Home அந்தரங்கம் முதல் முறையாக துணையுடன் உடலுறவா? இதனை அறிந்துகொண்டால் போதும்

முதல் முறையாக துணையுடன் உடலுறவா? இதனை அறிந்துகொண்டால் போதும்

2164

இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் முதல் அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். அந்த வகையில்., முதல் அனுபவம் என்பது எந்த விஷயத்திலும் இனிதாகவும்., துன்பமாகவும்

அமைவது இயற்கையான நிதர்சனம். இதனைப்போன்று தாம்பத்தியத்தில் உலகையும் மறந்து படுக்கையில் துணையுடன் உச்சகட்டத்தை நெருங்க போராடும் துணைகளுக்கு முதல் தாம்பத்தியம் என்பது வாழ்நாட்களில் எத்துனை இன்பம் அந்த துணையுடன் கிடைத்தாலும் முதல் தாம்பத்யத்தை மறக்க முடியாமல் இருக்கும்.

தாம்பத்தியத்தில் முதல் தாம்பத்தியமானது உடல் நடுக்கத்தையும்., மிரட்டலையும் கண்டிப்பாக ஏற்படுத்தும்

இந்த நேரத்தில் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளது. இது குறித்து நாம் காண்போம். தாம்பத்தியத்திற்கான துவக்கத்தை இருவரும் விரும்பி துவங்க வேண்டும். இந்த சமயத்தில் தேவையற்ற மன பதட்டங்கள் கூடவே கூடாது., துணை இருவரும் தங்களின் விருப்பத்தை மற்றும் பிடிக்காத செயல்களை வெளிப்படையாக கூறி செயல்பட்டு உச்சக்கட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் செயல்பட வேண்டும். தாம்பத்திற்க்கு முன்னதாக கண்டிப்பாக காளை மாடு பாய்ந்தார் போல பாயாமல்., முன் மற்றும் புற விளையாட்டுகளில் துவங்கி புணர்ச்சியில் ஈடுபட வேண்டும்.

தாம்பத்தியத்தில் முதல் முறையாக ஈடுபடும் சமயத்தில் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்று. முதல் அனுபவத்திலேயே பல முறைகள் மற்றும் நீண்ட நேர தாம்பத்தியம் என்ற பெயரில் மது அருந்தி புணர்ச்சியில் ஈடுபடுவது அல்லது மாத்திரைகள் பயன்படுத்துவது., விதவிதமான அசாதாரண நிலையில் துணைக்கு துன்பத்தை ஏற்படுத்தும் புணர்ச்சியில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இயற்கையான முறையில் எவ்வுளவு நேரம் மற்றும் எவ்வுளவு உச்சக்கட்டம் என்பதை உங்களின் புற விளையாட்டுகள் மற்றும் புணர்ச்சியின் செயல்பாடுகள் மட்டுமே தீர்மானம் செய்கிறது.

உங்களுக்கு ஆபாச திரைப்படம் பார்க்கும் பழக்கம் இருப்பின் முதல் முறையான தாம்பத்தியத்தில் உங்களின் துணையுடன் அந்த படத்தில் அப்படி செய்தார்கள் என்று கூறி உங்களின் செயல்பாடுகளை நீங்களே கீழ்த்தரமாக காட்டி., உங்களின் துணையையும் வீண் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிவிடாதீர்கள். முதலில் அவர்களுக்கு ஏற்படும் அனுபவமே அடுத்த கைகூடலுக்கு உதவும். முதலிலேயே கொடூரனை போல் செயல்பட்டால் மீண்டும் தாம்பத்தியத்திற்கு அழைத்தால் இன்று கொடூரன் என்ன செய்ய காத்திருக்கனோ என்று பயத்தை ஏற்படுத்தி., மன உளைச்சலை அளித்துவிடும்.