Home சூடான செய்திகள் இந்த 7 சந்தர்ப்பங்களில் தான் பெண்கள் அதிகமாக பொய் பேசுவார்களாம்!

இந்த 7 சந்தர்ப்பங்களில் தான் பெண்கள் அதிகமாக பொய் பேசுவார்களாம்!

29

பொய்கள் இல்லாத உறவே இல்லை, காதலன் – காதலி, கணவன் – மனைவி என்று மட்டுமல்ல நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லா உறவுகளிலும் பொய்கள் இருக்கின்றன. பொய், சண்டை என்பது உப்பை போல, அது சிறிதளவு இருந்தால் தான் உறவில் இருக்கும் ருசியை உணர முடியும். அதுவே, அதன் அளவு அதிகமாகிவிட்டால் மொத்தமாக நாசமாகிவிடும். அப்படி பெண்கள் – ஆண்கள் உறவில், பெண்கள் அதிகமாக பொய் பேசும் சில சுவாரஸ்யமான சந்தர்ப்பங்கள் பற்றி இங்கு காணலாம்…

சந்தர்ப்பம் #1 கணவனிடம் தன்னிடம் இருந்து மறைக்கும் விஷயங்களை போட்டு வாங்க வேண்டும் என்ற சந்தர்ப்பங்களில், பொய்களை கண்டு பிடிக்க பொய் பேசுவார்களாம்.

சந்தர்ப்பம் #2 வீண் செலவு செய்ய கணவன் பணம் கேட்கும் போது, தங்களிடம் சேமித்து வைத்த பணம் இருந்தாலும், இல்லை என பொய் கூறுவார்களாம்.

சந்தர்ப்பம் #3 குழந்தைகள் செய்த தவறுகளை கணவனிடம் இருந்து மறைக்க காலம், காலமாக அம்மக்கள் பொய் கூறி வருகிறார்கள்.

சந்தர்ப்பம் #4 கடினமான சூழ்நிலைகள் வீட்டில் நிலவும் போதும் கூட, காதலனிடம் இருந்து மறைத்து, அது காதலனை சங்கடப்படுதிவிட கூடாது, பாதித்து விட கூடாது என பொய் பேசுவார்களாம் காதலிக்கும் பெண்கள்.

சந்தர்ப்பம் #5 என்ன அவங்க அழகா இருக்கிறதா சொன்னங்க, இவங்க அழகா இருந்தாங்கன்னு சொன்னங்க என தற்பெருமை தம்பட்டம் அடித்து பொய் பேசுவார்கள்.

சந்தர்ப்பம் #6 “இது ரொம்ப ரகசியம், நான் யார்க்கிட்டயும் சொன்னதே இல்ல, உன்கிட்ட சொல்றேன் நீ யார்கிட்டயும் சொல்லிடாத…” என்று சொல்லிவிட்டு, அனைவரிடமும் அந்த விஷயத்தை கூறி கொண்டிருப்பார்கள்.

சந்தர்ப்பம் #7 “நான் பொய்யே பேசமாட்டேன், பொய் பேசுறவங்கள பாத்தாலே எனக்கு பிடிக்காது…” இப்படி பேசுபவர்கள் தான் அதிகம் பொய் பேசுவார்கள்.