Home இரகசியகேள்வி-பதில் சுய இன்பத்திலேயே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. எனது ஆணுறுப்பு சற்று வளைந்திருக்கிறது

சுய இன்பத்திலேயே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. எனது ஆணுறுப்பு சற்று வளைந்திருக்கிறது

120

திருமணம் முடித்த பிறகு தொடர்ந்து வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொள்வதால் என் மனைவி என்னை வெறுப்பாளா?

கேள்வி: எனக்கு வயது 27. வீட்டில் திருமணப் பேச்சு நடக்கிறது. ஆனால், முதலிரவில் முன்பின் அறிமுக மில்லாத எனது மனைவியோடு என்ன கதைப்பது? உறவை எப்படி ஆரம்பிப்பது? முதலிரவிலேயே உறவுகொள்வதால் என் மனைவி என்னை மதிப்பாரா? முதலிரவில் ஆணுறை பாவிக்க முடியுமா? திருமணம் முடித்த பிறகு தொடர்ந்து வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொள்வதால் என் மனைவி என்னை வெறுப்பாளா?

பதில்: ஒரு பெண்ணுடன் அதுவும் உரிமையுடன் சுவார சியமாகக் கதைப்பதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் இது.

இந்த சுவாரசியமான அனுபவம். வாழ்க்கையில் ஒரே யொரு முறை தோன்றும் உன்னதத் தருணம். பின்னொரு காலத்தில் நினைத்துச் சிரிக்கவும், சந்தோஷப்படவும் இந்த அனுபவம் கைகொடுக்கும்.

உங்களுக்கு இருக்கும் இதே சங்கடங்கள் உங்கள் மனைவிக்கும் இருக்கத்தான் செய்யும். முதலிரவில் நீங்களே பேச்சை ஆரம்பிக்கவேண்டும். அவரை உங் கள் மனைவியாக எண்ணியோ, உடலுறவை முன்னி றுத்தியோ பேச்சை ஆரம்பிப்பதுதான் சங்கடமாக இருக்கும்.

ஒரு தோழியாக நினைத்துப் பேசத் தொடங் குங்கள். ஒரு சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு வந்து விடுவீர்கள்.

அவரைப் பேசவைக்கும் கேள்விகளைக் கேளுங்கள். முக்கியமாக அவரது குடும்பத்தினர் பற்றியும், அவரது விருப்பு வெறுப்புகள் பற்றியும் கேளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்துவிடு(வீ)வார்.

அதை விட்டுவிட்டு உங்கள் வீர தீர பிரதாபங்களைப் பேசிக்கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சலித்துவிடும். உங்களது விருப்பு வெறுப்புகளை சுருக்கமாகச் சொல்லலாம்.

உங்கள் பேச்சு உங்களை அறியாமல் தானாகவே உறவு பற்றித் திசைதிரும்பும். ஒருகட்டத்தில் உறவுக்கான அவரது எதிர்பார்ப்பு என்ன என்பது உங்களுக்குத் தெரியவரும். அதன் அடிப்படையில் உறவைத் தொடங்குவதா, இல் லையா என்று முடிவுசெய்யலாம்.

தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக நல்ல நேரம் பார்த்துத்தான் நீங்கள் தனியறையில் இருத்தப்படு கிறீர்கள். அதற்காக, திருமணம் முடிந்த நாள் இரவே அதை ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை.

திரு மண நாளன்று அதி காலை முதல் ஓய்வே இல்லாமல் இரவு விருந்துபசாரம் வரை நின்று கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் சூழல் மண மக்களுக்கு ஏற்படலாம். இதனால் ஏற்படும் களைப்பு உறவு குறித்து சிந்திக்கத் தடைபோடும். அப்படி யான நேரங்களில், பரஸ்பரம் ஒருவரது நிலை அறிந்து உறவைத் தொடங்குவதா, இல்லையா என்று முடிவு செய்யலாம். இருவரது எதிர்பார்ப்புகளும் தாம்பத்தியம் குறித்து இருந்தால் தாராளமாக ஆரம்பிக்கலாம் தாம்பத்தி யத்தை!

ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஒரு படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும்போது சிறு சிறு தீண்டல்களால் இருவருமே உறவு நோக்கித் தள்ளப்படுவார்கள்.

முதலிரவில் ஆணுறை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

வேண்டுமானால் கருத்தடை மாத்திரைகளை அந்த ஒரு மாதம் மட்டும் பயன்படுத்திவிட்டு பிறகு ஆணுறை யைத் தொடரலாம்.

திருமணத்தில் தாம்பத்தியத்தின் பங்கு அதிகம்.

ஆண் களுக்கு இருக்கும் அதே வேட்கை பெண்களுக்கும் இருக்கும். எனவே, தினந்தோறும் உறவு கொள்வதில் சிக்கல் இருக்காது உங்ளுக்கு..

