Home பெண்கள் தாய்மை நலம் குழந்தை வேண்டுமா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்

குழந்தை வேண்டுமா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்

173

தாய் உறவு:பலர் தங்களுக்கென ஒரு குழந்தையாவது பிறக்காத என்று எண்ணி ஏங்கித் தவிக்கின்றனர். தம்பதியரின் மனதில் குழந்தைக்காக உருவான ஏக்கம் நாளடைவில் மனஅழுத்தமாக, வருத்தமாக மாறி அவர்களின் வாழ்வின் மகிழ்ச்சியை கெடுத்து விடும் அளவிற்கு வளர்ந்து விடுகிறது.

கருத்தரிக்க சரியான நேரம் மற்றும் காலம், முறை அறிந்து செயல்படல் வேண்டும் . அப்படி இல்லாவிட்டால் அது தவறான பலனையே தரும்.

கருமுட்டையும் உடலுறவுறவும் ஆணும் பெண்ணும் உடலால் ஒருவரோடு ஒருவர் ஒன்றாக இணைவதால், கருத்தரிப்பு ஏற்படுகிறது. உடலுறவை சரியான நேரத்தில் செய்தால் எளிமையாக, விரைவில் கருத்தரிக்க முடியும்.

கருத்தரிக்க முக்கியத் தேவையாக இருப்பது பெண்ணின் அண்டம் மற்றும் ஆணின் விந்தணுக்கள். பெண்ணின் கருவறையில் அண்டம் ஆண் விந்துவிற்காக காத்திருந்து, இறந்து போய் வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். பெண்ணின் மாதவிடாய் தொடங்கிய நாளை நாள்-1 அதாவது முதல் நாளாக கணக்கில் கொண்டு, மாதவிடாய் முடிந்த பின் சரியாக ஏழாம் நாள் – நாள்-7 முதல் நாள்-20 வரை தொடர்ந்து காதலுடன் சரியாக உடலுறவு கொண்டு வந்தால், நீங்கள் கருத்தரித்து தாய்-தந்தை ஆவதை யாராலும் தடுக்க முடியாது.