Home அந்தரங்கம் பெண்ணை அந்தரங்க கட்டிலில் இன்பம் தராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பெண்ணை அந்தரங்க கட்டிலில் இன்பம் தராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

304

அந்தரங்கம் புதிது:இன்பம் பற்றிய அறிதல் எதுவும் இன்றி, தன்னுடைய இன்பத்தை மட்டுமே ஆண் பெரிதாக நினைத்தால், பெண் மன்னிக்கமாட்டாள்.

அதனைப் பொருந்தா திருமணம் என்று பிரிந்துவிடுவாள். இன்பம் தராதவன் பற்றி முந்தைய காலங்களில் வெளியே சொல்ல பெண்கள் கூச்சப்பட்டார்கள்.

ஆனால், இப்போது தன் மீது தவறு இல்லாதபட்சத்தில், ஆனின் குறைபாடுகளை, அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை என்று பெண்கள் முடிவு எடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இன்றைய தினம், பல்வேறு காரணங்களைக் காட்டி விவாகரத்து பெற இயலும்.

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறு ஒருவருடன் விரும்பி உடலுறவுகொள்ளுதல்.

2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்.

3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கைவிட்டுச் செல்லுதல்.

4. தம்பதிகளில் ஒருவரு தீர்க்கமுடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்.

5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருத்தல்.

6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் உள்ளாரா, இல்லையா என்று தெரியாதிருத்தல்.

7. திருமணமான கணவன், ஓரினப் புணர்ச்சி மற்றும் விலங்குகளுடன் புணர்ச்சி (Beastility) வைத்திருத்தல்.

8. ஆண்மையற்று இருத்தல் அல்லது பெண்ணைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் இருத்தல்.

9. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள குற்றம் ஒன்றுக்காக ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை பெறுதல் போன்ற சூழ்நிலைகளில் மணமுறிவு (விவாகரத்து) கேட்டு மனு செய்யலாம்.

கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக் கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளைப் பராமரித்தல் ஆகியவற்றைக் கணவன் மூன்று ஆண்டுகளுக்குப் புறக்கணித்தால், கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்துக்குத் தேவையான மனவளர்ச்சி இல்லாமல் இருந்தால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவே நீதிமன்றம் இருக்கிறது.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பம் இல்லாமல் நீடிக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சில சூழ்நிலையில், செக்ஸ் குறைபாடு ஆண் அல்லது பெண்ணுக்கு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. இதில் மனநலப் பாதிப்பு முதல் இடத்தைப் பிடிக்கிறது.

அதாவது பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி ஆகியவற்றால் ஏற்படக்கூடிய மன நோயும், செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது.

இவைதவிர, ரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளின் குறைபாடுகளால் உண்டாகும் பாதிப்புகள், தைராய்டு சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புகள், ஆண்-பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் காரணமாகவும் செக்ஸ் குறைபாடு ஏற்படலாம்.

இதனால், செக்ஸ் அனுபவிக்க விரும்பம் இன்றி இருக்கலாம். அடுத்த முக்கியப் பிரச்னை சர்க்கரை நோய். சிறுநீரகக் கோளாறுகள், ரத்த சோகை போன்றவற்றாலும் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற காரணிகளால், செக்ஸ் குறைபாடுகள் ஏற்படும்பட்சத்தில், உடனடியாக தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது, பேசி நிலைமையைப் புரியவைப்பது போன்றவை மிகவும் முக்கியமாகும்.

உடல் நலத்துக்கு முக்கியப் பங்கு! தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்-மனைவி இருவரின் உடல்நலமும், மனநலமும் முக்கியம் என்பதைப் பார்த்தோம்.

அதனால், அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* எந்தச் சந்தர்ப்பத்திலும், பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளைச் சாப்பிடக் கூடாது.

* சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால், முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால், செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.

* உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமாறலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் உறவில் முழுமை பெற முடியும்.

* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால், தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

* கோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால், மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல.

மேலும், ஆழ்ந்த மன பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்குப் பெரும் எதிரியாகும். * தாம்பத்தியத்தில் ஒரேமாதிரி செயலாற்றும் இயந்திரத்தனங்கள் இனிமை தராது. அதேநேரத்தில், அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.

* மனமும் உடலும் ஒத்துழைக்கும்வரை அடிக்கடி உளவுகொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டால், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்து இன்பம் அடையமுடியும்.

* வயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவுகொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.

* கணவன்-மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால், இப்படிப் பேசினால் அநாகரிகம் , அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை.

படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் இதுபோன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ளக் கூடாது.

இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

25-1435212099-5-worstthingswomendoinbed* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம்.

இதை மனைவி புரிந்துகொள்ளாதபட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது.

எனவே, ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும். * அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.

அவர்களது விரும்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸ் இணையத் தளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவுகொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.

* தாம்பத்திய உளவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கு உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண்–பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்கக்கூடியவை.

* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும்முன், தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது.

குளிக்கமுடியாதபட்சத்தில் உடலை நன்றாகத் தேய்த்துக் கழுவி, வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* இருவரும், தூக்கத்துக்குப்போகும்முன் கலவி நேரத்தைத் தேர்வுசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் வந்து வீட்டில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கணவன் நினைத்தால் அவள் தயாராக இருக்கமாட்டாள். ஏனெனில், நீண்டநேரம் கணவனுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோயிருக்கும் அவளால், உடனடியாக கலவிக்குத் தயாராக முடியாமல் போகும்.

* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றைத் தேர்வுசெய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும்போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்லமுடியும்.

கூட்டுக்குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால், இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்குக் கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.

* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல், கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும்போதுதான், இருவரும் ஆசைப்பட்டதைக் கேட்கவும், கொடுக்கவும் முடியும்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று, உச்சகட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதையே இதுவரை சொல்லி, அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.

குறிப்பாக, தாம்பத்தியத்தில் உச்சகட்ட இன்பத்தைத் தொட்ட பெண்கள், ஆண்களிடம் மிகவும் அன்பாகவும், இனிமையுடனும் பழகுவார்கள்.

அவளுக்குக் கிடைத்த சந்தோஷத்தைப் பல மடங்கு அதிகமாக ஆணுக்குத் தருவாள். பெண் சந்தோஷமாக இருந்தால், அந்த சந்தோஷத்தைக் குடும்பத்தில் காட்டுவாள்.

அதனால், அந்த வீடு ஒரு கோயிலாக ஒளிவீசும். அந்த இல்லமே நல்ல இல்லமாக பிறருக்கு வழிகாட்டும். அனைவரையும் சந்தோஷமாக வாழவைக்கும்.