Home பெண்கள் அழகு குறிப்பு கோடைக்காலத்தில் கூந்தல் உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்

கோடைக்காலத்தில் கூந்தல் உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்

12

கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்சனைகள் ஏராளம். கோடை நேரத்தில் அதிகப்படியான வெயில் காரணமாக நம் சருமம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கூந்தலும் பாதிக்கப்படும். சரியான கவனிப்புடன் செயல்பட்டால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

* கற்றாழையில் இருக்கும் நுங்கு போன்ற சதைப்பகுதி நான்கு டீஸ்பூன், பெரிய நெல்லிக்காய் சாறு நான்கு டீஸ்பூன் எடுத்து தலையில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் முடிகொட்டுதல் பிரச்னை நீங்கி, தலைமுடி பளபளப்பாக இருக்கும்.

அவகாடோ, வாழைப்பழம் இரண்டையும் சம அளவில் எடுத்துக் குழைத்து தலையில் மாஸ்க் போன்று போட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் கூந்தல் பட்டுபோல மிருதுவாக இருக்கும். கூந்தலின் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.

* வெள்ளரிக்காய் ஜூஸை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் வெயிலினால் தலையில் உருவாகும் சிறுகட்டிகள் மறையும்.

* கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணய் மூன்றையும் சமஅளவில் எடுத்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி 10 நாள்கள் அதை வெயில் படும் இடத்தில் வைக்கவும். பிறகு வாரம் ஒருமுறை தலை மற்றும் உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். எண்ணெய் தேய்த்த அன்று ஷாம்பு, சீயக்காய் போட்டு குளிப்பதைவிட, மறுநாள் உபயோகித்தால் முடி உறுதியுடன் இருக்கும்.

* தினமும் ஷாம்பு பயன்படுத்துவதால் இளவயதிலேயே நரை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஷாம்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக்கொட்டையை வாங்கி சுடுநீரில் ஊறவைத்து ஒரு மணிநேரம் கழித்து அந்தத் தண்ணீரை வடிகட்டி தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.