Home ஆரோக்கியம் ஒரே இடத்தில் இருப்பதால் கழுத்து வலியா? இந்த உடற்பயிற்சியை செய்யுங்கள்..!

ஒரே இடத்தில் இருப்பதால் கழுத்து வலியா? இந்த உடற்பயிற்சியை செய்யுங்கள்..!

15

கழுத்து என்பது எமது உடலில் மிக முக்கியமான பகுதியொன்றாகும்.

ஏனெனில் கழுத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்படுமாயின் அது தோல் பட்டை மற்றும் முதுகுப் பகுதியையும்பாதிக்கும்.

எனவே கழுத்து வலி ஏற்பட்டால் அதை அலட்சியம் பண்ணக்கூடாது. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும்.
அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான பயிற்சிகளை இப்போது நாம் பார்க்கலாம்.

பயிற்சி 1: நிமிர்ந்த நிலையில் நாற்காலியில் அமர வேண்டும். வலது கையை வலது கன்னத்தில் பதித்து, இடது பக்கம் மெதுவாகத் திருப்பி, சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இது போல இடது பக்கத்துக்கும் என தலா மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: இந்தப் பயிற்சி மூளையில் இருந்து வரும் நரம்புகளைத் தூண்டி விடும். கழுத்துப்பிடிப்பு இருந்தால், அது சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மனஅழுத்தத்தைச் சரி செய்யும். மூளையைப் புத்துணர்வு பெற வைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

பயிற்சி 2: இரு கைகளையும் கோர்த்து, கட்டை விரல்களை தாடையின் அடியில் வைத்து, கழுத்தை மெதுவாக மேலே தூக்கி பழைய நிலைக்கு வர வேண்டும். இதே போல, கைகளை தலைக்குப் பின் கோர்த்து, கழுத்தை மென்மையாகக் கீழே அழுத்த வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: கழுத்துப் பிடிப்பு இருந்தால், அது சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மூளையைப் புத்துணர்வு பெற வைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

பயிற்சி 3: நாற்காலியில் நேராக அமர்ந்தபடி, தலையை இடது தோள்பட்டையின் பக்கமாக, காது தோள்பட்டையில் படும்படி, சாய்க்க வேண்டும். பின், வலது தோள் பட்டையின் பக்கம் சாய்க்க வேண்டும். இதே போல், தலையை மேலே உயர்த்தியும் கீழே குனிந்து தரையைப் பார்த்த படியும் செய்ய வேண்டும்.

பலன்கள்: மூளைக்கு இரத்தஓட்டம் சீராகச் செல்லும். கழுத்துப் பகுதி வலிமை பெறுவதுடன், அந்தப் பகுதியில் இறுக்கம் குறையும். வளைவுத் தன்மை அதிகரிக்கும்.

உணவுக்குப் பின், இரண்டு மணி நேரம் கழித்து இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள், காலை 11 மற்றும் மதியம் 3 மணி அளவில், கைவிரல்கள், கழுத்து, தோள்பட்டை போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் செய்வது புத்துணர்வு அளிக்கும்