ணின் இறுதித் தேர்வாக அமைந்து விடுகிறது இல்லையா?. மனிதகுல சமூகக் கட்டமைப்பின்படி ஒரு பெண் பொருத்தமற்ற சூழ்நிலையில் அல்லது முறையில்லாமல் கர்ப்பமடைந்தால், கண்டிப்பாக அது இந்த சமூகத்தின் பார்வைக்குத் தேவையற்றதாக மாறிவிடுகிறது. அந்த நேரங்களில் கருக்கலைப்பு அவசியமானதாகத் தோன்றுகிறது

பெரும்பாலான நேரங்களில் கருவுற்ற குழந்தையின் உடல் வளர்ச்சியில் குறையிருந்தாலும் பெண்கள் கருக்கலைப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். காரணம் என்னவென்றாலும் , கருக்கலைப்பு என்னும் நிகழ்வு பெண்ணின் வாழ்வில் ஒரு அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கருக்கலைப்பு
இறுதியில், ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை பெறத் தயாராகும் நேரம் வருகிறது. பெரும்பாலான பெண்கள் முந்தய கருக்கலைப்பு தனது தற்போதைய கர்ப்பமடைவதில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குழப்ப நிலையை அடைவதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், அதுபற்றிய ஒரு விழிப்புணர்வு தேவையான அளவு இன்னும் பரப்பப்படவில்லை.

உண்மையில், கருக்கலைப்பு பாதுகாப்பான மற்றும் சரியான தொழில்முறை அமைப்பில் செய்யப்பட்டால், அது எதிர்கால கர்ப்பத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தக்கூடாது. ஆனால் கருக்கலைப்பு செய்தபின் உள்ள இடைவெளி மற்றும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை ஆகிய காரணிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும். கடந்த கால கருக்கலைப்பு, வரப்போகும் கர்ப்பத்தை எவ்விதம் பாதிக்கும் என்பதை பல்வேறு வழிகளில் விவாதிக்கலாம் வாருங்கள்,

வாய்ப்புகளை பாதிக்குமா?
கருக்கலைப்பு செய்த பெரும்பாலான பெண்கள் (காரணம் என்னவாக இருந்தாலும் ), எளிதாக கர்ப்பம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.கர்ப்பம் ஒரு வழக்கமான செயல்முறை என்றாலும், கருக்கலைப்புக் கூட சில சிக்கல்களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அரிதான சந்தர்ப்பங்களில்,கருக்கலைப்பு முறையாக நடக்காமல் பெண்ணின் கருத்தரிப்பு பாதிக்கப்படலாம். அதிர்ஷ்டவசமாக, இந்த சிக்கல்களை பொருத்தமான சிகிச்சை மூலம் எளிதில் சரிசெய்யலாம்.

சிக்கல்கள் சில அரிதான நேரங்களில், இந்த மாதிரியான சிக்கல்கள் ஏற்படலாம். அது நீங்கள் கர்ப்பிணியாவதைத் தடுக்கலாம். கர்ப்பமே அடைந்தாலும் அதைத் தங்க விடாமல் கருச்சிதைவு நிலையை நோக்கி நகர்த்தலாம். பெரும்பாலும் தோன்றும் பிரச்னை செர்விக்ஸ்(கருப்பை வாய்) மிகவும் பலவீனமடைதல் மற்றும் தகுதியின்மை நிலைக்குத் தள்ளப்படுவதேயாகும். இதற்குக் காரணம், கருக்கலைப்பு நேரத்தில் கருவை அகற்ற செர்விக்ஸ் கட்டாயப்படுத்தி விரிக்கப்படுவதேயாகும்.கருப்பை வாய் மிகவும் இறுக்கமாக இருந்தால் அல்லது கட்டாயப்படுத்தி அதை விரித்தால் அது கருப்பைக்கு சேதத்தை ஏற்படுத்தும். நீங்கள் தகுதியற்ற அல்லது பலவீனமான செர்விக்ஸைக் கொண்டிருந்தால், உங்களுக்கு கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய நிலையின் பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் . கர்ப்பகாலத்தில் செர்விக்ஸை தைத்து வைப்பதன் மூலம் டாக்டர்கள் இத்தகைய நோயாளிகளுக்கு உதவுகிறார்கள்.

பலமுறை கருக்கலைப்பு பல கருக்கலைப்புகளுக்கு உட்பட்ட நீங்கள் கர்ப்பமாக நினைக்கும் போது சில சிக்கல்களை அந்த கருக்கலைப்புகளின் அதிகப்படியான எண்ணிக்கையானது ஏற்படுத்தும். தொடர்ச்சியான கருக்கலைப்புகள் தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கி நாம் திட்டமிடும் கர்ப்பத்தைத் தடுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், பல கருக்கலைப்புகளால் ஏற்படும் தொற்று கருமுட்டைக்(fallopian tube) குழாயை அடைத்து விடும். இந்த அடைப்பானது கரு முட்டையோடு விந்துக்கள் சேர்வதை தடுக்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், வெற்றிகரமாக கருத்தரிக்க டெஸ்ட் டுயூப் பேபி (IVF) சிகிச்சை தேவைப்படலாம்.

