Home ஆண்கள் விந்தணுக்கள் பெண்களின் கருப்பைக்குள் உயிர்வாழும் நாட்கள்

விந்தணுக்கள் பெண்களின் கருப்பைக்குள் உயிர்வாழும் நாட்கள்

227

ஆண்மை பெருக்கம்:பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது. விந்தணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் முக்கியமானது. அது எந்த இடத்தில வெளிப்படுகிறது என்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் மாறுபடும்.

உதாரணத்திற்கு ஆண்கள் சுயஇன்பம் காணும்போது வெளிப்படும் உயிரணுக்கள் வெளியேறிய உடனே இறந்து விடும். உயிரணுக்கள் பெண்களின் உடலுக்குள் சென்றாலும் கூட அவற்றின் ஆயுட்காலம் என்பது நிர்ணயிக்க இயலாத ஒன்று. இந்த பதிவில் உயிரணுக்களை பெண்கள் உடலில் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

ஒரு பெண் கர்ப்பமடைய ஒரே ஒரு உயிரணு போதும். கோடிக்கணக்கான உயிரணுக்கள் வெளியே வரும்போது அதில் எத்தனை உயிரணுக்கள் பெண்களின் கருமுட்டையை சென்று அடைகிறதோ அதனை பொறுத்தே கர்ப்பமும், குழந்தைகளின் எண்ணிக்கையும் இருக்கும். ஒவ்வொரு முறையும் உயிரணுக்கள் வெளியேறும்போது அதில் கிட்டத்தட்ட 100 மில்லியன் உயிரணுக்கள் வெளியேறுகிறது. இந்த கோடிக்கணக்கான உயிரணுக்களில் இருந்து ஆரோக்கியமான ஒன்றோ அல்லது இரண்டு உயிரணுக்கள் தான் பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக பாலோப்பியன் குழாயை கடந்து பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருவாக உருவாகிறது.

புகைப்பழக்கத்தை தவிர்த்தல் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது உங்களுடைய உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க கூடும். மேலும் அளவாக மது அருந்துவது, சத்தான உணவுகளை சாப்பிட்டு எடையை சீராக பராமரிப்பது, இறுக்கமான உடைகளை அணியாமல் இருப்பது போன்றவை உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்கும்.

உயிரணுக்கள் பெண்ணுறுப்புக்குள் சென்ற பிறகு 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வாய் உயிருடன் இருக்கும். பல அணுக்கள் ஆரம்ப நிலையிலேயே இறந்துவிடும். மீதமுள்ள உயிரணுக்களில் ஒன்றே கர்ப்பம் உண்டாக்கும் ஆற்றல் உடையதாக உள்ளது.

இது கருப்பைக்குள் போதுமான அளவு வெப்பமும், திரவமும் உள்ளபோது நடக்க கூடியது. சொல்லப்போனால் கர்ப்பப்பை திரவம் கருமுட்டை உற்பத்தியாவதற்கான அறிகுறியாகும். இதுபோன்ற சூழ்நிலையில் உயிரணுக்கள் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.

வெளிப்புறம் என்று வரும்போது உயிரணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் குறைவுதான். மனித உடலில் உள்ள வெப்பநிலை இல்லாத இடங்களில் உயிரணுக்களால் நீண்ட நேரம் உயிருடன் இருக்க இயலாது. அவை வெளியே வந்தவுடனேயே இறந்துவிடும். இல்லையெனில் சூழ்நிலை மற்றும் இடத்தை பொறுத்து சில நிமிடங்கள் உயிருடன் இருக்கும்.

பெண்களின் உடலில் உயிரணுக்களின் ஆயுளை அதிகரிப்பது என்பது இயலாது என்று. அதற்கு பதிலாக ஆண்கள் தங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்க முயலலாம். ஆரோக்கியமான உயிரணுவிற்கு ஆயுள் அதிகம். உயிரணுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்வருவனற்றை முயற்சி செய்து பார்க்கவும்.

இயற்கை மூலிகையான அஸ்வகந்தா உயிரணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியது. ஆய்வுகளின் படி இது உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து உபயோகித்து வரும்போது உயிரணுவின் உற்பத்தி மட்டுமின்றி அவற்றின் தரமும் உயர்வதை காண்பீர்கள்.

லேப்டாப்பை உங்கள் மடியில் வைத்து உபயோகிப்பதை தவிருங்கள். அதிலும் வைபை இயக்கத்தில் உள்ள லேப்டாப் உங்கள் மடியில் இருக்கும்போது அதிக ரேடியோ அலைகளால் உங்கள் உயிரணுக்கள் வெகுவாக பாதிக்கப்படும். அதேபோல உங்கள் செல்போனையும் பேண்ட் பக்கத்திற்குள் வைப்பதை தவிருங்கள்.

உயிரணுக்களை பொறுத்த வரையில் சூடான நீரை காட்டிலும், குளிர்ந்த நீர் குளியல் அதிக நன்மையை வழங்கக்கூடியது. குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு நல்ல மனநிலையை வழங்குவது மட்டுமின்றி உங்களுடைய உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.