Home உறவு-காதல் பெண் இப்படியிருந்தால் ஆண்களுக்கு பிடிக்கும் !

பெண் இப்படியிருந்தால் ஆண்களுக்கு பிடிக்கும் !

34

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ… கொள்ளைதான்.
ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.

சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?

1. கால், பாதம்:
ஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இரு க்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோ டொன்று பொருந்திய நிலையில் இருத் தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச் சியாக வாழ்வாள்.
மேலும் பிரதானமாக கெண்டைக் கால் பருத்து இல்லாமல் இருப் பது நலம் ஆணாக இருந்தாலும் பெண் ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்ப வர்கள் ஆரோக்கியமாக வும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாக வும்) இருப்பார் கள்.

சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரை யில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந் தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண் ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல் லாம லும் இருக்கலாம்.

2. தொடை:
பெண்களின் தொடை வாழைத்தண்டு போல் பளபள என்று இருக்க வேண் டும். முழங்கால் சிறிதாக இருக்க வே ண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

3. இடை:
இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந் திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

4. மார்பகங்கள்:
பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன் ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

5. கைவிரல்:
பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல்வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.

6. கழுத்து:
பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலி ருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண் டும்.

7. கண்கள்:
பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண் டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களு க்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.

உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்றுசொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.
மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண் டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர் மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மருண்ட விழி களில் சில அமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக் கூடிய தாகவும் பெரிய துறையில் பெரிய பதவி யில் அமரக்கூடியவராகவும் இருப் பார்கள்.
விழிகளைவிட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள் ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந் தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பா ர்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்க ள் என்று சொல்வார்களே… அது போல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழி யைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கை யில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றிசொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற் படும். அடர்த்தி இல்லாமல் பரவ லாக இருந்தால் ஆயுள் நிறைந்து இரு க்கும்.

வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.
முண்டக் கண்ணி என்று சொல்லப் படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தை யில் யாராவது ஒருவர் இருக்க மாட்டா ர்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்து விடுவார்கள்.
உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண் டவர்கள் ரொம்ப அப்பா வியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்து விட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.

8. கூந்தல்:
பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.
கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத் து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மைகொண்டவர்களாக இருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாக வும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாக வும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.
ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென் மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்த படி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.
கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்க ளுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ் க்கையும் அமையும்.

9. வாசம்:

பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்ன ம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை , தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்க மும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ் வாள்.

10. மூக்கு:
மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்பு தான் முக்கியமாக சொல்லப்படுகிற து. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்ச ராதல் போன்ற யோகம் உண்டு.
எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந் தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என் பார்கள்.
ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவ ர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறி யும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்துவிளங்குவார்கள்.
சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர் கள் மற்றவர்களை இம்சைப்படுத்து வார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர் களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப் பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப் பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொ ண்டவர்களுக்கு சீரான வாழ்க் கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.
ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப் பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர் களுக்கு மாறுபட்ட சிந்த னை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.

வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறி க்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர் களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அது போன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வா ர்கள்.

11. நெற்றி:
சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.
நெற்றியின் பரந்து விரிந்த அமை ப்பைவிட அதில் உள்ள கோடு களுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப் பார்கள். அதற்குமேல் இருப்பது நல்ல தற்கல்ல.
செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.