Home பெண்கள் பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள் ஏதேனும் நோயின் அறிகுறியா?

பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள் ஏதேனும் நோயின் அறிகுறியா?

153


ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற) வெளிப் படுதல் எல்லாப் பெண்களாலும் உணரப் படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள் (GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த் தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈர த்தன்மையை பேணும்.

இவ்வாறு ஈரத் தன்மை பேணப்படுவது அப் பெண் ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY & CLEAN) இருப்பதற்கு அத்தியாவசி யமாகும். மாத விடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிகளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்புறுப்பு உலர்ந்த நிலையை அடைந்து காணப் படும். இதனாலேயே அவர்களுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங்க ளை இது கொடுக்கலாம்.

இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது, சிலபெண்களுக்கு மன ரீதியான உளைச்சலைக் கொடுக்கலா ம். தங்களுக்கு ஏதோ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்நிலை ஏற்படுகின்றது அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாம ல் மனதிற்குள்ளே வருந்திக் கொண்டிருக் கலாம்.

உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவங்கள் பற்றி ஒவ் வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகு ம். ஏனெறால் சில நோய்களில்கூட இவ் வாறு திரவங்கள் வெளிவரலாம்.
சாதாரணமாக வெளிவருகிற திரவமான து தெளிவானதாக (CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாத தாக இருக்கும். இது அவர்களின் உள்ளாடையில்பட்டு உலரும்போ து பால் (MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும். இதுவே வெள்ளைப்படுதல் என்று நம் பெண்க ளால் அழைக்கப் படுகிறது.

சாதாரணமாக வெளிவரும் திரவம்

மேலும் இந்த திற வெளிப்பாடானது மாத விடாயின்போது, உடலுறவின் போது, கர்பம் தரித்திருக்கும்போது போன்ற சந்தர் ப்பங்களில் அதிகரிக்கலாம்.
ஆனால் இவ்வாறு இல்லாமல் திரவமா னது பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இ ருக்குமானால், கெட்ட மனமுடையதாக இருக்குமானால், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி(THICK) போன்ற திரவமாக இருக்குமா னால் இது குறிப்பிட்ட சில நோய்களின் அறி குறியாக இருக்கலாம். இவ்வாறான சந்தர்பத்தில் வைத்தியரை நாடி தகுந்த மறுத்ததை எடுத்து சில நாட்களுக்கு உட் கொண்டாலே போதும் இப் பிரச் சினை சுகமாகிவிடும். இது பொதுவாக கிருமிகளின் தொற் றுகளால் ஏற்படும்.
மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்க முடியாத மனமுடையதாக, அல்லது இடையி டையே ரத்தம் போகும்போது இது புற்றுநோ யின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

பெண்னுருப்பிலே இருந்து திரவம் வெளிப்படு கின்றது என்று அஞ்சினால், முதலில் அதன் தன்மையை அவதானியுங்கள்.

கீழே வரும் மாறன்கள் உங்கள் பிறப்பு வழித் திரவத்தில் இருந்தால் உடனேயே வைத்திய ரை நாடுங்கள்.

* தயிர் தன்மையான வெள்ளை கட்டி கள் வெளிவருதல்
*பச்சை அல்லது மஞ்சள் நிறத்திர வம் வெளிவருதல்
*சகிக்க முடியாத மனம் கொண்ட திரவம் வெளிவருதல்
* அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் அல்லாத நேரத்தில் ரத்தம் போகுதல்
இவை எதுவும் இல்லாமல் சாதரணமா ன பால்போன்ற அல்லது தெளிவான திரவங்கள் வெளிவந்தால் இது உங்க ளில் மட்டுமல்ல எல்லாப்பெண்களிலு ம் உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க ஏற்படுகின்ற சாதாரண மான நிகழ்வே! இதற்காக அச்சப்படத் தேவை இல் லை.