Home ஆண்கள் விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்

விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்

48

ஆண்களின் விந்தணுக்களில் அளவு(Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து சுக்கிலப் பாயமாக(Seminal fluid) வெளியேறும்.

விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்புக்கள் சாதாரணமான முறையிலே தொழிற்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு சுக்கிலப் பாயம் வெளியேறலாம்.சுக்கிலப் பாயம் வெளியேறும் அனைவரிலும் விந்துகளின் அளவு போதுமானதாக இருக்கும் என்றில்லை.
ஆகவே குழந்தை உருவாகுவது பிற்போகும் சந்தர்ப்பத்தில் ஆண்களின் சுக்கிலப் பாயம் சோதிக்கப்பட்டு அதிலே உள்ள விந்துகளின் வீரியத் தன்மை கணக்கடுக்கப் பட வேண்டும்.

விந்துகளின் வீரியத்தன்மை பிரதானமாக மூன்று விதங்களில் கணக்கெடுக்கப்படும்.
1.விந்துகளின் எண்ணிக்கை –
சாதாரணமாக 1மில்லி லீடர் சுக்கிலப் பாயத்தில் 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்

2.விந்துகளின் முன்னோக்கி அசையும் தன்மை (active motile)
மொத்தமாக உள்ள விந்துகளில் .குறைந்தது 50 வீதமானவை இந்தத் த்னமையைக் கொண்டிருக்க வேண்டும்

3.விந்துகளின் உருவ அமைப்பு(Morphology)
மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 30 வீதமானவை சரியான உருவ அமைப்பில் இருக்க வேண்டும்

 
.அத்தோடு ஒரு தடவையில் வெளியேறும் சுக்கிலப் பயத்தின் அளவு 2 மில்லி லீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு மேலே சொன்ன நிலையில் உள்ள விந்துகளே கருத்தரித்தலுக்கு மிகவும் பொருத்தமானவையாக கருத்தப்படும்.

விந்துகளின் எண்ணிக்கை குறைதல் ஒலிக்கோ ஸ்பேர்மியா (Oligospermi)எனப்படும். இவ்வாறனவர்களுக்கு கருத்தரிக்கும் சந்தர்ப்பம் இருந்தாலும் அது குறைவாகவே இருக்கும். கருத்தரித்தல் பிற்போகும் சந்தர்ப்பத்தில் இவர்களின் சுக்கிலப் பாயம் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு (processed)பொருத்தமான விந்துகளை மட்டும் சேகரித்து IUI முறைமூலம் மனைவியின் கருப்பையினுள் செலுத்தப் படுவதன் மூலம் கருக்கட்டலை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.(IUI பற்றி இந்த சுட்டியில் வசிக்க )

அது தோல்வியடையும் பட்சத்தில் செயற்கையான முறையிலே கருக்கட்டலை நடத்தும் பரிசோதனைக் குழாய்க் குழந்தைக்காக முயற்ச்சிக்கலாம்.

அடுத்ததாக சில பேரின் சுக்கிலப் பாயத்தில் விந்துகளே இல்லாமல் இருக்கலாம். இது Azospermia எனப்படும். இவர்களுக்கு கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை. இருந்தாலும் மிகவும் அரிதாக விந்துகள் முற்றும் முழுதாக இல்லாமல் போகுதல் சில வேறு நிவர்த்தி செய்யக் கூடிய நோய்களால் ஏற்படிருக்கலாம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நோய் சரி செய்யப்பட்டால் விந்து உற்பத்தி ஏற்பட்டு
கருத்தரித்தல் நடை பெறலாம். இது மிகவும் சொற்பமானவ்ர்களுக்கே சாத்தியம்.

விந்துகள் அறவே இல்லாதவர்கள் தம்பதியினர் வேறு ஒருவரின் விந்தணுக்களை
பெற்று IUI மூலம் கருப்பையினுள் செலுத்தி கருத்தரிக்க முயற்ச்சிக்கலாம்.

இப்போது நிறைய தனியார் வைத்தியசாலைகளில் விந்துகளை சேமிக்கும் வங்கிகள் உள்ளன.அங்கிருந்து விந்துகளை பெற்று IUI மூலமோ /பரிசோதனைக் குழாய்க் குழந்தையாகவோ கருத்தரித்தலுக்கு முயற்ச்சிக்கலாம்.