Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் முதல் நண்பர்கள் அறிவோம்

குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் முதல் நண்பர்கள் அறிவோம்

49

குழந்தைகள் நலன்கள்:பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வார்த்தைப் பிரயோகம் (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

நாம் இன்று பிஸியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே, அம்மாவும் அப்பாவும் தங்கள் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அல்லது நீண்ட தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, குழந்தை காலை உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது குடும்பமாக ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இது நிச்சயம் பல சிக்கலை சமாளிக்க உதவும். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக் கொள்வது கடினமாகும் போது உறவிற்கு நடுவே இடைவெளியும் அதிகரிக்கும். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரமாவது ஒதுக்கி ஒன்றாக சாப்பிடுங்கள். ஞாயிறு கிழமைகளில் லேப் டாப், வேலை என்று இருக்காமல், குடும்பத்தோடு ஒரு லாங் ட்ரைவாவது செல்லுங்கள்.

ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வளரும் நாட்களில் நல்ல ஒரு பாதிப்பை கொண்டிருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்களை மனம் விட்டு பேசுவது; நல்லது கெட்டதை விவாதிப்பது ; குடும்பத்தில் நன்மையே உண்டாக்கும். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் நெருக்கத்தை உண்டாக்குவது மட்டு மல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும்.