Home பெண்கள் தாய்மை நலம் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் கருப்பை நோய்

பெண்களுக்கு ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் கருப்பை நோய்

51

தாய் நலம்:முன்பு, லட்சத்தில் ஒருவருக்கு என்னும் அளவுக்கு, மிகவும் அரிதாக இருந்த நோய்கள் எல்லாம், இன்று, மிகவும் பரவலாக, பத்தில் ஒருவருக்கு என்று சொல்லும் அளவுக்கு, வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விட்டன. புற்று நோய், கருப்பை கட்டிகள் இவையெல்லாம் தலைவலி, காய்ச்சல் போல, மிகவும் சாதாரணமாக ஆகி விட்டது! அரிதாக இருந்த போது நோய் பற்றிய அச்சம் வெகுவாக இருந்தது! இன்று?! இதற்கெல்லாம் காரணம் என்ன?

ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பெண்களை வளர்க்கும் போக்கின் காரணமாக, பெண் குழந்தைகளிடம் ஆண் தன்மை அதிகம் காணப்படுகிறது. ஹார்மோன்கள் மாற்றம் நோய்களைத் தருகிறது.

உணவு முறை:

உணவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் அதிகம் நேருகிறது. இறைச்சி உண்போர், இறைச்சியைத்தரும் விலங்குகளின் எடையைக் கூட்டத் தரப்படும் செயற்கை பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வகை உணவுகளை அதிகம் உண்ணும் சிறுமியர் சுலபமாக உடல் எடை கூடி விடுகின்றனர். மிகச்சிறு வயதிலேயே கருப்பைக் கட்டிகள் வந்து விடுகின்றன.

குழந்தைகள் ஆரோக்கியமாக, செழிப்பாக வளர வேண்டும் என்ற எண்ணமும், அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தவிர தாங்கள் குழந்தைகளுக்கு இதைவிடச் சிறந்தது இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்ற எல்லைவரை போய் எதிலும் முதல், எல்லாவற்றிலும் சிறப்பிடம் வேண்டும் என்று பெற்றோர் மிகுந்த கவனம் எடுப்பதும் இன்று ஆபத்தாகியிருக்கிறது. அதிகக் கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகள், இனிப்புகள், துரித உணவு என்று உணவு முறை மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விட்டது. நோயும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

மனச்சிதைவு:

அன்று மிக எளிதான வாழ்க்கை வாழ்ந்தனர். வெளிப்படையான பேச்சும், உண்மையான அன்பும், நல்லொழுக்கமும், எதிலும் ஒரு முறையும் இருந்தன. இன்று சுயநலமும், ஆடம்பரமும், போலிவேடம் போட வைக்கின்றன. வாழ்வு எந்திரமாகிவிட்ட நிலையில் மனிதன் மனச்சிதைவுக்கு ஆளாகிறான். ஆண்களைவிட, பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

குடும்பம், குழந்தைகள், கணவன், பெற்றோர், உற்றார், சமூகம் எனப் பலமுகம் கொள்ள வேண்டிய மகளிர் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதும், எண்ணப்பகிர்வும் அரிதாகி விட்டதால், மாத விலக்கு நிற்கும் சமயத்தில் (மெனோபாஸ்) உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தங்களைத் தேவையற்ற அங்கம் போல உணருகின்றனர். தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. இந்த எதிர்மறை எண்ணங்கள் கருப்பைக் கட்டிகள் வளரக் காரணமாகின்றன.

ஹார்மோன் நிலைப்பாடு:

குழந்தை பெற்ற பின்பு மகளிர், இவ்வகை கட்டிகள் வந்துவிட்டால், அவை புற்றுநோய்க் கட்டியாக மாறிவிடும் என்ற பயத்தில், கருப்பை நீக்கம் செய்துவிடுகின்றனர். அப்பாடா! புற்றுநோயிலிருந்து தப்பித்துவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆனால் “எண்ணைய்ச்சட்டியிலிருந்து தப்பித்து, நெருப்பில் விழுவது” என்று சொல்வது போல, கருப்பை நீக்கத்தால், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, உடற்பருமன் ஆஸ்டியோ போராஸிஸ் என்னும் எலும்புத் தேய்மானம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். கால்கள் வளைந்து போகின்றன.

மாதவிலக்கு சுழற்சி சரிவர இயங்கும் வரையில், ஈஸ்ட் ரோஜென் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. மாதவிலக்கு நின்றபின் இச்சுரப்பு சுரக்காததால் நிறைய பாதிப்புகள் வரும். ஈஸ்ட்ரோஜென் சுரக்காத நிலையில் உடன் “கால்சியம்” சத்தை உறிஞ்சுவது மிகமிகக் குறைவாகி விடும். அதனால்தான் எலும்புகள் பாதிக்கப்படுகின்றன.

இயற்கையாக எலும்புகளைக்காக்க உடலில் சதை அதிகமாகிறது, பருமன் கூடுகிறது. அத்தனை கால்சியத்தையும் உணவில் சேர்த்து எடுத்துக் கொண்டால் மட்டுமே, பருமனைத் தவிர்க்க முடியும்.

தவிர “ஈஸ்ட்ரோஜென்”, மனம் அமைதிப்படுவதற்கான காரணிகளில் ஒன்று. ஆனால் தான் மெனோபாஸ், மற்றும் மாதவிலக்கு வருவதற்கு முன் ஆகிய சமயங்களில் கோபம், தாழ்வு மனப்பான்மை மன உளைச்சல் ஆகிய உணர்வுகள் மேலோங்குகின்றனர்.

செரிமானக் கோளாறுகள் காரணமாக வருவது:

மகளிர் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல், நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வதால், பாதிப்புகள் அதிகம் வருகின்றன. உணவைச் செரிக்கும் ஹார்மோன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் அதன் வேலையைச் செய்யும். உணவைக் குறிப்பிட்ட பொருளாக (குளுக்கோஸ்) மாற்றி திசுக்களுக்கு அனுப்பும். நேரந்தவறும் போது உணவு உடைந்து மாறும் பொருள் வேறு வடிவமைப்பில் வேறு பொருளாக மாறுகிறது.

அதனை திசுக்கள் ஏற்காது. அவை கழிவாக திரும்ப ரத்தத்தில் எடுத்துச்செல்லப்படும். இந்த நிகழ்வு தான் நடக்குமே தவிர திசுக்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் உடல் சோர்வு அடையும், போஷாக்கு குறைபாடு நேரும். நோய் வரும். ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

எதிர்மறை எண்ணங்களால் ஏற்படுவது

மூளையின் முக்கிய அங்கம் ஹைப்போதாலமஸ் என்பது, அங்கு உருவாகும் ஹார்மோன்கள் உடலின் எல்லா ஹார்மோன்களையும் கட்டுப்படுத்தும். ஹைப்மோதாலமஸ் ஹார்மோன் எதிர்மறை எண்ணங்களில் பாதிக்கப்பட்டால் பிட்யூட்ரி சுரப்பு பாதிக்கப்படும். அதனால் கருப்பை ஹார்மோன்கள் பாதிக்கப்படும். அதனால் சீக்கிரம் மெனோபாஸ் வரலாம். கருப்பைக்குள்ளேயே கருக்கள் தங்கிவிடும் நிலை ஏற்படும். கரு உருவாகும் கருமுட்டை விரையில் அதிகம் உற்பத்தியாகி உருவாதல் நின்றுபோய் சீக்கிரம் மெனோபாஸ் வரும்.