Home பாலியல் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் விளைவுகள்!

பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் விளைவுகள்!

260

captureசிலர் ஆணுறை போன்ற கருத்தடை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உடலுறவில் ஈடுபடுவதை விரும்புவார்கள். இதன் மூலம் தான் அதிக இன்பம் அடைய முடியும் என்றும் அவர்கள் கருதுவார்கள். ஆனால், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால் என்னென்ன விளைவுகளை சந்திக்க கூடும் என்பதை பற்றி அந்த தருணத்தில் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். இதை யோசிக்க மறுப்பவர்கள் இதை படிக்கலாம்…

ஸ்ட்ரெஸ்! பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறித்து அச்சம் உண்டாகலாம்.

கருத்தரிப்பு! சிலர் பாதுகாப்பான நாட்கள் என்ற முறையில், சில நாட்களில் கருத்தரிக்க வாய்ப்பில்லை என ஆணுறை பயன்படுத்தாமல் பாதுகாப்பின்றி உடலுறவில் ஈடுபடலாம். ஆனால், அந்த நாட்களில் கருத்தரிக்கும் விகிதம் தான் குறைவே தவிர, முற்றிலும் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்றில்லை.

பால்வினை நோய்கள்! பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடும் போது எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய்கள் உண்டாகிவிடுமோ என்ற அச்சம் வரும். உங்கள் துணையை தவிர்த்து வேறு நபர்களுடன் நீங்கள் உறவில் ஈடுபட முயலும் போது, இதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்ற.

அசௌகரியம்! சிலவகை ஆணுறையில் லூப்ரிகண்டுகள் இருக்கும். இதனால் உராய்வு உணர்வு உண்டாகாது. எனவே, லூப்ரிகண்டுகள் இல்லாத போது உராய்வு உணர்வு உண்டாகும். இதனால் அசௌகரியமாக நீங்கள் உணரலாம்.