கருக்கலைப்பு செய்திருந்தால்? கருக்கலைப்பின்போது ஒரு அசாதாரண வலி தோன்றினால் கருக்கலைப்பு உரிய முறையில் நடக்கவில்லை என்பது உங்களுக்கே தெரியும். பொதுவாக சிறிதளவு வலியானது கருக்கலைப்புக்குப்பின் தோன்றுவது இயல்பு ,​​வலுவான மற்றும் தாங்க முடியாத வலி தோன்றினால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. கரு முற்றிலும் அகற்றப்படாததே இந்த வலிக்குக் காரணம். எந்த நீடித்த இரத்தப்போக்கையும் புறக்கணிக்கப்படக் கூடாது, ஏனெனில் இது இரத்த சோகை மற்றும் பலவீனத்தை எளிதாக ஏற்படுத்திவிடும். இந்த வலி, கருக்கலைப்பின் போது தோன்றும் தொற்றின் காரணமாகக் கூட இருக்கலாம். இம்மாதிரியான தருணங்களில் கருவுறுதலில் உங்களுக்கு பிரச்சனையிருந்தால், நம்பிக்கையை இழக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். கருத்தரித்தலின் மாற்று வழிமுறைகளையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் வெற்றிகரமாக கர்ப்பமாக உதவும் வகையில் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்யலாம்.

எவ்வளவு காலத்தில் கர்ப்பமாகலாம்? ஒரு கருக்கலைப்பைத் தொடர்ந்து உடனே கர்ப்பமாதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், சிலசமயங்களில் அபாயகரமானதும் கூட. ஒரு கருக்கலைப்பு உங்கள் உடலில் நிறைய இழப்பை ஏற்படுத்துகிறது. மருந்துகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கருக்கலைப்பில் , பயன்படுத்திய மருந்துகள் கருப்பையை மென்மைப்படுத்துகிறது மற்றும் சுருங்கச்செய்கிறது. இது சிசுவை நீக்குகிறது. இந்த முறை நாள்முழுவதுக்குமான இரத்தப்போக்கினை ஏற்படுத்துகிறது . இதுவே அறுவைசிகிச்சை முறையென்றால் , மருத்துவர் உறிஞ்சுதல் முறையைப் பயன்படுத்துவார் , பின்னர் அதிக ரத்தத்தைத் தடுக்க இரத்த நாளங்களை மூடிவிடுவார். இதில் எந்த முறையைப் பயன்படுத்தினாலும் , பெண்ணிற்கு நிறைய இரத்தப்போக்கு, ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் இழப்பு நிச்சயம். இம்மாதிரியான நேரங்களில் உங்கள் உடல் ஆரோக்கியமான கர்ப்பத்தை ஆதரிக்கும் நிலையில் இருக்காது. கருக்கலைப்பிற்கு பின் குறைந்தது 6 மாதங்கள் வரை காத்திருப்பது அடுத்த கருத்தரித்தல் திட்டமிடலுக்குச் சிறந்தது. இந்த இடைவெளியானது கருப்பை குணமடையவும் ஆரோக்கியமாகவும் மாற உதவும்.

கர்ப்பம் அடைவது எப்படி? கருக்கலைப்புக்குப் பிறகு ஒரு ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்கும் முன் உள்ள ஆபத்துகள் காரணமாக, குழந்தைக்குத் திட்டமிடும் போது உங்கள் மருத்துவரிடம் பேசுவதும் முக்கியம். கருக்கலைப்பிற்கு பிறகு உங்கள் கருப்பை முழுவதுமாக குணமடைந்ததா இல்லையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். நீங்கள் சரியான இடைவெளி விட்ட பிறகும் கர்ப்பமாக திட்டமிடப்படுவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை அணுகுதல் சிறந்தது. கர்ப்பமடைய நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும், இல்லையெனில் தேவையான சப்லிமண்ட்ஸ்களை வழங்கவும் டாக்டர் உங்களுக்கு உதவுவார். ஒரு கருக்கலைப்புக்குப் பிறகு வெற்றிகரமாக கர்ப்பமாக, பல நேரங்களில் சரியான தகவல்களைப் பெறுவது மிக அவசியம். கருக்கலைப்புக்குப் பிறகு, கருத்தரித்தல் என்பது மிகவும் எளிதானதல்ல என்று உங்களுக்கு தோன்றும்.கருக்கலைப்புக்கு பிறகு கருத்தடை மாத்திரைகள் உபயோகித்தல் இருந்தால் இது மிகவும் உண்மை எனத்தோன்றும். ஹார்மோன்கள் இயல்பாவதற்கும் , உங்கள் கருத்தரித்தலுக்கு உதவுவதற்கும் சிறிது காலம் ஆகும். மருத்துவர்களே நிராகரித்துவிட்டபின் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதே மிக முக்கியம்.