ஆனால் மனைவியின் உடல் மொழியைக் கொண்டு அல்லது நேரடியாகவே அவரது கருத்தறிந்து உறவுகொள்வது நல்லது.

———————————————–
நான் என்னை விட ஐந்து வயது குறைந்த ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள்.

கேள்வி: எனக்கு வயது 21. நான் என்னை விட ஐந்து வயது குறைந்த ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள்.

அவள் வேற்று மொழி, இனத்தைச் சேர்ந்தவள். அவள் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. என்றாலும் என் மனம் ஏதோ அவநம்பிக்கை கொள்கிறது. அத்துடன் என் நண்பர்களும் இது சரிவராது என்கின்றனர்.

அவர்கள் சொல்வதையும் தட்டிக் கழிக்க முடியவில்லை. எனவே தயவுசெய்து எனக்கு நல்லதொரு முடிவையும் இந்த 5 வயதுப் பிரச்சினை என் தாம்பத்திய வாழ்வில் ஏதும் பிரச்சினை ஏற்படுத்துமா என்பதையும் சொல்லுங்கள்.

பதில்: தாம்பத்திய வாழ்க்கை குறித்துச் சந்தேகப் படுவதற்குரிய பருவத்தை நீங்கள் எட்டவில்லை

. என்றாலும்… நிச்சயமாக உங்கள் இருவருக்கும் இடையில் பாலுறவு ரீதியில் பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை. ஏனெனில் இருவரும் பருவம் எய்தியவர்களே.

நீங்கள் உங்கள் காதலியை அதீதமாக நம்புகிறேன் என்று சொன்ன பிறகு அவநம்பிக்கை என்ற வார்த்தைக்கே இடமில்லை.

உங்கள் பிரச்சினை என்னவென்பதை ஊகிக்க முடி கிறது.

உங்கள் காதலி சார்ந்திருக்கும் மொழி, இனத்தைச் சேர்ந்த பெண்கள், தம் கணவருக்கு உண்மையாக இருப்பதில்லை என்றும் வேறு ஆண்களுடன் நெருங்கிப் பழகுவார்கள் என்றும் உங்கள் நண்பர்கள் பொதுவான அபிப்பிராயத்தைச் சொல்லி உங்களைக் குழப்பி யிருக்கலாம்.

ஆனால் மிக மிகத் தவறான அபிப்பிராயம் அது.

எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ தவறான வழியில் நடப்பவர்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. அப்படி முத்திரை குத்துவது பெரும் தவறு.

ஒவ்வொருவரும் சூழல் சார்ந்த பாதிப்புகளாலேயே வழிமாறுகிறார்கள்.

எனவே உங்கள் காதலியை நீங்கள் உயிருக்குயிராக நேசித்துத் திரு மணம் செய்துகொண்டால், அவருக்குத் தேவையான ‘அனைத்தையும்’ நீங்கள் பூர்த்திசெய்தீர்கள் என்றால், உங்களது இனம், மொழி சார்ந்த பெண்களைவிடச் சிறந்த பெண்ணாக அவர் விளங்குவார்.

ஒருபோதும் சந்தேகிப்பவர்கள் மீது நம்பிக்கை கொள்ளாதீர்கள்.

நம்பிக்கை கொண்டுவிட்டால் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு சந்தேக வலை யைப் பின்னிக்கொள்ளாதீர்கள்.

————————————————–
எனக்கு 28 வயது. அண்மையில்தான் திருமணம் ஆனது. நான் சிறு வயதில் சுய இன்பம் அனுபவிப்பேன்.

கேள்வி: எனக்கு 28 வயது. அண்மையில்தான் திருமணம் ஆனது. நான் சிறு வயதில் சுய இன்பம் அனுபவிப்பேன்.

திருமணம் நடந்த இந்த ஒரு மாதத் தில் மனைவியுடன் உறவு கொள்ள முடியவில்லை.

இப்போதும் சுய இன்பத்திலேயே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. எனது ஆணுறுப்பு சற்று வளைந்திருக்கி றது.

இதனால் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்குமா?

பதில்: ஆணுறுப்பு வளைந்திருப்பதால் பாதிப்புகள் ஏதும் வருவதற்கில்லை.

உங்கள் மனைவியுடன் உறவு கொள்ளாத தால்தான் சுய இன்பத்தின் மீது உங்களுக்கு அதீத நாட்டம் தொடர்கிறது. அவருடன் உறவுகொள்ள முடியாததற்கு வேறு ஏதும் காரணம் இருக்கலாம்.

அதாவது நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்கள் மனைவியிடம் அழகு இல்லாமல் இருக்கலாம்.

தாம்பத்தியத்தை முழு இரவில் நடத்திப் பாருங்கள். உங்கள் பிரச்சினை பறந்தோடிவிடும்.