Home ஆண்கள் ஆண்களின் குறி எளிர்சியும் விந்து வெளியேறுதல் பிரச்சனைகள்

ஆண்களின் குறி எளிர்சியும் விந்து வெளியேறுதல் பிரச்சனைகள்

396

ஆண்மை பேருக்கு:இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் தங்களுடைய இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. அது புற வுலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது,
அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது,
விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.
பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள் தளர்ந்து விடுகிறது.
என் சிறிய உறுப்பால் என் மனைவியைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.

இவைதான் இன்றைய இளைஞர்கள் பெரும்பான்மையோரின் புலம்பல்களாக இருக்கின்றன. இவற்றை எப்படித்தான் தீர்ப்பது…

இவற்றுக்கும் நாம் நம்முடைய முன்னோர்களைத் தான் பின்பற்ற வேண்டும்.

உடலில் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தி ரத்தத்தில் இருக்கும் க்ளூகோஸைக் கட்டுப்படுத்தக் கூடியவை. இயல்பான விறைப்புத்தன்மைக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும் க்ளூகோஸின் அளவு சரியாக இருத்தலும் மிக அவசியம். எனவே மேற்கண்ட நோய்களை உடையவர்கள் தங்களது நிலைமை உணர்ந்து அதீத ஆசைப்படுவதைத் தவிர்க்கலாம்.

மேற்கண்ட வியாதிகள் அல்லாமல் இளைஞர்களுக்கு இப்பிரச்சினை இருப்பின் அதீத கற்பனைகளைத் தவிர்த்து இயல்பாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.

சரியான உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும்.

ஒருபாகம் வெந்தயத்துடன் இரண்டு பாகம் நீர்சேர்த்து வேகவைத்து நீர் வற்றியபின் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி பெருகும்.

ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறிகூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும். காமக்கிளர்ச்சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச்செல்வது உறுப்பு உரசல்தான்.

ஆண்குறி இல்லாமல் லெஸ்பியன்கள் உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுய இன்பமும் செய்து கொள்கிறார்கள். காமத்துக்கு வடிகால் தேடாதவர்களின் ஆண்குறிதான் எப்போதும் பாதி விறைத்த நிலையில் இருக்கும். அதை பெரிய ஆண்குறி என்று எடுத்துக்கொள்ள முடியாது. காம சிந்தனைகள் அற்ற நிலையில் பெரும்பாலான ஆண்குறிகள் மூன்றிலிருந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அதை சிறுத்த ஆண்குறி என்று சொல்ல முடியாது.

அதீத சுய இன்பத்தால் அதிக விந்து வெளியேறி உறுப்பு தளர்ந்து விட்டதாகவும் விந்து குறைந்துவிட்டதாகவும் நினைப்பதும் தவறு. யாராவது நான் அதிகமாக எச்சில் துப்பும் பழக்கத்தால் வாய் தளர்ந்து எச்சில் ஊறுவதும் குறைந்து விட்டது என்று சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா?

எச்சில் துப்புவதும் ஊறுவதும் போலவே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக்கொண்டும் இருக்கிறது. சுய இன்பப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட மாதத்தில் இரண்டொரு முறை தானே விந்து வெளியேறிவிடும். இது ஒரு குறையே அல்ல மாறாக இது ஒரு ஆரோக்கியமான நிலை.